- 4,5,6 திருமுறைகளைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்
- திருனாவுக்கரசர் திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? திரு நேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்
- திருநாவுக்கரசரின் பெற்றோபெயர் யாது? புகழனார், மாதினியார்
- திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? மருள்நீக்கியார்
- பெற்றோரும், தமக்கைக் கணவர் இறந்ததாலும் நாவுக்கரசர் எம்மதத்திற்கு மாறினார்? சமணம்
- சமணத்தில் நாவுக்கரசரின் பெயர்? தருமசேனர்
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவம் மாறக்காரண்மாய் இருந்த நோய்? சூலை நோய்
- நாவுக்கரை சைவத்திற்கு மாற்றிய அவரது சகோதரி பெயர்? திலகவதியார்
- சூலை நீங்க நாவுக்கரசர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்'
- நாவுக்கரசர் முதல் பதிகத்தை எங்குப் பாடினார்? திருவதிகை வீரட்டானம்
- உழவாரப்படை கொண்டு கோவில் தோறும் உழப்பணி செய்தவர்? நாவுக்கரசர்
- நாவுக்கரசர் இறைவனை என்ன மார்கத்தில் வணங்கினார்? தாச மார்க்கம்
- தாசமார்க்கம் என்பது - தன்னை பணியாளாகவும் இறைவனை தலைவனாக எண்ணிப்பாடுவது.
- தாசமார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சரியை
- நாவுக்கரசரின் சிறப்புப்பெயர்கள் - வாகீசர், தாண்டக வேந்தன்
- நாவுக்கரசர் சம்பந்தாரால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?அப்பர்
- நாவுக்கரசர் பாடியதாக நம்பப்படும் பாடல்கள் எத்தனை? 49000
- கிடைக்ககூடிய நாவுக்கரசர் பாடல்கள் - 3099
- திருனாவுக்கரசர் பாடல்கள் எத்தனைப் பதிகங்களில் உள்ளன்? 313
- நாவுக்கரசரின் காலம் - கி. பி. ஏழாம் நூற்றாண்டு
- தேவார மூவரில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்? நாவுக்கரசர்[81 ஆண்டு]
- திருனாவுக்கர்சர் பாம்பு தீண்டி இறந்த யாருடைய மகனை உயிருட எழச்செய்தார்? அப்பூதியடிகள்
- நாவுக்கரசர் எந்த ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலையைக் கண்டார்? திருவையாறு
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரைத் துன்புறுத்திய மன்னன் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
- சங்கம் என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? நாவுக்கரசர்
- ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்? சுந்தரர்
- சுந்தரரின் இயற்பெயர் யாது? ஆரூரர்
- சுந்தரரைத் தத்தெடுத்த குறுநில மன்னர் யார்? நரசிங்க முனையரையர்
- சுந்தரர் எங்கு பிறந்தார்? திருமுனைப்பாடி நாட்டு திருனாவலூர்
- சுந்தரரின் பெற்றோர் யார்? சடையனார், இசைஞானியார்
- சுந்தரர் யாருடைய மகளை மணக்கவிருக்கையில் தடுத்தாளப்பட்டார்? புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
- சுந்தரை இறைவனை எவ்வாறு ஏசினார்? பித்தனே
- இறைவனை வன்மையாகத் திட்டியதால் பெற்ற பெயர்? வன்தொண்டர்
- சுந்தரரின் வேறு பெயர்கள்? வன்தொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருநாவலூரார்
- சுந்தரரின் முதல் பதிகம் எவ்வாறு தொடங்கும்? "பித்தா"
- சுந்தரர் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திருப்பாட்டு
- பெரிய புராணத்திற்கு முதல் நூலாகக் கொள்ளப்படும் சுந்தரரின் நூல்? திருத்தொண்டர் தொகை
- சுந்தரர் எத்தனைப் பாடல்கள் பாடியதாக நம்பப்படுகிறது? 38000
- சுந்தரர் பாடல்களில் இன்று கிடைக்கும் பாடல் எண்ணிக்கை? 1026
- சுந்தரர் பாடல்களில் இடம்பெற்றுள்ள பண்கள்? 18
- சுந்தரரின் காலம்? 7,8 ஆம் நூற்றாண்டு
- சுந்தரரின் மனைவியர்? பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்
- சுந்தரர் வாழ்ந்த காலம் ? 18 ஆண்டுகள்
- சுந்தரர் இரு கண் பார்வை இழந்தவருக்குப் பார்வை வரச்செய்தது எங்கு? காஞ்சி, திருவாரூர்
- சுந்தரருக்காக இரண்டாகப் பிளந்து ஓடிய ஆறு எது? காவிரி
- சுந்தரரின் மார்க்கம் என்ன? சகமார்க்கம் [யோக நெறி அலல்து தோழமை]
- சுந்தரர் முதலை உண்ட சிறுவ்னை மீட்ட ஊர் எது? அவிநாசி
- சுந்தரர் எந்ததளத்தை மறந்ததால் சிவன் 'என்னை மறந்தனையோ?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது? மழப்பாடி
- சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்கையில் உடன் சென்றவர் யார்? சேரமான் பெருமாள் நாயனார்.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
பக்தி இலக்கிய வினா வங்கி 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 எட்டுத்தொகை நூல்களில் கடவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக