இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பக்தி இலக்கிய வினா வங்கி 1

  1.  களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பாண்டிய மன்னன் யார்? கடுங்கோன்
  2. களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பல்லவ மன்னன் யார்?         சிம்ம விஷ்ணு
  3. களப்பிரர் காலத்தைத் தொடர்ந்து வந்த பல்லவர்கள் எத்தனை நூற்றாண்டு ஆதிக்கம் செலுத்தினர்? மூன்று
  4. பல்லவர் காலம் என்பது - கி.பி. 6 முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  5. பல்லவர்களை 'மரபுவழி துலங்கா மரபினர்' என்றவர் யார்? கே.கே,பிள்ளை
  6. பக்தி இலக்கிய காலம் காலம் என்பது - பல்லவர் காலம்
  7. பக்திப்பாவாக மலர்ச்சி அடைந்த பா எது? விருத்தப்பா
  8. சைவ வைணவ சமயங்களை ஆதரித்த மன்னர்கள் யாவர்?          பல்லவர்கள், பாண்டியர்கள்    
  9. சைவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? நாயன்மார்
  10. வைணவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஆழ்வார்கள்
  11. சமண, பௌத்தர்கள் வலியுறுத்துவது?          புலனடக்கம், உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு
  12. ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றியது? பக்தி
  13. சைவ சமய வழிபடு கடவுள் யார்? சிவன்
  14. சிவம் என்பதன் பொருள் என்ன? செம்மை, நன்மை
  15. சிவனுக்கு 78 மாடக்கோவில் கட்டியவர் யார்? சோழன் கோச்செங்கணான்
  16. சிவனுக்குக் கோச்செங்கணான் கோயில் கட்டியதைத் தேவாரத்தில் குறிப்பிட்டவர் யார்? திருநாவுக்கரசர்
  17.  சோழன் கோச்செங்கணான் 70 கோயில் கட்டியதைக் குறிப்பிட்ட வைணவர்? திருமங்கையழ்வார்
  18. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சமணத்திலிருந்து எம்மதத்திற்கு மாறினார்? சைவம்
  19. முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சைவத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
  20. தீவிர சமணராக இருந்து சைவம் தழுவிய சைவ அடியார்? திருநாவுக்கரசர்
  21. சைவ, சமண மக்களிடையே பூசல் ஏற்பட வித்திட்டவர்? மகேந்திரவர்மன்
  22. மகேந்திரவர்மன் எந்த இடத்தில் சமண பள்ளிகளை இடித்து கோயில் கட்டினான்? திருப்பாதிரிப் புலியூர்
  23. சைவசமய பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பன்னிரு திருமுறை
  24. பன்னிரு திருமுறையை எத்தனைப் புலவர்கள் பாடினர்? 27
  25. இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய பாடல்கள் - திருமுறைகள்
  26. பன்னிரு திருமுறைகளைத்   தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி
  27. முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்? திருஞானசம்பந்தர்
  28. ஞானசம்பந்தரின் இயற்பெயர்? ஆளுடைய பிள்ளை
  29. சம்பந்தர் பிறந்த ஊர் எது? சீர்காழி
  30. சம்பந்தரின் பெற்றோர் யாவர்? சிவபாத இருதயர், பகவதியார்
  31. சம்பந்தரின் வேறு பெயர்கள் யாவை? ஆளுடையபிள்ளை, காழி வள்ளல், பரசமய கோளரி
  32. பரசமய கோளரி என்பதன் பொருள்? பர-பிற, கோளரி - சிங்கம் [பிற சமயத்தவருக்குச் சிங்கம் போன்றவர்]
  33. ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்றவர் யார்? ஆதிசங்கரர்
  34. ஆதிசங்கர் ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று குறிப்பிடும் நூல்? சௌந்தரிய லஹரி
  35. மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்? சம்பந்தர்
  36. திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் எது? தோடுடைய செவியன்
  37. சம்பந்தரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றவர் யார்? சுந்தரர்[திருத்தொண்டர் தொகை]
  38. முதல் மூன்று நாயன்மார் இயற்றிய ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேவாரம்
  39. தேவாரத்தின் மற்றொரு பெயர் யாது? திருக்கடைக் காப்பு
  40. சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை என நம்பப்படுகின்றது? 16000
  41. கிடைக்கின்ற ஞான சம்பந்தரின் பாடல்கள்? 4168
  42. தேவாரம் எத்தனைப் பதிகங்களைக் கொண்டமைகின்றது? 383
  43. சம்பந்தர் பாடிய புதுமையான இசை? யாழ்முரிப் பண்
  44. சம்பந்தரின் காலம் எது? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
  45. சம்பந்தர் எத்தனைத் தளங்களுக்குச் சென்று வழிபட்டார்? 22
  46. இறைவனிடமிருந்து  முத்துச் சிவிகை பெற்றவர்? சம்பந்தர்
  47. சம்பந்தருடன் உடன் பயணித்தவர் யார்? திருநீலகண்ட யாழ்ப்பாணர்
  48. சம்பந்தர் எத்தனை பண்களில் பாடினார்? 23
  49. சம்பந்தர் இறையருளால் முத்துச்சிவிகை பெற்ற இடம்? திருவாயிலறத்துறை
  50. சம்பந்தர் இறையருளால் பொற்றாளம் பெற்ற இடம்? திருக்கோலக்கா
  51. சம்பந்தர் இறையருளால் முத்துப்பந்தர் பெற்ற இடம்? பட்டீஸ்வரம்
  52. சம்பந்தர் இறையருளால் பொற்கிழி பெற்ற இடம்?   திருவாவடுதுறை
  53. சம்பந்தர் இறையருளால் படிக்காசு பெற்ற இடம்?  திருவீழிமிழலை
  54. சம்பந்தர் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம்? மூடிய கோவில் கதவுகளைப் பாடித் திறக்கச்செய்தார்
  55. சம்பந்தர் மழவன் மகளில் இளம்பிள்ளைவாதத்தை நீக்கிய இடம் எது? திருப்பாச்சிலாச்சிரமம்
  56. சம்பந்தர் பாம்பு விடத்தை நீக்கியவர் யார்?  திருமருகல்
  57. ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர் யார்? திருவோத்தூர்
  58. சம்பந்தர் சமணரை அணல் வாதம், புனல் வாதத்தில் வென்றவர் யார்?  மதுரை
  59. கூன்பாண்டியனை சமணத்திலிருந்து  சைவத்திற்கு மாற்றியவர் - சம்பந்தர்
  60. கூன்பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற அவர் பெயர் எவ்வாறு ஆனது? நின்றசீர் நெடுமாறன்
  61. சம்பந்தர் தன்னை வாதத்திற்கு அழைத்த யாரது தலையைக் கொய்தார்? புத்தநந்தி
  62. சம்பந்தர் சாம்பலில் இருந்து உயிர்த்தெழச்செய்த பெண் யார்? பூம்பாவை
  63. பூம்பாவைத் திருப்பதிகம் இறுதி அடி? 'காணாதே போதியோ பூம்பாவாய்' 
  64. சம்பந்தர் பதிகங்ளில் இராவணன் கயிலை மலையை எடுத்துத் துன்புற்றதைச் சுட்டும் பாடல் எத்தனையாவது பாடல் ? 8
  65. சம்பந்தர் தம் எல்லாப் பதிகங்களில் மாலும் அயனும் காண இயலாத பெருமையை எந்தப்பாடலில் சுட்டுகிறார்? 9
  66. சம்பந்தர் தம் பதிகங்களில் எத்தனையாவது  சமண, பௌத்த சமயம் தரும் துன்பத்தைப் பாடும் பாடல்? 10
  67. சம்பந்தர் எல்லா பதிக பதினோராவது பாடலில் குறிப்பிடும் கருத்து யாது? தன் பெயரையும், ஊரையும் குறிப்பிடுகிறார்
  68. இறுதிப்பாடல் காப்பாக அமைவதால் திருக்காப்பு எனப்படும் நூல்? தேவாரம்
  69. சம்பந்தர் இறைவனை எம்மார்க்கத்தில் வழிபட்டார்? சத்புத்திர மார்க்கம்
  70. சத்புத்திர மார்க்கம் என்பதன் பொருள் யாது? தந்தை மகன் உறவு
  71.  சத்புத்திர செயலாக்க நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரியை
  72. சம்பந்தர் எந்த வயதில் இறைவனுடன் கலந்தார்? 16
  73. சம்பந்தர் தன் மனைவியுடன் இறைவனுடன் கலந்த நாள்? வைகாசி மூல நாள் [பெருமணநல்லூர் - ஊர்]
  74.  தேவாரத்தில் வரும் சொல்லணிகள் யாவை? யமகம், திரிபு, ஏகபாதம்
  75. துன்பம் நீங்க இறைவனை வேண்டிப் பாடும் சம்பந்தரின் பதிகமாக சைவர்கள் கொள்ளவது? கோளறு பதிகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...