இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜூலை, 2020

நம்பியகப்பொருளில் அறத்தொடு நிற்றல்

1. அறத்தொடு நிற்றலின் வகைகள் ?

    1. முன்னிலை [நேரடியாகக் கூறல்]
    2. முன்னிலைப் புறமொழி [ மறைமுகமாகக் கூறல்]

2. தலைவி அறத்தொடு நிற்கையில் நிகழும் கிளவிகள் எத்தனை?
    ஏழு 

3. தலைவி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
    தோழியிடம் 

4. தோழி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
    செவிலியிடம் 

5. தோழி அறத்தொடு நிற்கும் இடங்கள்?
    1. தலைவியிடம் நிகழும் வேறுபாட்டிற்குக் காரணம் கேட்டால் 
    2. வீரியத்தை விளக்கிய பொது காரணம் கேட்டல் 

6. தோழி அறத்தொடு நிற்கையில் களவிற்குக் காரணமாக கூறுபவை யாவை?
    பூ, புனல், களிறு 

7. செவிலி யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
    நற்றாய் 

8. செவிலி நற்றாயிடம் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
    முன்னிலை மொழியொடு நிற்பாள் 

9. செவிலி நற்றாயிடம்  அறத்தொடு நிற்கக் காரணம்?
    தலைமகளிடம் ஏற்படும் வேறுபாட்டல் செவிலியிடம் வினாவுதலால்.

10. அறத்தொடு நிலை தோன்றக் காரணங்கள்?
    1. தலைமகன் வரும் வழியின் பாதுகாப்பின்மைக்கு அஞ்சுதல் 
    2. தலைவன் வரைவு மறுத்தல் 
    3. பிறர் வரைவு எதிர்ப்படல் 

11. நற்றாய் யாரிடம் அறத்தொடு நிற்பாள்?
    தலைவியின் தந்தை, சகோதரன் 

12. தலைமகள் அறத்தொடு நிற்கும் இடங்கள்?
    தலைவன் ஒருவழித்தனத்தல், 
    வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்,
    செவிலி தலைமகனைக் குறியிடத்தில் காண்பது,
    இற்செறித்தல்,
    தலைவிக்கு வருத்தம் மிகுதல்  போன்ற சூழலில் தோழி வினவிய வழியும், 
    வினவா வழியும் தலைமகள் பாங்கிக்கு அறத்தொடு நிற்பாள்.

13. தோழி செவிலியிடம் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
    இருவகையில் [முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி]

14.செவிலி யாருக்கு கவலையின்று [விளக்கமாக] அறத்தொடு நிற்பாள்? 
    நற்றாய் 

15. நற்றாய் எவ்வகையில் அறத்தொடு நிற்பாள்?
    முன்னிலைப் புறமொழியால் [நேரடியாகக் கூறாமல் குறிப்பால்]                                 உணர்த்துவாள். 

16. தலைமகளிடம் ஏற்படும் மாற்றத்தால் வினவப்படுவோர் யாவர்? 
    தோழி தலைவியை  வினாவுவாள் 
    செவிலி தோழியை  வினவுவாள் 
    செவிலியை நற்றாய்  வினாவுவாள் 
    சில நேரங்களில் தோழியை நற்றாய் வினவுதலும் உண்டு. 

17. உடன்போக்கில் அறத்தொடு நிற்போர் யாவர்?
        தோழி. செவிலி, பயந்த தாய்  

களவியல் - 3 வினாவங்கி

1. தோழி என்பவள் யார்?

    தோழி செவிலியின் மகள்.

2. தோழி எதனால் சிறப்படைவாள்?
    
    சூழ்தல், உசாத்துணை  இவற்றால் சிறப்படைவாள் [பொலிவடைவாள்].                      சூழ்தல்  என்பது களவில் தலைவிக்காக தானே அனைத்தையும் சூழ்ந்து                     [சிந்தித்து] செயல்படுவது. உசாத்துணை என்பது தலைவி எடுக்கும்                             முயற்சிகளை ஏற்று அவளுக்கு இடைவிடா துணையாக இருப்பது.

3. களவில்  தோழிக் கூற்று நிகழும் இடங்கள்?

    நாற்றம் முதல் வன்புறை வரை உள்ள [நாலெட்டு] 32 இடங்களில்                                    தோழிக்கூற்று நிகழும்.

4. மதியுடம்படுத்தல் என்பது என்ன? 

    தலைவன், தலைவியின் மதியுடன் தன் மதியை உடன்படுத்தல். அதாவது 
    அவர்களின் களவை ஏற்று உடன்படல்.

5. மதியுடம்படுதலின்  வகைகள்? 3

    குறையுற உணர்தல் - தலைவன் தன்  குறையை தோழியிடம்  கூறல்.

    முன்னுரை உணர்தல் - தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களால்  அறிதல்.

    இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் 

6. முன்னுற உணர்வது எப்படி?

    தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களான  நாற்றம், தோற்றம், ஒழுக்கம் 
    இவற்றால் தோழி தலைவியின் களவொழுக்கத்திக் குறிப்பாய் உணர்வாள்.

7. நாற்றம் என்பது என்ன?

    தலைவனைத் தனியிடத்தில் சந்தித்ததால், தலைவன் தந்த தழையாடை 
    மலர் சூடியமையால் ஏற்படும் மாறுபட்ட நாற்றம்.

8. தோற்றம் என்பது?

    களவு காலத்து உண்ணாமை முதலியவற்றால் உடல் மெலிதல், பசலை                 பாய்தல்  போன்ற மாற்றங்கள்.

9. ஒழுக்கம் என்பது?

    தலைவி தோழி முதலானோரைத் தவிர்த்து தனியிடத்து செல்லுதல். தன் 
    செயல்களை மறைத்தல்.

10. மதியுடம்படுதலின் சிறப்பு?

    மதியுடம்படுதல் அல்லாமல் தோழி களவில் எவ்வித முயற்சியும்                                  எடுக்கமாட்டாள்.     

11. செவிலிக்கூற்றுக்கான இடங்கள்?

    களவு அலராதல் தொடங்கி இருபாற் குடிபொருள் இயல்பு வரையுள்ள  13

12. களவு அலராதல்  என்பது.

    அலர் என்பது அலர்தல். களவு குறித்த செய்தி ஊரார் மத்தியில்                                     பேசப்படுதல்.

13.  கிழவன் அறியா அறிவினள் யார்?

        தலைவி [தலைவன் அறியா அறிவினை உடைய தலைவி                         1                    முக்காலத்தையும்   ஆராயும் மயக்கமற்ற அறிவினை உடையவள் 
        தலைவி. ஆனாலும் தலைவனால் மயக்கமுறுவது கண்டு பிறர் ஐயுறுவர்.

14. ஐயக்கிளவி யாருக்கு உரியது?

    செவிலி, நற்றாய்க்கு உரியது.  

15. செவிலி தாயெனப்படக் காரணம்?

    'ஆய்பெரும் சிறப்பின் அருமறைக் கிளத்தல்'  - சிறப்புடைய . அறிதற்கு 
    அறிய மறைப்பொருள் அனைத்தையும் கூறும் கடமையுடையவள். 

16. தலைவனிடம் களவில் நிகழாதது எது? 

    தலைவன் செல்லும் வழியின் [ஆறின்] அருமையும், அழிவும், அச்சமும் 
    தலைவனிடம் நிகழாது. 

17. தலைவியின் களவொழுக்கத்தை முன்னதின் [குறிப்பால்] உணர்வோர் 
        யாவர்?
    
    தந்தையும், தன்னையும்[சகோதரனும்] 

18. தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும்?

    களவினை அறியும் தாய் செவிலியைப் போல் அதனை ஏற்பாள்.  [செவிலி             களவை வெகுளாமல், கோபமடையாமல் ஏற்பாள்]

19. பிறருக்குக் களவினை வெளிப்படுத்துபவை எவை?

    அலர், அம்பல் 

20. அலர், அம்பல் வெளிவரக் காரணம் யார்?

    தலைவன்

21. வரைதல் வகைகள் யாவை? 

    வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் 

22. வெளிப்பட வரைதல் என்பது?

    களவு வெளிப்பட்ட பின்னர் வரைவது.

23. வெளிப்படாமை வரைதல் என்பது?

    களவு வெளிப்படும் முன்னர் வரைவது.

24. வரைவு என்பது? - திருமணம் 

25. களவு வெளிப்பட்டால் எதனோடு ஒக்கும்? - கற்பு 

26. களவில் நிகழும் பிரிவு?

    பொருள்வயிற் பிரிதல் 

27. களவில் வாரா பிரிவு?

    ஓதல், பகை,  தூது     

ஞாயிறு, 12 ஜூலை, 2020

நம்பியகப்பொருளில் பிரிவு

களவுப் பிரிவு 

            1. ஒருவழித் தனத்தல் 
                    
                    களவு காலத்தில் தலைவியின் ஊரிலிருந்து தன் ஊருக்குத் தலைவன்                         பிரிந்து  செல்வது. இதற்குக் கால வரையறைக் கூறப்படவில்லை.

            2. வரைவு இடைவைத்து பொருள் வயிற் பிரிதல் 

                    திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திருமணத்திற்காக பொருள்                      தேடிப்  பிரிந்து செல்வது. இது நாட்டிடை வைத்தும், காட்டிடை                                     வைத்தும் நிகழும். இப்பிரிவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீளாது.


கற்புப் பிரிவு 

           1. பரத்தையற் பிரிவு 
           2. ஓதற் பிரிவு 
           3. காவற் பிரிவு 
           4.தூதிற் பிரிவு 
           5. துணைவயிற் பிரிவு 
           6. நிதியிற்கிகத்தல் [பொருள்வயிற் பிரிவு]


பரத்தையர் பிரிவு 

  •  அயன் மனைப் பிரிவு  - காமக்கிழத்தி பின் தலைவன் செல்வது.
  • ஆயர்சேரி அகற்சி [அகலுதல்] - பெதும்பைப் பருவக் கிழத்தி, காதற்பரத்தை, விழா பொருட்டு  நிகழும் 
  • புறநகர் போக்கு  [போதல்]  - புதிய பரத்தையை அழைத்துக்கொண்டு தேரில் சோலையாடல்,  புனலாடல் பொருட்டு புறநகருக்குச் செல்லுதல்             
ஓதற் பிரிவு 

        வேதக்கல்வி - அந்தணர், அரசர், வைசியர்க்கு உரியது.

        பிற  -  அனைவருக்கும் உரியது.

        படைக்கலம், யானை, தேர், குதிரை முதலியாவைப் பற்றி கற்கும் கல்வி                 அந்தணர் ஒழிந்த மூவருக்கும் உரியது. 


காவற் பிரிவு

        1. அறப்புறங்காவல் [இது அனைவருக்கும் ஆனது]
        2. நாடு காவல் [இது அரசுக்கு உரியது]

தூதிற் பிரிவு 

        அரசன், அந்தணருக்கு உரியது. மன்னனால் சிறப்புப் பெயர் [பட்டம்]                         அளிக்கப்பெற்ற வைசியரும், வேளாளரும் தூதிற் பிரிவிற்கு உரியவர்கள்.

துணைவயிற் பிரிவு 

        அரசனுக்குத் துணையாயிருத்தல். இது அந்தணர் ஒழிந்த அனைவருக்கும்             உரியது. 

பிரிந்து செல்லும் வழி 

        1. காலிற் பிரிவு 
        2. கலத்திற் பிரிவு 
        3. ஊர்தியிற் பிரிதல் 

பிரிவிற்கான கால வரையறை 

         பரத்தையற் பிரிவு          -    தலைவி நீராடியபின் 12 நாட்கள் பிரியக்கூடாது.  
         ஓதற் பிரிவு                         -    3 ஆண்டு 
         காவற் பிரிவு                    
         தூதிற் பிரிவு                     -    1 ஆண்டு 
         துணைவயிற் பிரிவு      -    1 ஆண்டு     
         பொருள்வயிற் பிரிவு    -    1 ஆண்டு 


பிற செய்திகள்:

            அனைத்து திணையின் இழிந்தவர்களுக்கு ஓதல், நாடு காவல், தூது 
            தவிர்த்த பிற பிரிவுகள் உனது [பரத்தையர் பிரிவு, அறப்புறங்காவல்,                         துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு]

            பரத்தையிற் பிரிவும், பொருள்வயிற் பிரிவும் நால்வருக்கும் உரியது.

            பிரியும் தலைவன் தலைவியிடம் சொல்லாமலும் பிரிவது உண்டு.                             அப்படிப் பிரிகையில் பாங்கியிடம் சொல்லிப் பிரிவான். மேலும், தன்                      பிரிவைத் தலைவிக்குக்   குறிப்பால்  உணர்த்துவான்.   

            ஓதற் பிரிவு முதலாக வரும் 5 பிரிவுகளில் தலைவன் செலவழுங்குவதும்                 உண்டு. 

             ஓதற்பிரிவு காலத்தில் தலைவன் தலைவியை நினைத்துப் புலம்பான்.

             தூதிற் பிரிவு, துணைவயிற் பிரிவில் காலம்    குறிப்பிட்டாக                                         காலத்தைவிட   நீண்டால் தலைவன்   பாசறையில் தலைவியை                                 நினைத்துப் புலம்புதல்  உண்டு. 





   

திங்கள், 6 ஜூலை, 2020

இடைச்சொற்களும் வரும் இடங்களும்

 எண்  இடைச்சொல்  வருமிடம் 
 1ஏ - ஏகாரம்  பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், 
இசைநிறை                                                                                                 
 2.ஓ - ஓகாரம்  ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை,
கழிவு, அசைநிலை, பிரிநிலை  
3. என, என்று  வினை, பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு  
4. உம்  எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம்,  முற்று,என், தெரிநிலை,  ஆக்கம் 
 5. தில்   விழைவு,காலம்,  ஒழியசை
6. மன்  அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி   
7.  மற்று வினை, வினை  மாற்று, அசைநிலை, பிறிது என்னும்   பொருள்  
 8.கொல்  ஐயம், அசைநிலை  
9. ஓடு, தெய்ய  இசைநிறை  
10. அந்தில், ஆங்கு   அசைநிலை, இடப்பொருள்  
11. அம்ம  உரையசை, ஏவல்   
12. மா  வியங்கோள் அசை  

வழு வழுவமைதி வினா வங்கி

1. வழு எத்தனை வகைப்படும் ? 7
2. உமுடிவைப் பெறும் யர்திணைப் பெயரைச் சார்ந்து வரும் அஃறிணைப் பெயர்கள் எத்தனை வகைப்படும் ? 6
3. உயர்தினைப் பெயர்ச் சார்ந்து வரும் அஃறிணை பெயர் எத்தகு முடிவைப் பெறும் ? உயர்திணை 
4. திணை மயங்கக் காரணங்கள் யாவை ?
5. பால் வழுவமைத்திக்கான காரணிகள் எத்தனை ? 5 {உவப்பு ,உயர்வு ,சிறப்பு ,சினம் ,எள்ளல் }
6. தன்மை முன்னிலையில் ஒருமைப் பன்மை விரவி வருமா ? ஆம். விரவி வருவது வழுவமைதி 
7. காலங்கள் எத்தனை ? 3 {இறப்பு,எதிர்,நிகழ் }
8. முக்காலத்திற்கும் உரியவை எக்கால முடிவைப் பெறும் ? நிகழ்கால 
9. கால வழுவமதிக்கான காரணங்கள் எத்தனை? 4           {விரைவு,மிகுதி,தெளிவு,இயல்பு}
10. சினையும் முதலும் விரவுதல் எங்கு வழுவாகும்? வினா,விடை 
11. வினா மற்றும் விடையில் முதலும் சினையும் விரவுதல்? வழு  
12. திணை,பால் மயக்கமுள்ள இடத்தில் எவ்வாறு வினா எழுப்புதல் வேண்டும்? சிறப்புச் சொல்லாய் 
13. தான் அறிந்ததை பிறர் அறிந்துள்ளனரா என அறியக் கேட்கும் வினா? அறிவினா 
14. தாம் அறியாததை அறிந்து கொள்ளுதல் பொருட்டு கேட்கும் வினா?அறியா வினா 
15. மனதில் ஐயம் தோன்றுகையில் எழும் வினா ? ஐயவினா 
16. ஒரு பொருளைப் பெறுவதன் பொருட்டு எழுப்பும் வினா ? கொளல்;வினா 
17. ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு எழுப்பும் வினா ? கொடைவினை 
18. பிறரை இதைச் செய்ய என ஏவுதல் பொருட்டு எழுப்பும் வினா ?ஏவல்வினா 
19. வினா வகைகள் எத்தனை ? 6
20. விடை வகைகள் எத்தனை ? 8
21. ஒன்றைச் சுட்டிக்காட்டி அளிக்கும் விடை ? சுட்டுவிடை 
22. மறைமுகமாக தரப்படும் விடை ? மறைவிடை 
23. நேரடியாக தரப்படும் விடை ? நேர்விடை 
24. ஏவுதல் பொருட்டு கூறப்படும் விடை ? ஏவல்விடை 
25. ஒரு வினாவிற்கு வினாவையே விடையாய் அளித்தல் ? வினாவெதிர்விடை
26. வினாவிற்கு நேரெடியாக விடை கூறாமல் தனக்கு நிகழ்த்ததைக் கூறி விடையை உணர்த்துவது? உற்றது உரைத்தல் விடை 
27. உறுவது உரைத்தல் விடை ? கேட்கப்படும் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் இது நிகழ்ந்தால் தனக்கு இன்னது நேரும் என மறைமுகமாக விடை காண்பது 
28. ஒரு வினாவிற்கு வினா கேட்போரை ஏவுதல் பொருட்டு விடையளிப்பது ? ஏவல்விடை 
29. செவ்வன் இறை என்றால் என்ன? நேரடியாக விடையளிப்பது 
30. செவ்வன் விடைகள் எத்தனை? 3
31. செவ்வன் விடைகள் யாவை ? {சுட்டு,மறை,நேர்விடை}
32. விடை என்பதைக் குறிக்கும் மற்றறொரு சொல் ? இறை 
33. மரபு என்பது யாது ? ஒரு சொல்லை எப்படிச் சொல்ல வேண்டும் என உயர்ந்தேதோர்  கூறினாரோ அதை அப்படியே சொல்வது 
34. ஒரு பெயரில் பல பொருளைக் குறிக்கையில் அதனை முறையாக அடையாளப்படுத்த உதவுபவை? அடைமொழி

சில நிரல்கள் 

1.வழு வகையின் நிரல் 
 திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு       

2. தினை வழுவமைதிக்கான காரணம் 
சிறப்பு, மிகுதி, இழிவு 

3. பால் வழுவமைதிக்கான காரணம் 
உவப்பு, உயர்வு, சிறப்பு, சேறல் [சினம்], இழிவு [எள்ளல்] 

4. கால வகைகள் 
இறப்பு, எதிர்வு , நிகழ்வு

5. கால வழுவமைதிக்கான காரணங்கள் 
விரைவு, மிகுதி, தெளிவு, இயல்பு 

6. வினா வகைகள் 
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா 

7. விடை வகைகள் 
சுட்டுவிடை, மறை விடை,  நேர் விடை, ஏவல் விடை. வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல், உறுவது கூறல்,  

சனி, 4 ஜூலை, 2020

வினை முற்று விகுதிகளும், எச்ச வாய்ப்பாடுகளும்

வினைமுற்று விகுதிகள் 

படர்க்கை - ஆண்பால்             -       அன், ஆன் 

படர்க்கை - பெண்பால்             -       அல் , ஆல் 

படர்க்கை - பலர் பால்                     -       அர் , ஆர் , ப, மார் 

படர்க்கை - ஒன்றன்பால்              -      கு, டு , து, று  

படர்க்கை - பலவின்பால்         -       அ, ஆ  [ஆ- எதிர்மறை ]

ஒருமை - தன்மை.                             -    கு, டு , து, று , அ ல், அன் 

பன்மை - தன்மை                             -    அம், ஆம்,  எம், ஏம், உம்,   கு, டு , து, று 

ஒருமை - முன்னிலை                       - ஐ, ஆய், இ, ஈ, ஏ

பன்மை - முன்னிலை                       -     இர், ஈ 

வியங்கோள்                                            - க, ய, ர 

வினைஎச்சம், பெயரெச்ச வாய்ப்பாட்டு 

பெயரெச்ச வாய்ப்பாடு:
 

இறந்த காலம்                    -                    செய்த 

நிகழ்காலம்                        -                     செய்கின்ற 

எதிர்காலம்                                                 செய்யும் 


வினையெச்ச வாய்ப்பாடு 

இறந்தகாலம்                                         செய்து, செய்பு, செய்யா, செயபா, செய்தன, 

நிகழ் காலம்                             -            செய 

எதிர்காலம்                                 -            செய, செயின்,  செய்யிய, வான், பாண்,                                                                                 பாக்கு                
 



வெள்ளி, 3 ஜூலை, 2020

சொல்லிலக்கணம் - வினாவங்கி

  1. மொழியின் வகைகள் யாவ? ஒருமொழி, தொடர் மொழி, பொதுமொழி
  2. பொதுமொழிக்குச் சான்று தருக? தாமரை
  3. வழக்கு எத்தனை வகைபடும்? 3
  4. வழக்குகள் யாவை? இயல்பு, தகுதி, செய்யுள் வழக்கு
  5. இயல்பு வழக்கு வகைகள் எவை? இலக்கணமுடையது, இலக்கணப்போலி. மரூஉ
  6. இலக்கணப்போலிக்கு சான்றுதருக. முன்றில், சதை
  7. சபையில் கூறக்கூடாதவற்றை வேறு சொல்லால் குறிப்பது? இடக்கரடக்கல்
  8. பொற்கொல்லர் தங்கத்தைப் பறி என்று அழைப்பது? குழூஉக்குறி
  9. தகுதி வழக்குகள் யாவை? இடக்கர் அடக்கல், மங்கலம், குழூஉக்குறி
  10. விளக்கை அணைப்பது- மங்கல வழக்கில் எவ்வாறு குறிப்பிடப்படும்?  விளக்கைக்குளிரவைப்பது
  11. மூவிடம் யாவை? தன்மை, முன்னிலை, படர்க்கை
  12. வாரணம்- இது உணார்த்தும் பொருட்கள் யாவை? யானை, சேவல்
  13. பண்டைத்தமிழ் நாட்டின் நிலங்கள் எத்தனை? 12
  14. தற்சமம் என்பது? தமிழ் எழுத்துக்களால் ஆன வடசொல்
  15. வட எழுத்துக்களால் எழுதப்படும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்? தற்பவம்
  16. வட மொழியின் உயிர் எழுத்துக்கள் எத்தனை? 16
  17. வடமொழியின் மெய் எழுத்துக்கள் எத்தனை? 37
  18. தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாய் உள்ள எழுத்துக்கள்? 25
  19. காலம்காட்டும் பெயர்? வினையாலனையும் பெயர்
  20. அறுவகைப் பெயர்கள்? பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்
  21. பொதுப்பெயர்கள் எத்தனை? 12
  22. ஒருமைப் பொதுப்பெயர் யாவை? தான், யான், நான், நீ
  23. பன்மைப்பொதுப்பெயர் எத்தனை? 8
  24. உயர்திணை ஆண்பால் பெயர் ஈறு- அன்
  25. உயர்திணைப் பெண்பால் பெயர் ஈறு- இ, அள்
  26. உயர்திணை பலர்பால் பெயர் ஈறு- ர், அர், ஆர், மார்
  27. ஒன்றன்பால் பெயர் ஈறு- து
  28. பலவின்பால் பெயர் ஈறு -வை, ன
  29. ஆகுபெயர் வகைகள் எத்தனை? 16
  30. அளவை ஆகுபெயர்கள் எத்தனை? 4
  31. பால் பகா பெயர் என்பது -ஆண் பாலா?பெண் பாலா?எனப் பகுக்க முடியாது 
  32. தன்மைப் பெயர்கள் ? யான்,யாம்,நான்,நாம் 
  33. முன்னிலைப் பெயர்கள் ?எல்லீர்,நீயீர்,நீவீர்,நீர்,நீ 
  34. ஒருமை தன்மைப் பெயர்கள்?தான்,யான் 
  35. ஒருமை முன்னிலை பெயர் ?நீ 
  36. பன்மை தன்மைப் பெயர்?யாம்,நாம் 
  37. பன்மை தன்மைப் பெயர்கள்?எல்லீர்,நீயிர்,நீர்,நீவீர் 
  38. முதற் பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆவது எது ?பொருளாகு பெயர் 
  39. ஒரு இடத்தின் பெயர் தூங்கு வாழும் மக்களுக்கு ஆகி வருவது?இடவாகு பெயர் 
  40. காலத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது ?காலவாகு பெயர் 
  41. ஒரு உறுப்பின்{சினையின்}பெயர் முழு பொருளுக்கும் ஆகி வருவது?சினையாகு பெயர் 
  42. தொழிலின் பெயர் அதனோடு தொடர்புடையபொருளுக்கு ஆகி வருவது ?தொழிலாகு பெயர் 
  43. அளவையின் பெயர் அதில் அளக்கப்படும் பொருளுக்கு ஆகி வருவது ?அளவையாகு பெயர் 
  44. அளவையால் வரும் ஆகுபெயர்கள்? 4{எண்ணல் அளவை,எடுத்தல் அளவை,முகத்தல் அளவை,நீட்டல் அளவை}
  45. சொல்லாகு பெயர் என்றால் என்ன?சொல்லின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது.
  46. தானியாகு பெயர் என்றால் என்ன?இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆகி வருவது.
  47. கருவியாகு பெயர் என்றால் என்ன?கருவியின் பெயர் அந்த கருவியால் நிகழ்ந்த செயலுக்கு ஆகி வருவது 
  48. காரியவாகு பெயர் என்றால் என்ன?காரியத்தின் பெயர் அதனைச் செய்த கருவிக்கு ஆகி வருவது                  
  49. கருத்தாவாகு பெயர்?செய்தவர் பெயர் அவரால் செய்யப்பட்ட செயலுக்கு ஆகி வருவது 
  50. உவமையாகு பெயர்?உவமையின் பெயர் உவமித்த பொருளுக்கு ஆகி வருவது 
  51. வேற்றுமை என்றால் என்ன?ஒரு பெயர்ச் சொல் பயனிலை கொண்டு முடியும் பொழுது பொருளுக்கு ஏற்ப அந்த தொடரின் அமைப்பில் ஏற்படும் வேற்றுமை ஆகும் 
  52. வேற்றுமை எத்தனை? 8
  53. உருபு ஏற்கும் வேற்றுமைகளின் எண்ணிக்கை- 6
  54. தனி உருபு இல்லா வேற்றுமைகள்- 2
  55. முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படும்?எழுவாய் வேற்றுமை  
  56. எழுவாய் வேற்றுமையின் வேறு பெயர்கள்? பெயர் வேற்றுமை, கருத்தா வேற்றுமை 
  57. முதல் வேற்றுமை ஏற்கும் பயனிலைகள்?3{வினா பயனிலை,பெயர் பயனிலை, வினைப் பயனிலை }
  58. இரெண்டாம் வேற்றுமை உருபு? ஐ 
  59.  செய்யப்படு பொருளை ஏற்று வரும் வேற்றுமை ? இரண்டாம் வேற்றுமை 
  60. இரண்டாம் வேற்றுமை எந்தெந்த பொருளில் வரும்?ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீத்தல்,ஒத்தல்,உடைமை 
  61. மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?ஆல்,ஆன்,ஒரு,ஓடு 
  62. மூன்றாம் வேற்றுமை எந்தெந்த பொருளில் வரும்?கருவி,கருத்தா,உடன் நிகழ்ச்சி 
  63. நான்காம் வேற்றுமை உருபு?கு 
  64. நான்காம் வேற்றுமை எந்தெந்தப் பொருளில் இடம்பெறும்?கொடை,பகை,நட்பு{நேர்ச்சி}தகவு,அதுவாதல்,பொருட்டு,முறை 
  65. நான்காம் வேற்றுமைக்கான வேறு உருபுகள்?ஆக,பொருட்டு,நிமித்தம் 
  66. ஐந்தாம் வேற்றுமை உருபுகள்?இல்,இன் 
  67. நான்காம் வேற்றுமைக்கான சொல்லுருபுகள்?பொருட்டு,நிமித்தம் 
  68. ஐந்தாம் வேற்றுமைக்கான சொல்லுருபுகள்?நின்று,இருந்து 
  69. ஐந்தாம் வேற்றுமை ஏந்தெந்த பொருளில் வரும்?நீங்கள்,ஒப்பு,எல்லை,ஏது,பொருள் 
  70. ஆறாம் வேற்றுமை எப்பொருளில் வரும்?கிழமை 
  71. ஒருமைக்கான வேற்றுமை உருபு ?அது,ஆது 
  72. பன்மைக்கான ஆறாம் வேற்றுமை உருபு ? அ 
  73. ஆறாம் வேற்றுமையில் கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும் ? 2 {தற்கிழமை,பிறிதின் கிழமை}
  74. ஆறாம் வேற்றுமையில் தற்கிழமைகள்-5 வகைப்படும் {பண்பு ,உறுப்பு ,ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம் ,திரிபின் ஆக்கம் }
  75. ஆறாம் வேற்றுமையில் பிறதின் கிழமை வகைகள் -3{பொருள்,இடம், காலம்}
  76. ஏழாம் வேற்றுமை எந்தப் பொருளில் வரும் ? இடப்பொருள் 
  77. ஏழாம் வேற்றுமை உருபுகள் யாவை ? கண் ,இல் 
  78. ஏழாம் வேற்றுமைக்கான பிற உருபுகள்? கால் ,கடை ,இடை ,தலை ,வாய், திசை, முன் ,சார், உடலின் முன்,வலம் ,இடம் ,மேல் ,கீழ் ,புடை ,முதல் ,பின் ,பாடு ,உழை ,விழி ,ஊழி ,உளி ,உள் ,அகம் ,புறம் 
  79. எட்டாம் வேற்றுமை -விளி வேற்றுமை
  80. விளி என்பதன் பொருள் -அழைத்தல் {விளித்தல் }
  81. படர்க்கைப் பொருளை முன்னிலைப்படுத்தி அழைத்தல் பொருளை கொண்ட வேற்றுமை ? எட்டாம் வேற்றுமை 
  82. எட்டாம் வேற்றுமையின் உருபு? ஏதுமில்லை 
  83. பெயர்கள் விளி ஏற்கையில் பெயரில் நிகழும் மாற்றங்கள் ? 5 {இயல்பாதல் ,ஈறு குன்றுதல் ,ஈறு மிகுதல் ,ஈறு திரிதல் ,ஈற்றயல் திரிதல் }
  84. எல்லா இடத்திலும் விளியேற்கும் சொல் ஈறுகள்{இறுதி }எத்தனை?19
  85.  மொழி இறுதியில் வரும் எழுத்துக்களில் விளி ஏலாஎழுத்துக்கள்?
  86. அளபெடையில் மட்டுமே விளி ஏற்கும் எழுத்துக்கள் யாவை ? எ,ஒ,ஒள,ந 
  87. ஐகார இறுதி பெயர் விளி ஏற்கையில் எவ்வாறு திரியும்?ஆ,ஆய் {அன்னாய் ,அம்மா - அம்மை என்பது அம்மாவாக திரியும்}
  88. ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை எந்த சொல்லைக் கொண்டு நிறைவுபெறும் ? பெயர் 
  89.  ஐந்தாம் ஆறாம் தவிர்த்த பிற வேற்றுமைகளில் நிறைவு சொல்லாய் வருபவை ? வினை      

வியாழன், 2 ஜூலை, 2020

தமிழில் உயர்திணை முப்பால் பெயர்களின் பட்டியல்


 பெயர் ஆண்பால்   பெண்பால்  பலர்பால் 
 பொருட்பெயர்  ஒருவன்,தமன், நமன்.
நுமன், சங்கத்தான் 
 தமள்,   நமள், ஒருத்தி, அவையத்தாள்   ஒருவர், தமர், சங்கத்தார்,
அவையத்தார் 
        
 இடப்பெயர்  வெற்பன், ஊரன், மலைநாட்டரசன்  குறத்தி, உழத்தி, இடைச்சி குறவர், ஆயர், நன்னாட்டார் 
காலப்பெயர்  வேனிலான், கார்த்திகையான், ஆதிரையான்  மூவாறாண்டினாள், ஓணத்தியாள் ,   ரேவதி   வெனிலார், பரணியார். ஓணத்தார் 
 சினைப்பெயர்  தின்தோளினான், கருங்குஞ்சியான், தின்மார்பன்   சிற்றிடையாள், குழைக்காதாள், செங்கண்ணாள்  நெடுமார்பர், கருங்குழலார், கூர்விழியர் 
 பண்புப்பெயர்  பெரியன், சிறியன், அறிவன், முடவன், கரியன்  சிறியள்,  புலமையாள், கறுப்பி, தலைவி  புலவர், மதியர், கரியர், சோழர் 
 தொழிற் பெயர்  ஈவான், ஓதுவான், தூதுரைப்பான்  ஓதுவாள், ஈவாள்  கொல்லர், தச்சர் 
    
 

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...