இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூலை, 2020

நம்பியகப்பொருளில் பிரிவு

களவுப் பிரிவு 

            1. ஒருவழித் தனத்தல் 
                    
                    களவு காலத்தில் தலைவியின் ஊரிலிருந்து தன் ஊருக்குத் தலைவன்                         பிரிந்து  செல்வது. இதற்குக் கால வரையறைக் கூறப்படவில்லை.

            2. வரைவு இடைவைத்து பொருள் வயிற் பிரிதல் 

                    திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திருமணத்திற்காக பொருள்                      தேடிப்  பிரிந்து செல்வது. இது நாட்டிடை வைத்தும், காட்டிடை                                     வைத்தும் நிகழும். இப்பிரிவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீளாது.


கற்புப் பிரிவு 

           1. பரத்தையற் பிரிவு 
           2. ஓதற் பிரிவு 
           3. காவற் பிரிவு 
           4.தூதிற் பிரிவு 
           5. துணைவயிற் பிரிவு 
           6. நிதியிற்கிகத்தல் [பொருள்வயிற் பிரிவு]


பரத்தையர் பிரிவு 

  •  அயன் மனைப் பிரிவு  - காமக்கிழத்தி பின் தலைவன் செல்வது.
  • ஆயர்சேரி அகற்சி [அகலுதல்] - பெதும்பைப் பருவக் கிழத்தி, காதற்பரத்தை, விழா பொருட்டு  நிகழும் 
  • புறநகர் போக்கு  [போதல்]  - புதிய பரத்தையை அழைத்துக்கொண்டு தேரில் சோலையாடல்,  புனலாடல் பொருட்டு புறநகருக்குச் செல்லுதல்             
ஓதற் பிரிவு 

        வேதக்கல்வி - அந்தணர், அரசர், வைசியர்க்கு உரியது.

        பிற  -  அனைவருக்கும் உரியது.

        படைக்கலம், யானை, தேர், குதிரை முதலியாவைப் பற்றி கற்கும் கல்வி                 அந்தணர் ஒழிந்த மூவருக்கும் உரியது. 


காவற் பிரிவு

        1. அறப்புறங்காவல் [இது அனைவருக்கும் ஆனது]
        2. நாடு காவல் [இது அரசுக்கு உரியது]

தூதிற் பிரிவு 

        அரசன், அந்தணருக்கு உரியது. மன்னனால் சிறப்புப் பெயர் [பட்டம்]                         அளிக்கப்பெற்ற வைசியரும், வேளாளரும் தூதிற் பிரிவிற்கு உரியவர்கள்.

துணைவயிற் பிரிவு 

        அரசனுக்குத் துணையாயிருத்தல். இது அந்தணர் ஒழிந்த அனைவருக்கும்             உரியது. 

பிரிந்து செல்லும் வழி 

        1. காலிற் பிரிவு 
        2. கலத்திற் பிரிவு 
        3. ஊர்தியிற் பிரிதல் 

பிரிவிற்கான கால வரையறை 

         பரத்தையற் பிரிவு          -    தலைவி நீராடியபின் 12 நாட்கள் பிரியக்கூடாது.  
         ஓதற் பிரிவு                         -    3 ஆண்டு 
         காவற் பிரிவு                    
         தூதிற் பிரிவு                     -    1 ஆண்டு 
         துணைவயிற் பிரிவு      -    1 ஆண்டு     
         பொருள்வயிற் பிரிவு    -    1 ஆண்டு 


பிற செய்திகள்:

            அனைத்து திணையின் இழிந்தவர்களுக்கு ஓதல், நாடு காவல், தூது 
            தவிர்த்த பிற பிரிவுகள் உனது [பரத்தையர் பிரிவு, அறப்புறங்காவல்,                         துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு]

            பரத்தையிற் பிரிவும், பொருள்வயிற் பிரிவும் நால்வருக்கும் உரியது.

            பிரியும் தலைவன் தலைவியிடம் சொல்லாமலும் பிரிவது உண்டு.                             அப்படிப் பிரிகையில் பாங்கியிடம் சொல்லிப் பிரிவான். மேலும், தன்                      பிரிவைத் தலைவிக்குக்   குறிப்பால்  உணர்த்துவான்.   

            ஓதற் பிரிவு முதலாக வரும் 5 பிரிவுகளில் தலைவன் செலவழுங்குவதும்                 உண்டு. 

             ஓதற்பிரிவு காலத்தில் தலைவன் தலைவியை நினைத்துப் புலம்பான்.

             தூதிற் பிரிவு, துணைவயிற் பிரிவில் காலம்    குறிப்பிட்டாக                                         காலத்தைவிட   நீண்டால் தலைவன்   பாசறையில் தலைவியை                                 நினைத்துப் புலம்புதல்  உண்டு. 





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...