இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 25 மே, 2020
ஞாயிறு, 24 மே, 2020
சனி, 23 மே, 2020
வெள்ளி, 22 மே, 2020
வியாழன், 21 மே, 2020
திங்கள், 18 மே, 2020
தொல்காப்பிய நூல் அமைப்பு
தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. இதன் காலம் இடைச்சங்க காலம் எனக்குறிப்பிடப்படுகின்றது. பல அறிஞர்கள் தொலகாப்பிய காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனவும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். தொல்காபியர் என்ப, என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர் எனக் குறிப்பிடுவதால் அவர் காலத்திற்கு முன்னரே இலக்கண நூல்கள் இருந்தமையை உணர்த்துகின்றன. தொல்காப்பிய சிறப்புப்பாயிரத்தை இயற்றிய பனம்பாரனார் ஆவார். அவர் தொகாப்பியம் நிலந்தருத்திருவிற் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாக இருபத்தியேழு இயல்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியம் சூத்திர யாப்பால் அமைந்த 1610 நூற்பாக்களாலானது.
எழுத்ததிகாரம்
|
சொல்லதிகாரம்
|
பொருளதிகாரம்
|
நூல் மரபு
|
கிளவியாக்கம்
|
அகத்திணையியல்
|
மொழி மரபு
|
வேற்றுமையியல்
|
புறத்திணையியல்
|
பிறப்பியல்
|
வேற்றுமை மயங்கியல்
|
களவியல்
|
புணரியல்
|
உருபியல்
|
கற்பியல்
|
தொகை மரபு
|
பெயரியல்
|
பொருளியல்
|
உருபியல்
|
வினையியல்
|
மெய்ப்பாட்டியல்
|
உயிர் மயங்கியல்
|
இடையியல்
|
உவமையியல்
|
புள்ளி மயங்கியல்
|
உரியியல்
|
செய்யுளியல்
|
குற்றியலுகரப் புணரியல்
|
எச்சவியல்
|
மரபியல்
|
முச்சங்கங்கள் இருந்தமைக்கான சான்றுகள்
தமிழகத்தில் முதல், இடை, கடை என மூன்று சங்கங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுவது குறித்து பல்வேறு மாறுபட்டக் க்ருத்துக்கள் இருந்தாலும் அது குறித்த பல சான்றுகளும் இருப்பதை மறுக்க முடியாது. சங்கம் இருப்பதற்கான சான்றுகளை மூன்று கூறுகளாக பகுக்கலாம். அவை,
1. செப்பேடு
2. இலக்கியச் சான்றுகள்
3. உரை சான்றுகள்
செப்பேடு
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு சின்னமனூர் செப்பேட்டில் காணப்படும் குறிப்பு:
"மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்"
இலக்கியச் சான்று
தமிழ் இலக்கியங்களில் சங்கம் இருந்தமைக்குப் பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக,
சங்க இலக்கியம்:
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமோடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை" - புறம்:72
"பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண்
அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை" - அகம்(உரைப்பாயிரம்)
" தொல்லாணை நல்லாசிரியர்,
புணர் கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்" - மதுரைக்காஞ்சி
பக்தி இலக்கியம்:
"சங்க முகத்தமிழ்
சங்க மலித்தமிழ்" - திருமங்கையாழ்வார்
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனக் கிழிதருமிக் கருளினோன் காண்" - நாவுக்கரசர்
"உயர்மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்" - மாணிக்கவாசகர்
"தலைச்சங்கப் புலவனார் தன்முன்" - சேக்கிழார்
"சங்கத்தமிழ் மூன்றும் தா" - ஒளவையார்
உரைச்சான்றுகள்:
இலக்கியங்களுக்கு உரை தந்த உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் சங்கம் இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளனர். அவை,
1. செப்பேடு
2. இலக்கியச் சான்றுகள்
3. உரை சான்றுகள்
செப்பேடு
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு சின்னமனூர் செப்பேட்டில் காணப்படும் குறிப்பு:
"மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்"
இலக்கியச் சான்று
தமிழ் இலக்கியங்களில் சங்கம் இருந்தமைக்குப் பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக,
- சங்க இலக்கியம்
- காப்பியம்
- பக்தி இலக்கியம்
சங்க இலக்கியம்:
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமோடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை" - புறம்:72
"பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண்
அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை" - அகம்(உரைப்பாயிரம்)
" தொல்லாணை நல்லாசிரியர்,
புணர் கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்" - மதுரைக்காஞ்சி
பக்தி இலக்கியம்:
"சங்க முகத்தமிழ்
சங்க மலித்தமிழ்" - திருமங்கையாழ்வார்
"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனக் கிழிதருமிக் கருளினோன் காண்" - நாவுக்கரசர்
"உயர்மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்" - மாணிக்கவாசகர்
"தலைச்சங்கப் புலவனார் தன்முன்" - சேக்கிழார்
"சங்கத்தமிழ் மூன்றும் தா" - ஒளவையார்
உரைச்சான்றுகள்:
இலக்கியங்களுக்கு உரை தந்த உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் சங்கம் இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளனர். அவை,
- சிலப்பதிகார உரை - அடியார்க்குநல்லார்
- தொல்காப்பிய உரை - பேராசிரியர்
- தொல்காப்பிய உரை - நச்சினார்க்கினியர்
முச்சங்கங்கள்
சங்கங்கள்
|
முதல்
|
இடை
|
கடை
|
இடம்
|
தென் மதுரை
|
கபாடபுரம்
|
மதுரை
|
ஆண்டுகள்
|
4449
|
3700
|
1850
|
ஆதரித்த அரசர்கள்
|
89
|
59
|
49
|
அவைப் புலவர்கள்
|
549
|
59
|
49
|
பாடிய புலவர்கள்
|
4449
|
3700
|
449
|
இயற்றப்பட்ட நூல்கள்
|
பெரும் பரிபாடல்,
முது நாரை,
முது குருகு,
களரியாவிரை,
அகத்தியம்
|
பெருங்கலி,
குருகு,
வெண்டாளி,
வியாழமாலை,
மாபுரானம்,
பூத புராணம்,
இசை நுணுக்கம்,
தொல்காப்பியம்
|
நெடுந்தொகை,
குறுந்தொகை,
நற்றிணை,
புறநானூறு,
ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி
பரிபாடல், கூத்து, வரி, குற்றிசை, பேரிசை
|
குறிப்பிடத்தக்கப் புலவர்கள்
|
அகத்தியர், சிவபெருமான், முருகவேள், முரஞ்சியூர் முடினாகராயர்,
நிதியின் கிழவன்
|
அகத்தியர்,
தொல்காப்பியர், மோசி, வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கன், திரையன், மாறன், கீரந்தை
|
சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார்,
|
மன்னர்கள்
|
காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை
|
வெண்டேர்ச் செழியன் முதல் முடத் திருமாறன் வரை
|
முடத் திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
|
சான்று: நக்கீரரின் இறையனார் களவியல் உரை
கீழடி நிலமும் - சங்க இலக்கிய மட்பாண்ட பயன்பாடும்
சங்க இலக்கிய காலத்தில் முதன்மைத் தொழிலாக கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும் இருந்தன. எனினும் அதைத் தாண்டி பல்வேறு துணைமைத் தொழில்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்பாண்டத் தொழில். சங்க காலம் பெருங்கற்காலத்ததைச் சேர்ந்த காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. என்றாலும் அவற்றின் பயன்பாடு பரவலாக்கம் பெறவில்லை. அரசர்களும், வசதி படைத்தோரும் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இந்த உலோகங்களும், உலோக கொள்கலன்களும் இருந்தன. சாமானியர்களின் பயன்பாட்டிற்கு மட்பாண்டங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாகவே பெருங்கற்காலத்தைச் சார்ந்த அகழ்வாய்வு பகுதிகளில் உடைந்த மட்பாண்டங்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு பானை ஓடுகள் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களை மக்கள் அதிகமாக வாழ்ந்த நகரப்பகுதிகளாக அடையாளம் காண்கின்றனர் தொல்லியலாளர்கள். அண்மை காலத்தில் தமிழகத்தின் அதிமுக்கியப் பேசு பொருளாக இருந்த கீழடி அகழ்வாய்விலும் இதுபோன்ற நிலையைக் காண முடிகின்றது. சங்க இலக்கியங்கள் கடைச்சங்க காலத்ததைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. தற்போது இருக்கும் மதுரையும் கடைச்சங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. எனவே மதுரைக்கு மிக அருகில் வைகைக் கரையில் அமைந்துள்ள கீழடி பகுதியில் ஒரு நகரம் இருந்ததென்றால் அது மதுரையோடு தொடர்புடைய சம காலத்திய நகரமாகவோ அல்லது அதற்கு முந்தைய கால நகரமாகவோ இருத்தல் கூடும். சங்க காலத்தின் காலத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ செழித்திருந்த நகர நாகாpகமான கீழடி பகுதியில் இருக்கும் மட்பாண்டங்கள் குறித்தும், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் மட்பாண்ட பயன்பாடு குறித்தும் விhpவாக விவாதிக்கிறது இக்கட்டுரை.
சங்க காலத்தில் மட்பாண்டத் தொழில் பரவலாக்கம் பெற்று இருந்தது. மட்பாண்டங்களைச் செய்வோர் அதனைத் தனித்த தொழிலாகச் செய்துள்ளனர். எனவே அவர்களைக் கலம்செய்கோ, எனப் பெயாpட்டு அழைத்துள்ளனர். இதனை, “கலம் செய் கோவே! கலம் செய் கோவே!”(புறம்: 228) என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. மேலும் அவர்கள் வேட்கோ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், சிறுவயது முதலே இத்தொழிலை மேற்கொள்கின்றனர் எனவும்,
“வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரு உத்திரன் போல” (புறம்: 32) புறப்பாடல் குறிக்கின்றது. இதை நோக்க மட்பாண்டத் தொழில் குடும்பத்தொழிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. மட்பாண்டங்கள் பெரும்பாலும் கொள்கலனாகவே காட்டப்படுகின்றன. பானை, நீர்க்கன்னல், இறந்தோரைப் புதைக்க பயன்படுத்திய தாழிகள் முதலியவை சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றன.
பானைகள் பானை, குழிசி, தசும்பு, மண்டை, உறி, கரகம் எனப்பல பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
“திண்கால் உறியண் பானை”(அகம்: 270) என்னும் பாடலடி பானை எனக் குறிக்கப்பட்டமையையும்,
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி” (பெரும்: 96) என்னும் பாடலடி குழிசி எனச் சுட்டப்பட்டமையையும்,
“தயிர் கொடு வந்த தசும்பு” (புறம்: 33) என்பது தசும்பு எனக் குறித்ததையும்,
“பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” (குறு: 169) என்னும் அடி மண்டை என அழைக்கப்பட்டதையும்,
“உறித் தாழ்ந்த கரகம்” (கலி: 9) என்னும் பாடல்வரி கரகம் என்றதையும் குறிக்கின்றன. இவ்வாறு வேறு வேறு பெயர்களால் அழைக்கப் பெற அவற்றின் வடிவம் அல்லது அளவு மாறுபாடு காரணமாக இருக்கலாம் எனினும் அவற்றை உறுதி செய்ய சங்கப் பாடல்களில் இடமில்லை.
கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில் அதிகமான பானைகள் கடைத்துள்ளன. இவை பல்வேறு வடிவங்களில் (வாய்பகுதி நீண்டு, அகன்று, குறுகி) கிடைத்துள்ளன. அத்துடன் மிகச் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் பானைகள் கிடைத்துள்ளன. அவற்றில் மிகச் சிறிய பானைகளை நோக்குகையில் அவை விளையாடுவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகக் கருத இடமுண்டு. மேலும் கீழடியில் கிடைத்த பானைகளோடு அவற்றிற்குப் பொருத்தமான மூடிகளும் கிடைத்துள்ளன. ஆனால், சங்க இலக்கியத்தில் இந்த மூடிகள் பயன்படுத்தப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. கீழடியில் கிடைக்கும் பானைகள் கருப்பு, சிவப்பு, கருப்பு சிவப்பு கலந்த வண்ணங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்தில் பானைகள் செந்நிறத்தில் இருந்தமை மட்டுமே சுட்டப்பட்டுள்ளது. மேலும், பானைகளில் ஓவியங்கள் வரையப்பட்டமையோடு பானைகளில் பெயர் எழுதும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது.
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த என்னும்
பல்பொதிக் கடைமுக வாயில்.” என்னும் நற்றிணை பாடலடி பானையில் பெயர் பொறித்தமையைக் காட்டுகின்றது. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் கீறல்கள் எனப்படும் வரைகோட்டு ஓவியங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் காலத்திற்கு முந்தைய எழுத்து வடிவங்களாக உள்ளன. பானைகளின் வாய்ப்பகுதிக்குக் கீழே இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவற்றில் பல ஒடுகள் உடைந்திருப்பதால் முழமையான வார்த்தைகளை வாசிக்க முடியவில்லை. சில ஒடுகளில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் குவிரன், ஆதன் முதலான பெயர்ச்சொற்களும் அடக்கம். பானை ஓடகளைப் பயன்படுத்துவோர் சாமானியராகவே இருத்தல் வேண்டும். அப்படியானால் பானை ஓடுகளில் பெயர் பொறித்தோர் சாமானியரே. ஏனில் சாமானியரும் எழுத்தறிவு பெற்றவராக இருந்திருக்க வேண்டும். “கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல் hPதியான காலக்கணிப்புகள், தமிழ் பிராமியின் காலம் மேலும் பழமையானதாக கருதச் செய்கிறது. இவையெல்லாம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்த தமிழ்ச் சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிறது. அதாவது 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்.” என்னும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையும் இதனைப் புலப்படுத்துகின்றது. இப்படி பானையில் பெயரிடப்பட்டமை மேற்கண்ட நற்றிணை பாடல் கருத்தை ஒத்தமைகின்றது.
கீறல்களை எழுத்திற்கு முந்தைய வரி வடிவங்கள் என்பாரும் உளர். பொதுவாக சிந்து சமவெளி நாகரிகத்தை தமிழோடு சில அறிஞர்கள் ஒப்பிடுவதுண்டு. ஆனால் அறிவியல்பூர்வமாக அதை நிரூபிக்க முடியாத நிலை இருந்ததது. கீழடி அகழ்வாய்வு அக்குறையைப் போக்கியுள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள கீறல்கள் சிந்து சமவெளி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட கீறல்களோடு ஒத்தமைகின்றன. இத்தகு கீறல்கள் உள்ள ஆயிரம் பானை ஓடுகள் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இக்கீறல்களைப் பானை ஓடுகளில் பொறித்திருப்பது என்பதும் கூட பெயர் பொறித்தலுக்கு இணையான தனது பானையை தனித்துக்காட்டுவதற்கான அடையாளமிடலாகவோ அழகுபடுத்துவதாகவோ இருந்திருக்கக் கூடும்.
மட்பாண்டங்கள் செய்த முறையினையும் சங்கப்பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. மட்பாண்டங்கள் செய்ய ஈர மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். ஈரமான பதப்படுத்திய மண்ணை சக்கரத்தில் இட்டு பானை செய்துள்ளனர்.
“வனை கலதிகிரியின் குழிசி சுழலும்
துணை செலல் தலைவாய் ஓவு இறந்து வாpக்கும்” (மலை:475) என்னும் பாடலடி இதனை உணர்த்துகின்றது. இவ்வாறு சக்கரத்தைச் சுழலவிட்டு கைகளால் செய்யப்பட்ட பானைகள் பின்னர் நெருப்பில் இட்டு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பானை தனித்தனியாக சுடப்படாமல் மொத்தமாக சுடப்பட்டிருக்க வேண்டும். இப்படி பானைகளைச் சுடுவதால் ஏற்படும் புகை மலையையே மறைப்பதாக,
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” ( அகம்: 308) என்னும் அகநானூற்றுப் பாடல்வாp உணர்த்துகின்றது. இவ்வாறு சுடப்படாத பானைகள் ஈரத்தைத் தாங்காதவையாக, பயனற்றவையாக இருந்தன. இந்த பயனற்ற கலத்தை பசுங்கலம் என்று குறிக்கப்பட்டமையை,
“பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
ஊள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி” (குறு: 29)
“ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு” (நற்: 308) முதலான பாடல் வரிகள் குறிக்கின்றன. சுடப்படாத பானைகள் பயனற்று கரையும் நிலையில் இருக்க, சுடப்பட்ட பயனுள்ள பானைகள் உணவுசார் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடுஊண் புழக்கல்” (பெரும்: 96)
“சோறு அடு குழிசி இளக
மான்தடி புழக்கிய புலவுநாறு குழிசி
நகைமுதிர் சாடி நறுவின் வாழ்த்தி” போன்ற பாடல் வாpகள் பானைகள் உணவு சமைக்க பயன்பட்டமையைப் புலப்படுத்துகின்றன. மேலும்,
“பாணர் பசுமீண் சொhpந்த மண்டை” என்னும் பாடலடி மீனைச் சேகாpக்க மண்பானையைப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. மேலும், மண்பானைகள் தயிரை வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. “தயிர் கொடு வந்த தசும்பு” ((புறம்: 33) எனும் புறநானூற்றுப் படலடி இதனைப் புலப்படுத்துகின்றது.
“உறி தாழ்ந்த கரகம்” (பெரும்: 56)
“இமிழ் இசை மண்டை உறியொடு” (கலி: 106)
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270) போன்ற பாடல் பானைகளை வீட்டில் தொங்கவிட உறிகளைப் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றது.
பானைகள் மட்டுமல்லாது நேரத்தை அளவிடப் பயன்படும் குறுநீர்க்கன்னல்களும் மண்ணால் செய்யப்பட்டுள்ளன. இந்த குறுநீர்க்கன்னல்கள் என்பவை நீர் கடிகாரங்களாக நாழிகையைக் கணிக்க பயன்பட்டுள்ளன. அதாவது இது இரு பகுதிகளைக் கொண்ட குடுவையாகும். மேற்பகுதியில் நீர் ஊற்றினால் அதன் கீழே இருக்கும் துளை வழியாக நீர் கசியும். இவ்வாறு கசியும் நீரானது. கீழே இருக்கும் பகுதியில் சேகரம் ஆகும். அப்பகுதியில் ஒவ்வொரு நாழிகையையும் குறிக்க கோடுகள் இடப்பட்டிருக்கும். நீர் நிரம்பும் அளவைப் பொறுத்து எத்தனை நாழிகை என கணக்கிட்டு அறிந்துள்ளனர். இந்தக் குறுநீர்க்கன்னல்கள் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டமையைக் கீழ்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.
“குறுநீர்க் கன்னல் எண்ணுந ரல்லது
கதிர் மருங்கறியாது அஞ்சுவரப் பாஅய்” என்னும் பாடலடி இதனை உணர்த்துகின்றது. இவை தவிர்த்து இறந்தோரைப் புதைக்கும் தாழிகளும் மண்ணால் வனையப்பட்டடுள்ளன. அளவில் பொpயனவான இவையும் சக்கரத்தின் உதவியோடே செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறந்தவரின் உடலை இட்டு, அதனோடு சிறு கலன்களில் தானியங்களையும் இட்டு மண்ணில் புதைத்துள்ளனர். ஆவற்றை விளங்குகளிடமிருந்து காக்க தலைகீழாகப் புதைத்துள்ளனர்.
கீழடியில் அகழ்வாய்விற்கு உட்படுத்தப்பட்ட இடம் குடியிருப்புப் பகுதியாக இருப்பதால் இங்க ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிள்ளை. ஆனால் பல வடிவங்களில், பல்வேறு அளவுகளில், மாறுபட்ட வாய்ப்பகுதிகளைக் கொண்ட பானைகள் மிகுதியாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களின் எழுத்தறிவைப் பறைசாற்றும்படி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்ததோடு பண்டைத் தமிழரின் கலைத் திறனை வெளிப்படுத்தும் பறவை, விலங்கு, மனித உருவங்களில் செய்யப்பட்ட மண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. மேலும், சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் மாட்டுவண்டியும் கிடைத்துள்ளது. இதன் சக்கரம் மண்ணால் செய்யப்பட்டதாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமன்றி வளர்ச்சியடைந்த நகர நாகாpகமாக வைகைக் கரை நாகரிகம் இருந்ததைப் பறைசாற்றும் வண்ணம் உறை கிணறுகளும், நீர் வடிகால்களும் உள்ளன. அவையும் மண்ணால் செய்யப்பட்டவையாகவே உள்ளன.
சனி, 16 மே, 2020
முயற்சி திருவினை ஆக்கும்
முடியாது என்பதன் முடிவில்
உதடுகள் மட்டுமல்ல,
உறவுகளும் ஒட்டாது.
முடியும் என முயன்று பார்,
பத்தாம் கிரகத்திலிருந்தும் - உனக்கு
பாராட்டு மடல் வரும்!
உதடுகள் மட்டுமல்ல,
உறவுகளும் ஒட்டாது.
முடியும் என முயன்று பார்,
பத்தாம் கிரகத்திலிருந்தும் - உனக்கு
பாராட்டு மடல் வரும்!
மஞ்சள் வண்டி
வீட்டு வாசலில் பள்ளிக்கூடம்
அத்தையும், சித்தியும் ஆசிரியர்கள்
விழாக்கோலம் கொள்ளும் விளையாட்டு வேளை
விளையாடிக் கடக்கும் பாடத்தேர்வுகள்
ஆரவார்மின்றி அறிவூட்டிய அரசுப் பள்ளிக்கு
ஆளின்மையால் பூட்டிட்டுவிட்டு
பால் மணம் மாறா பிஞ்சுகளை
விதவிதமான சீருடைக்குள் திணித்து,
வரிசைகட்டி வரும் மஞ்சள் வண்டிக்குள்
அடைத்து மிரட்டுகிறது கிராமத்து நாகரிகம்.
அத்தையும், சித்தியும் ஆசிரியர்கள்
விழாக்கோலம் கொள்ளும் விளையாட்டு வேளை
விளையாடிக் கடக்கும் பாடத்தேர்வுகள்
ஆரவார்மின்றி அறிவூட்டிய அரசுப் பள்ளிக்கு
ஆளின்மையால் பூட்டிட்டுவிட்டு
பால் மணம் மாறா பிஞ்சுகளை
விதவிதமான சீருடைக்குள் திணித்து,
வரிசைகட்டி வரும் மஞ்சள் வண்டிக்குள்
அடைத்து மிரட்டுகிறது கிராமத்து நாகரிகம்.
குழாயடி மருத்துவம்
முட்டி மோதி குரல் எழுப்ப,
கண்களும் கைகளும்
கடப்போர் பற்றிக் கதை பேச,
மண்ணை வாரியும், சொல்லை வீசியும்
சண்டை சச்சரவுகள் ஓயாது தொடர்ந்திட,
கண்ணீர், புன்னகை, ஆத்திரம், அழுகை
அத்தனையும் தீர்க்கவென
நாளும் ஒரு கோலம் கொள்ளும்
தெருக் குழாயடிகள் காணாமல் போனதால்...
இரத்த அழுத்தத்திற்கும்
மன அழுத்தத்திற்கும்
மாத்திரைகளை விழுங்குகிறாள் என் அன்னை.
கண்கட்டு
ஆரஞ்சு மிட்டாய்,
தேன் மிட்டாய்,
சூட மிட்டாய்,
இலந்தைப்பழ மிட்டாய்,
பூஸ்ட் மிட்டாய்...
சுவை மட்டுமே அறிந்து
நான் சுவைத்த இவற்றை
சுகாதார காரணம் காட்டி
என் மகளின் கண்ணிலும் காட்டாமல்
அதிவேகமாய்க் கடக்கிறேன்
தேன் மிட்டாய்,
சூட மிட்டாய்,
இலந்தைப்பழ மிட்டாய்,
பூஸ்ட் மிட்டாய்...
சுவை மட்டுமே அறிந்து
நான் சுவைத்த இவற்றை
சுகாதார காரணம் காட்டி
என் மகளின் கண்ணிலும் காட்டாமல்
அதிவேகமாய்க் கடக்கிறேன்
என் பள்ளி அருகே தெருவோரக் கடையை...
காளை
காளை
ஈஸ்வரனுக்கு வீட்டில் காலடி எடுத்து வைக்கவே சங்கடமாக இருந்தது. வேலை முடிந்து வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான். வேகமாய், சத்தம் கக்கிக் கொண்டே வரும் அவனது புல்லட் ஓசை வீட்டை நெருங்கும் போது மஞ்சள் முகத்தோடு வாசலில் வந்து சிhpக்கும் அம்மா காமாட்சியை இன்று காணவில்லை. காலணிகளைக் கழற்றி எறியும் வரையும் அவள் எட்டிப்பார்க்கவே இல்லை. அம்மாவும் டீவியப் பார்த்திருக்குமோ? இதை யோசிக்கும்போதே ஈஸ்வருக்கு வயிறெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இனி நின்று கொண்டே இருந்து பயனில்லை. வேறு வழியே இல்லை என மனதிற்குள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல எட்டிப்பார்த்தான். ஒரு மூலையில் கிடந்த வயர் கட்டிலில் அம்மாவும் அப்பாவும் எதையோ தொலைத்ததைப் போல அமர்ந்திருந்தனர். அப்பத்தா மட்டும் கீழே உட்கார்ந்து செல்லத்தில் வெற்றிலையைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் நிற்பது? சரிஉள்ளே போகலாம் என காலை எடுத்து வீட்டிற்குள் வைத்ததுதான் தாமதம் வேமாய் பறந்து வந்த அப்பத்தாவின் கைத்தடிக் கம்பு சட்டென ஒலியெழுப்பி அவன் காலடியில் விழுந்தது. அதிர்ந்துபோய் நின்றுவிட்டான். ஈஸ்வரன் வருவதை அறியாது வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அப்பாவும், அம்மாவும் அப்பத்தாவின் தடி எழுப்பிய சத்தத்தில் சுதாரித்து எழுந்தனர். அப்பாவின் பார்வை கொட்டிய நெருப்பில் பற்றிய சறுகாய் தன்னை உணர்ந்தான் ஈஸ்வரன்.
“ஏன் ஐயா! புடிச்சு உத்தியோகத்துக்குப் போயிட்டா, பழசு எல்லாம் மறந்து போகுமோ? அங்கின இருக்க போட்டாவப் பாருங்க, எங்க ஐயா பக்கத்துல நிக்கிற காளையப் பாரும். அது நம்ம குலசாமின்னுட்டுத் தொpயாதா? உங்க அண்ணன் காளைய அடக்கப்போயிதான் ஒரே அடியாப் போனாரு. ஆனா, அதுக்காக நான் என்னைக்காவது துளி கண்ணீரு சிந்திருப்பேனா? என் ராசா வீரனாப் போய் சேந்தான்னுப் பொருமையா, கவுரதையா மீசைய முறுக்கிப்பேன். ஏன்னா காளை நம்ம சாமிப்பு. அதெல்லாம் மறந்து போச்சோ? ஏன் மூனு வருசத்துக்கு முன்னாடி இந்த காக்கி உடுப்பப் போடுறதுக்கு முன்னாடி பொpய புடியாளா இருந்தவந்தானே நீ? இப்ப எல்லம் மறந்து போச்சோ?” அப்பா கேட்கக் கேட்க விழி பிதுங்கி நின்ற ஈஸ்வரன் மெல்லக் குரல் எடுத்து, “இல்லப்பா… அது வந்து… சட்டப்படி….” வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிய மகனைப் பார்த்த தந்தை கோபம் அடங்காதக் குரலோடு, “நிறுத்துப்பு. உங்க காரணம் ஒன்னுந் தேவையில்ல. படிச்சிட்டா, எல்லாம் பொpயாளா ஆயிடுறீக. புடிச்சு நம்ம குடிய உயர்த்துவீகன்னு நம்பித்தான் படிக்க வச்சு வேலைக்கு அனுப்புறோம். ஆனா வேலைக்குப் போனதும் எல்லாம் மறந்திடுது. குடும்ப வழக்கம் என்ன? பாரம்பரியம் என்ன? எல்லாங் காத்தோட போயிடுது.
“ஏன் எங்க மூத்தவரு கதை என்னாச்சு? கஷ்டப்பட்டுப் படிக்க வச்சு ஒத்த மகன ஆளாக்க நெனச்சாரு. சோறு போடுற புஞ்சைய வித்துப் படிக்க வச்சாரு. படிச்சதும் அவனுக்குப் பவுசு வந்துருச்சு. வீட்டுக் குலசாமியா கம்பீரமா நின்னுட்டுருந்த காளைக்கு சோறுபோட மடிச்சான். மூத்தவரும் ஜில்லாவுக்கே பிடிபடாத மாடுன்ன வாசி அத ஊரூராக் கூட்டிப்போயி வெளாடவச்சு அதுக்குண்டான மருவாதையால காளையக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. அதுலையும் மண்ணப் போட இந்த பாவிப்பய கவுரமண்டு சட்டம் போட்டுச்சு. நம்ம காளைய நாம் அடைஞ்சு விளையாடுறதும், கட்டி அனைச்சு அதோட கொஞ்சுறதும் தப்புன்னு சொல்லி உத்தரவு போட்டுச்சு. காளையோட வௌயாடுறது நமக்கும் அதுக்குமான சொந்தத்தக் கொண்டாடுறதுன்னுப் புரியாம ஏதோ ஊரு பேரு தொpயாதவனெல்லாம் வந்து கேஷு கொடுத்தான். அத்தோட எங்கண்ணன் மனசொடஞ்சு போயிட்டாரு. ராசாவாட்டம் ஊட்டி வளத்தக் காளைக்கு வக்கப்புல்லு போடக் கூட முடியாம நின்னாரு. இதுதான் சாக்குன்னு மாட்டக் கொண்டு சந்தையில வித்துட்டு வந்துட்டது எங்கண்ணம் பெத்த தாpசு. ஐயோ! எஞ்சாமி போச்சேன்னு யாருக்கிட்டயும் பேசாம, திங்காம உங்காம கெடந்து அந்த கொறவட்டுலயே மூனான்னாலு மூச்சடங்கிப் பேனாரு.
“இதையெல்லாம் பாத்துத்தான் என்னால ஆகாத காலம் வந்தாலும் எஞ்சாமியக் காப்பத்த உங்கக்கிட்டக் கை நீட்டக் கூடாதுன்னுட்டு, முட்டித் தேய அந்த காஞ்சக்காட்ட உழுது, என்னாலான வரும்படியப் பாக்குறேன். புரிஞ்சதாப்பு. உங்கக்கிட்ட நாங்க காசுபணங் கேக்கல. ஆனா எம்ம மருவாதையக் கெடுத்துப்புடாத. எங்கப்பு தாங்காத்தக் காளை, சாமிக்கிட்டப் போனதும், அதுக்குச் செல வச்சு வௌக்குப் பொட்டு சாமியா கும்பிட்டாரு. ஏங்கண்ணன் காளைய வித்துச் சோறுதிங்கப் பொறுக்காம, அத கசாப்புக்கடையில கறியாக்கு முன்ன தன் மூச்சவிட்டாரு. அவுக வழியிலதான் நான் மாடா உழைச்சு எங்காளைய சாமியாக் கும்புடுறேன். ஆனா, எம்பரம்பரையில வந்த நீ கையெடுத்தக் கும்புட வேண்டிய சாமிய கம்பெடுத்து அடிச்சு அசிங்கப்படுத்திட்ட. காலையிலயிருந்து டீவியில அதப்பாத்து ஊரே எங்கிட்ட வந்து எளவு கேக்குற மாதிரி கேக்குது. ஊம்மப் பாக்கவே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது. எம்மூஞ்சிலயே முழிக்காதீரும். அப்புறம் அப்பம்புள்ளைங்கிறது இல்லாமப் போயிடும்.” தன் முகத்தையேப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கோபத்தை வார்த்தைகளாய்க் கொட்டிவிட்டு புறவாசல் பக்கம் போன அப்பாவைப் பார்த்துக் கொண்டே நின்ற ஈஸ்வரன் அப்படியே வெளியே போய் திண்ணையில் அமர்ந்து தூணோரமாய் சாய்ந்து கொண்டான்.
காலையில் நடந்ததெல்லாம் அவன் கண்முன் படமாக ஓடியது. நம் பாரம்பாரிய விளையாட்டான சல்லிக்கட்டை விளையாடக் கூடாது எனவும், அதில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன என்றும் கூறி எங்கிருந்தோ வந்தவன் நீதிமன்றத்தில் போய் தடை வாங்கினான். இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து மூன்று ஆண்டுகளாய் அரசியல் செய்து விளையாடின கட்சிகள். ஆனால் தீர்வு ஒன்றும் கிடைப்பதாய்த் தெரியவில்லை. இனி இந்த ஓட்டு வியாபாரிகளை நம்பி பயனில்லை என்று உணர்ந்த ஒவ்வொரு தமிழனும் வீதிக்கு வந்து போராடினான். அந்தப் போராட்டத்தின் நியாயம் ஈஸ்வரனுக்குப் புரியாமலில்லை. ஆனால் ஒரு காவல்துறைப் பணியாளராகத் தன் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் அவனுக்கு. போராட்டம் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும் கூட்டத்தோடு ஒருவனாய் நின்றான் ஈஸ்வரன். காலை பத்துமணி இருக்கும். ஒரு காளைக் கூட்டத்தோடு போராட்டத்திற்கு ஊர்வலமாய் வந்தனர் இளைஞர்கள் சிலர். காளை மிரண்டு ஓடி, அதை யாரும் பிடித்து இழுத்தால் கூட சட்டத்தை மீறியதாய் அரசாங்கத்தின் மீது கேள்வி வந்துவிடும் எனப் பயந்த மேலிடம் மேல் அதிகாரியிடம் காரசாரமாய் பேச, அவர் அந்தக் கோபத்தைக் காவலர்கள் மீது கொட்டினார். காளையோடு சேர்த்து அந்த இளைஞர்களைக் கைது செய்ய உத்தரவு பரந்தது. கடமையே கண்ணாகி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தனர் காவலர்கள். அந்த இடமே கலவர பூமியானது. மிரண்ட மாடு இடத்தைவிட்டு அசைய மறுத்து முரண்டு பிடிக்க, மேலதிகாரியின் அதட்டல் காதில் குடைச்சல் கொடுக்க, அந்தக் கம்பீரமான காளையின் பின்புறத்தில் தன் கட்டுப்பாட்டையும் மீறி ஓங்கி ஒரு அடி வைத்தது அவனது லத்தி. அது தடமாய்ப் பதிய, வலியில் அம்மா… என காளை குரலெடுத்துக் கத்த, நிகழ்ந்த அனைத்தையும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்ப, ஈஸ்வரனின் இரக்கமற்ற செயல் அன்றைய விவாதப் பொருளானது. தன் செயலுக்காய் தன்னையே நொந்து கொண்டவனாய் நிகழ்ந்தவற்றை அசைபோட்டுக் கொண்டே தூணோடு தூணாய் இருந்த ஈஸ்வரனை வீட்டின் அருகில் உள்ள கொட்டத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த மாயனின் குரல் சுயநினைவிற்கு வரச்செய்தது.
……………………………………………………………
மாயனுக்குத் தண்ணி காட்டி, அதன் முகத்தோடு முகம் புதைத்துப் பிராயச்சித்தம் கேட்ட மகனின் கண்ணீரை ஜன்னல் வழியாப் பார்த்துக் கண்கலங்கினாள் காமாட்சி. அவளின் கலங்கிய கண்களுக்கு இடையில் மங்கலாய்த் தெரிந்தன திண்ணையில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஈஸ்வரனின் தொப்பியும், காக்கிச் சட்டையும்.
புதிய பாஞ்சாலி ( பாகம் - 2)
புதிய பாஞ்சாலி பாகம் - 2
பாத்திரங்கள்: பாஞ்சாலி, துரியோதனன், துச்சாதனன், சகுனி, தர்மன், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், குந்தி, பீஷ்மர், திருதிராட்டிரர், கர்ணன், கண்ணன்.
துரியோதனன்:
துச்சாதனா இந்தத் திமிர் பிடித்த பாஞ்சாலியின் துகிலை உறிந்து என் தொடையில் உட்கார வைப்போம். நிறைந்த அவையில் அவளை அவமானம் அடையச் செய்வோம். ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்கிறாளே. வெட்கம் கெட்டவள். ஆனால் உத்தமி போல என்னை அலட்சியம் செய்கிறாள். என்ன திமிர் இருக்கும் இவளுக்கு. ம்ம்… ஆகட்டும்.
துச்சாதனன்: இதோ இந்தத் தீமையின் உருவான பாஞ்சாலியின் ஆடைகளைக் களைந்து அவளையும் அவளது கணவர்களையும் கூனிக் குறுகச் செய்கிறேன். இரசித்துப் பாருங்கள் அண்ணா! இந்த அரங்கேற்றத்தை.
கர்ணன்: வேண்டாம் துச்சாதனா! நிறுத்துச் சொல் துhpயோதனா இந்த அவலத்தை. அவள் ஒரு பெண். நம் வீரத்தை இந்த பஞ்சபாண்டவர்களிடம் காட்டுவோம்.
துரியோதனன்: நீ எனக்கு அறிவுரை கூறாதே நண்பா! இது இவளுக்குத் தேவையானதுதான். இது என் முடிவு. இதில் தலையிடாதே.
துச்சாதனன்: (பாஞ்சாலியை நோக்கி) ஏய்! பாஞ்சாலியே! ஒன்றுக்கு ஐந்து ஆண்மகன்களை கனவானாய் கொண்டவளே! இப்போது உன்னை உன் மானத்தை காக்க எந்த ஆடவன் வருகிறான் எனப் பார்ப்போம்.
பீமன்: வேண்டாம் துச்சாதனா! அவள் உனக்கு அண்ணியாவாள். இந்த குடும்பத்தின் சொத்து அவள். அவளைத் தீண்டாதே. பின் நான் உன்னை உருத் தெரியாமல் அழித்துவிடுவேன். ஏய! துரியோதனா! ஆணவத்தால் ஆடுகிறாயா! எந்தத் தொடையில் என் பாஞ்சாலியை அமரச் சொன்னாயோ அதைக் கிழித்து எறிகிறேன் பார். (பீமன் கோபமாக எழுகிறான்)
தர்மன்: வேண்டாம் பீமா! நாம் தர்மத்தை மீறுதல் கூடாது. நாம் அடிமைகள். நம்மால் இப்பொழுது எதுவும் செய்ய இயலாது. கொஞ்சம் பொறுமையாக இரு.
பாஞ்சாலி: ஆம்! பொறுமையாக இருங்கள். இங்கு மிகப்பெரும் தருமம் அரங்கேறுகின்றது. அதிலிருந்து தவறிவிடாதீர்கள். ஒரு பெண்ணை பபையில் நிறுத்தி அவளது ஆடைகளைக் கலைந்து மானபங்கப்ப படுத்தும் மகத்தான தர்மம் நிகழவிருக்கின்றது. அதைத் தடுத்து பாவத்தைக் கட்டிக்கொள்ளாதீர்கள் தருமத்தின் புதல்வர்களே! அமைதியாக இருங்கள். பொறுமையாக இருங்கள். தர்மத்தின் காவலர்களே! நீங்கள் தர்மத்தை மீறி பாவம் செய்யலாமா! கோழைகளே!
துரியோதனன்: (உறக்கச் சிhpத்து) ஓ! என்ன திமிர் பிடிதத்வளாக இருக்கிறாள் இவள்! பாருங்கள் உங்கள் குலக்கொளுந்தை! மணாளர்களையே எளனம் செய்கிறாள். ஒருவனுக்கு மனைவியாய் இருந்தால் அச்சம் நாணம் இதுவெல்லாம் இருந்திருக்கும். இவளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா.
பாஞ்சாலி: ஏய் துரியோதனா! உன் நாவை அடக்கு. இல்லையென்றால் என்னை இழிவுபடுத்தும் உன் நாவை அறுத்து எறிந்துவிடுவேன்.
துரியோதனன்: நீ என் அடிமை என்பதை மறந்துவிட்டாயா பாஞ்சாலி! வாயை மூடு.
பாஞ்சாலி: அடிமையா! யார் உன் அடிமை. நானா! எப்படி என்னை உன் அடிமை என்கிறாய்.
துரியோதனன்: உன் கணவர்கள் தம்மையும் உன்னையும் பணயமாக வைத்துத் தோற்றது உனக்குத் தெரியாதா என்ன?
பாஞ்சாலி: என்னைப் பணயமாக வைக்க அவர்கள் யார்? அவர்கள் அவர்களைப் பணயமாக வைத்திருக்கலாம். என்னைப் பொருளாய் வைத்து விளையாட அவர்களுக்கு உரிமை இல்லை.
துச்சாதனன்: பயத்தில் மூளை கலங்கிவிட்டது இவளுக்கு. என்ன பேசுகின்றாய் என்று பார்த்துப் பேசுகின்றாயா? திருமணம் ஆன பெண் கண்வனின் உடைமையாகிவிடுகிறாள். நீயோ ஐவரின் உடைமையாக இருக்கிறாய். அவர்கள் ஐவரும் என் அடிமைகள் என்றால் நீயும் என் அடிமைதானே. சத்தமாகச் (சிரிக்கிறான்.)
பாஞ்சாலி: அவர்கள் அடமானம் வைக்க நான் என்ன அவர்களின் சொத்தா! உயிரற்ற பொருளா? உயிர் உள்ள பெண் நான். நான் யாருக்கும் உடைமைப்பொருள் அல்ல. அது இருக்கட்டும். தன்னையே காக்கத்தொpயாத மூடர்களாய் என் கனவர் ஐவரும் இருக்கையில் என்னைக் காக்க அவர்களால் எப்படி முடியும். காக்க முடியாத அவர்களால் என்னை அடமானம் வைக்க மட்டும் முடியுமா? தர்மத்தின் பெயரால் வாழ்வைத் தொலைத்தாலும் கூட அதர்ம வழி நடவாத உத்தமர் என உலகம் புகழும் என எண்ணி புகழ் போதையில் தன்னைத் தொலைத்த தர்மன் முதலான ஐவரையும் நானே புற்கனிக்கின்றேன். இந்த முட்டாள்கள் இட்ட மாலை என்னும் விலங்கு என்னைக் கட்டிப்போட ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்.
குந்தி: என்ன பாஞ்சாலி! என்ன பேசுகிறாய் என உணர்ந்துதான் பேசுகின்றாயா? எங்கள் குலக்கொளுந்து நீ. அச்சத்திலும் குழப்பத்திலும் வரையரை கடந்து பேசாதே. உன் பேச்சு எம் பெண் குலத்திற்கே இழுக்காகிவிடும். நாவைக் காத்து உன் பத்தினித் தன்மையை, பெண்களின் பெருமையை காத்துக்கொள்.
பாஞ்சாலி: பத்தினியா! யார் பத்தினி? ஐவருக்கு மனைவியாய் வாழ்ந்த நானா பத்தினி? உங்கள் மரபு ஏற்றுக்கொள்ளுமா என்ன?
குந்தி: அது தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்ந்த பிழை. அது ஒரு விபத்து, அதுவே கர்மா.
பாஞ்சாலி: விபத்தா! அது நீங்கள் செய்த தவறு. தவறுதலாய் உச்சரித்த வார்த்தையைத் திரும்பிப்பெற இயலாது என நீங்கள் மறுத்தீர்கள். உங்கள் வார்த்தையை காத்துக்கொள்ள நினைத்தீர்கள். உங்கள் சொல்லை மீறி நடந்தால் அது பாவம் என எண்ணி இந்தப் பாவத்தை செய்யத் துணிந்தனர் உங்கள் மகன்கள். அதனால் நீங்காத பழியை அடைந்தவள் நான்தான்.
குந்தி: அறவழி தவறாது நேர்வழியில் நடக்கும் என் புதல்வர்களையா நீ பாவிகள் என்கின்றாய். வாயை மூடு. இல்லையென்றால்…..
பாஞ்சாலி: நிறுத்துங்கள். எந்தவகையிலும் அறம் இல்லாதவற்றைச் செய்துவிட்டு அதுவே தர்மம் என எண்ணும் நீங்களும் உங்கள் குலமும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அன்று உங்கள் வாய் உதிர்த்த ஒரு சொல்லால் இந்த அவையில் நான் அவமானப்பட்டுவிட்டேன். இனி என்னை உங்களால் கட்டுப்படுத்தவும் இயலாது, காக்கவும் இயலாது. நானே என்னைக் காத்துக்கொள்வேன். (துச்சாதனன் பாஞ்சாலியை நெருங்கி அவள் சேலையை கைப்பற்ற முனைகின்றான். பாஞ்சாலி துச்சாதனனோடு போராடுகிறாள்.)
கண்ணன்: இந்தப் பாஞ்சாலிக்கு என்ன ஆனது. இவள் ஏன் இப்படிப் போராடுகிறாள். என்னை அழைத்தால் உடனே நான் மீட்டுவிடுவேனே. முட்டால் பெண்ணே! ஒரு பெண்ணால் ஆணுக்கு எதிராக எப்படிப் போராட முடியும். இம்கூம்…. இவள் அழைக்க மாட்டாள் போலத் தெரிகிறது. வேறு வழியில்லை. மரபுப் படி நான்தான் அவளைக் காத்தாக வேண்டும். இல்லையென்றால் கதை கந்தலாகிவிடும். சரி நானே இறங்கிப் போகிறேன். (கண்ணன் மேலிருந்து சேலையைத் தூக்கி பாஞ்சாலி மீது எறிகின்றான். பாஞ்சாலி அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து துச்சாதனனோடு போராடுகின்றாள்)
அர்ச்சுணன்: பாஞ்சலி உனக்குக் கண்தொpயவில்லையா! நீ ஏன் அவனோடு போராடுகின்றாய். கண்ணன் உனக்காக வீசும் சேலையைப் பிடித்துக்கொள் அவன் பார்த்துக்கொள்வான். (பாஞ்சாலி அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றாள்)
கண்ணன்: பாஞ்சாலி அந்தத் தீயவனோடு நீ ஏன் போராடுகின்றாய். அவன் ஒரு ஆண்மகன். ஒரு பெண்ணாகிய உன்னால் என்ன செய்ய முடியும் என நீ நம்புகிறாய். நான் உன்னைக் காக்கின்றேன்.
பாஞ்சாலி: உன்னால் எப்படி என்னைக் காக்க முடியும்.
கண்ணன்: நான் ஒரு பரமாத்மா! என்னால் எல்லாம் கூடும். எந்த மாயத்தையும் என்னால் நிகழ்த்த முடியும் என்பது உனக்குத் தெரியாதா?
பாஞ்சாலி: (அலட்சியமாக) உன்னால் என்னைக் காக்க முடியாது கண்ணா. அதற்கு அனுமதிக்க மாட்டேன். எப்போதும் என் இனம் ஒரு துணையை தேடித் தேடி சோர்ந்துபோய் விட்டது. பெண்ணாலும் எல்லாம் முடியும் என்பதை நான் இந்த சபையில் நிரூபிக்கப்போகின்றேன்.
கண்ணன்: என்னை அனுமதிக்க மாட்டாயா? ஏன் பாஞ்சாலி என்னை இப்படி அலட்சியம் செய்கிறாய்.
பாஞ்சாலி: ஆம் அனுமதிக்க மாட்டேன். அதற்கு நீ அறுகதை அற்றவன். என் இந்த நிலைக்கு காரணம் நீயே.
கண்ணன்: என்ன! உன் நிலைக்கு நான் காரணமா? என்ன உலருகிறாய் நீ? உனக்கு பத்தி பேதலித்துவிட்டதா?
பாஞ்சாலி: நான் உலரவில்லை. உண்மையைத்தான் சொல்கின்றேன். என் நிலைக்கு மட்டுமல்ல, என்னைப்போல இந்த சமூகத்தால் ஆடை பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் அத்தனைப் பெண்களின் கண்ணீருக்கும் காரணம் நீயே.
கண்ணன்: பாஞ்சாலி துன்பத்தில் இருக்கிறாயே என உனக்கு உதவ எண்ணி நீ அழைக்காத போதும் உன்னைத் தேடி வந்தேன். ஆனால் நீயோ என்னை இழிவு படுத்துகிறாய். அனைத்தையும் ஆட்டுவிக்கும் இறைவன் நான். என்மீதே வீண் பழி போடுகின்றாய். நான் நினைத்தால் உன்னை …….
பாஞ்சாலி: என்ன செய்ய உங்களால் முடியும். ஓ! சாபம் தரப்போகிறாயா! நான் சொன்னது தவறு என்றால் தானே அது என்னைச் சேரும். நான் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் சத்தியம். என்னைப் போன்ற பெண்ணினம் அடையும் அவமானத்திற்கு காரணம் நீதான். நீயேதான்.
கண்ணன்: உனக்கு என்ன ஆனது பாஞ்சாலி இன்று.
பாஞ்சாலி: கொஞ்சம் யோசித்துப் பார் கண்ணா! கிருஷ்ண லீலை என்னும் பெயரால் நீ எத்தனைப் பெண்களின் ஆடைகளைத் திருடியிருப்பாய். அனைவரும் உன் குரும்பை இரசிப்பதாய் கனவு கண்டு கர்வம் கொண்டு இருந்த நேரத்தில் ஆடையற்று அரை மனுசியாகிப் போனவள் எவ்வளவு அவமானத்தை உணர்ந்திருப்பாள்.
கண்ணன்: இல்லை பாஞ்சாலி! அதை நீ அப்படிப் பார்ப்பது முறையல்ல. அது ஒரு தத்துவார்த்தமான சங்கதி. அதன் உட்பொருளை அறியாமல் பேசுகிறாய் நீ. உயிருக்கும் அதை உருவாக்கிய பரமார்த்துமாவுக்குமான லீலை அது.
பாஞ்சாலி: உட்பொருள், மெய்பொருள் எனக் கூறி இன்னும் எத்தனைக் காலம்தான் பெண்ணினத்தை பாடாய் படுத்துவீர்கள். அது இருக்கட்டும். ஆடை பறிப்பதுதான் உன் உட்பொருளை உணர்த்துவதற்கு ஒரே வழியா? கடவுளான நீயே ஆடையைப் பறித்தால் சாமானிய மனிதன் அதைத்தானே செய்வான். இப்போது துச்சாதனன் செய்வதும் அதுதானே. நீ செய்தால் லீலை. மானுடன் செய்தால் பிழையா? இவ்விசையத்தில் தலையிட உனக்கு அறுகதை இல்லை. இதை எதிர்க்க தார்மீக உhpமையுள்ளவள் நானே. நான் மட்டுமே. ஆம் உன்னைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் பெண்ணினத்தை ஆட்டிவைப்பீர்கள், அசிங்கப்படுத்துவீர்கள், பின் நீங்களே எம்மை இரட்சிக்கப் போவதாய் கோல்கொண்டும் வருவீர்கள். போதும் இந்தக் கூத்து. இனியும் இன்னொரு துணையை நம்பி நம்பி ஏமார நான் தயாராய் இல்லை. உன் உதவியை ஏற்று உனக்கும் தர்மத்தின் பெயரால் நடக்கும் அதர்மத்திற்கும் உன் அன்பிற்குhpய தோழனாம் அர்ச்சுணன் உட்பட ஐந்து முட்டால்களுக்கும் அடிமையாகப் பேவதில்லை நான். நானே என்னைக் காத்துக்கொள்வேன். எனக்கும் வலியைhன தோள்களும், கைகளும் அதில் கூர்மையான நகங்களும் உள்ளன. அவற்றிற்கும் மேலே பேறுகால வலியையே தாங்கக்கூடிய ஆற்றலும் அசாத்திய மனத்திடமும் உள்ளது. இவைபோதும் என்னைக் காத்துக்கொள்ள. (துச்சாதனனை ஓங்கி அடித்து கீழே தள்ளிவிட்டு தன் உடையை இழுத்துச் செறுகிக்கொள்கிறாள். இந்த மேலாடை இல்லையென்றால் எனக்கு கற்பு போனதாய் எண்ணி இதை இழுத்து அணியவில்லை நான். இந்த மேலாடை இல்லையென்றாலும் நான் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையானவளே. நான் ஒரு பாpசுத்த நெருப்பு. மீண்டும் மீண்டுமாய் மேலாடையால் பெண்ணினத்தை வீழ்த்த முயற்சிக்கும் மூட சமுதாயத்தை உதாpவிட்டு என்னால் என்னைக் காக்க முடியும் எனக் காட்டவே என் மேலாடையைக் காத்தேன். இனி நான் யாருக்கும் அடிமையல்ல. நான் பாஞ்சாலி. நான் ஆணின் மிச்சமல்ல. நான் பெண். ஆணுக்கு இணையாய் ஆணைப்போல சுதந்திரமாய் வாழப் பிறந்தவள். சுதந்திரக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடி நானாக வலம்வர இருக்கும் பெண்.
வெள்ளி, 15 மே, 2020
புதிய பாஞ்சாலி (பாகம் - 1)
புதிய பாஞ்சாலி
காட்சி: 1
பங்கேற்போர்: பாஞ்சாலி, கண்ணகி, சீதை, நளாயினி, அகலிகை, சந்திரமதி)
(திரை மூடப்பட்டுள்ளது. பின்னணியில் துரியோதனன் குரல் ஒலிக்கிறது.)
துரியோதனன்: இழுத்து வாருங்கள் அந்த பாஞ்சாலியை. என் அடிமைகளின் மனைவியான அவள் இன்றுமுதல் அரசியல்ல என் அடிமை. இழுத்துவா துச்சாதனா! என் அருமைத் தம்பியே, அவளை இழுத்து வந்து என் காலடியில் போடு. அவளது ஆடைகளைக் களைந்து அவளது திமிரை அடக்குவோம். அவளை இழுத்துவா!
(திரை விலகுகின்றது. மேடையின் ஓரத்தில் பாஞ்சாலி அழுதுகொண்டிருக்கிறாள்.)
பாஞ்சாலி: ஐயோ! நான் என்ன செய்யப் போகிறேன். இதிலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன். நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் இந்த நிலை. இத்தனை மனிதர்கள் நிறைந்த இந்த அவையில் நான் என் கற்பைப் பறிகொடுக்கப்போகிறேன். இதைவிட ஒரு கொடுமை ஒரு பொண்ணின் வாழ்வில் நிகழ்ந்திடக் கூடுமா? நான் என்ன செய்வேன்? இந்த செய்தியைக் கேட்டும் கூட என் உயிர் போகாமல் உயிநோடு நிற்கின்றேனே? ஐயோ! என்னை மீட்க யாராவது வர மாட்டார்களா? ஐயோ…ஐயோ….
(கண்ணகி, சீதை, நளாயினி, அகலிகை, சந்திரமதி மேடைக்கு வருகின்றனர்.)
சீதை : உன் அழுகையை நிறுத்து
அனைவரும்: ஆம் உன் அழுகையை நிறுத்து.
பாஞ்சாலி: நீங்கள்… யார்?
சீதை : நான்தான் மிதிலையின் மைதிலியாய் பிறந்து காட்டிலேயே என் காலத்தைக் கழித்த சீதை.
கண்ணகி : சிலம்பைக் கையிலேந்தி, நினத்தைக் கண்ணிலேந்தி, மதுரையை எhpத்த கண்ணகி நான்.
அகல்யா: நான்… செய்யாத தவறுக்காக கல்லாய் மாற்றப்பட்ட அகலியை நான்.
நளாயினி: தன் கற்பை அடகு வைத்து என் கற்பை சோதித்த கணவனை கூடையில் சுமந்து பரத்தை வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி நான்.
பாஞ்சாலி: அப்படியானால் தாங்கள்?
சந்திரமதி: நான் சந்திரமதி. என் கதையும் உன் கதை போன்றது தான். கணவனின் சூதாட்டத்தால் நான் நாட்டையும், வசதியான வாழ்வையும் இழந்ததோடு பெற்றபிள்ளையையும் பறிகொடுத்து அவனை நல்லடக்கம் செய் கூட முடியாமல் தவித்தவள் நான்.
பாஞ்சாலி: ஓ நீங்கள் தானா அந்த மங்கையற்கரசிகள். பார்த்தீர்களா என் நிலையை. இதிலிருந்து நான் எப்படி தப்பிப்பேன். எனக்கு விமோச்சனமே கிடையாதா? என்னை இந்நிலையிலிருந்து மீட்டெடுக்க யார் வருவார்? ஐயோ நான் என்ன செய்வே. பேசாமல் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.
அனைவரும்: நிறுத்து பாஞ்சாலி. உன் அழுகையை நிறுத்து. என் செய்வது என யோசி.
பாஞ்சாலி: நான் என்ன செய்வது? ஒரு பெண்ணான நான் இப்படியொரு சூழலில் அழுவதைத் தவிர என் செய்ய முடியும்?
சீதை: ஓ… அழுதால் தப்பி விட முடியுமா?
பாஞ்சாலி: முடியாதுதான் ஆனால் வேறு என்ன செய்ய முடியும்?
கண்ணகி: ஏன் முடியாது? நீ நினைத்தால் எல்லாம் முடியும்.
பாஞ்சாலி: நான் ஒரு பெண் . என்னை வந்து யாராவது மீட்டால்…
நளாயினி: இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இரட்சகருக்காய் காத்திருக்கப் போகிறாய்? எவரது உதவியுமின்றி உன்னை நீயே காத்திட முயற்சி செய் பாஞ்சாலி. உன்னால் முடியும். பு+கம்பமாய் மாறு! கிளர்ந்து எழு!
பாஞ்சாலி: என்ன…? இது பேச்சுக்கு வேண்டுமானால் சாpவரும். நடைமுறையில் சாத்தியமற்றது. என்னை விடுங்கள் இங்கிருக்கும் தாங்கள் யாராவது கோபம் கொண்டு எழுந்தீர்களா? வாழ்க்கையோடு போராடினீர்களா? பொறுமையின் சிகரமாய் இருந்தீர்கள். அதனால் தான் தெய்வீகப் பெண்ணாக புராணங்களின் பக்கங்களில் நிலைத்திருக்கிறீர்கள்.
சீதை: (அலட்சியமாக) தெய்வீகப்பெண்கள். தெய்வமென உயர்த்திப் பிடித்துக் கொண்டாடும் இந்த சமூகம் சாதாரண மனிதியாக வாழ விடுவதே இல்லை பாஞ்சாலி. பூப்போன்றவள். நிலம் போன்றவள், தெய்வீகமானவள்…. இவையெல்லாம் நம்மை வீழ்;த்தும் ஆயுதங்கள் பாஞ்சாலி.
அகலிகை: ஆனால், அதனை உணராமல் எங்கள் வாழ்வில் எங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளில் பொறுமை காத்தோம்.
சீதை: கணவனிருக்கும் இடமே என் கோவிலென எண்ணி, இன்பத்திலும், துன்பத்திலும் துணையிருக்க ராமனோடு காட்டில் காய்ந்தேன் நான். ஆனால் அவரோ ஊhpன் முன்னே என் தூய்மையைக் கேள்வி கேட்டார். முதல் முறையே அதனை நான் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தவிர்த்து அவரது சோதனைக்கு உடன்பட்டேன். கடைசியில் கருவில் குழந்தைகளோடு காட்டிற்கு விரட்டப்பட்டேன் நான்.
கண்ணகி: என்னை மணந்து கொண்ட கோவலன் வேறு ஒரு பெண்ணை நாடிய அந்நாளிலேயே தடுத்திருக்க வேண்டும் நான் அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, பின் என் வாழ்வை இழந்ததற்காக மதுரையையே அழித்தேன் நான்.
சந்திரமதி: என் கணவர் நல்லவர் தான் உத்தமர்தான். ஆனால் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து என்னையும் தவிஜக்கவிட்டார். சூதில் பகடையைத் தொடுமுன்னே அவரைத் தடுத்து எதிர் கேள்விக் கேட்டிருக் வேண்டும் நான். அதைச் செய்யத காரணத்தால் இறுதியில் பெற்ற மகனையே இழந்து அனாதையானேன்.
பாஞ்சாலி: அப்படியானால், ஆண்களை நம்பக் கூடாதா? அவர்களை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?
அகலிகை: இல்லை பாஞ்சாலி அது அப்படியில்லை. ஆணும் பெண்ணும் இணைந்ததே பிரபஞ்சம். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இணையாக வாழப்பிறந்தவர்கள். யாரும் ஆளப்பிறந்தவர் இல்லை.
நளாயினி: அடங்கப்பிறந்தவரும் இல்லை.
அகலிகை: ஆம். நாம் நாமாக வாழப்பிறந்தவர்கள். அதை மறந்ததாலே பெண்ணினம் ஓயாத அடக்குதலுக்கு ஆளாகின்றது.
நளாயினி: என் கற்பைச் சோதிக்க என் கணவர் விபச்சாhpயின் வீட்டிற்குச் சென்றார். தன் கணவாpன் உருவிலிருந்த இந்திரனை அறியால், அவரோடு இணைந்துவிட்டால் அகல்யா. இதில் அறிந்தே என் கணவர் செய்தது சோதனை. மனதறியாமல் உடலளவில் உபயோகிக்கப்பட்ட அகலிகை கற்பிழந்தவள், பாவி, அதற்கு தண்டனையாக சாபம் வேறு. என்ன நியாயம் சொல் பாஞ்சாலி
கண்ணகி: பாஞ்சாலி பல வேளைகளில் ஆண்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் பெண்கள் உடலாலும் மனதாலும் பல துன்பங்களுக்கு ஆளாகிறாள் பெண். இது ஆணினத்தின் தவறு அல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் தவறு.
சீதை: அந்தத் தவறுகள் நடக்கும் போது இரட்சகரைத் தேடி, கண்ணீர் சிந்தி, மௌனம் காத்து தவறுகளைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது போதும் பாஞ்சாலி. யாரோ காப்பரென காத்திருந்த பெண்களின் கதை பழங்கதை ஆகட்டும். நீ புதிய பிரவேசம் எடு. புதிய சகாப்தம் படை. எழு பாஞ்சாலி.
அனைவரும்: ஆம் உன் கண்ணைத் துடைத்துக்கொள் உன்னில் எழும் கோப அக்கினியை உன் கண்ணீர் அணைத்துவிடக் கூடும். கண்களைத் துடைத்து, அச்சத்தை விடுத்து எனக்கு நீயே துணை என நிரைத்து எடுந்திடு பாஞ்சாலி. உன் அச்சத்திலிருந்து எழு, உன் மடமையிலிருந்து எழு, உன் அறியாமையிலிருந்து எழு. பெண்ணால்; எல்லாம் கூடும் என உலகிற்கு உணர்த்திட எழு.
சங்க காலத்தில் போர் நிகழ்ந்தமைக்கான காரணங்கள்
உலகில் தோன்றிய மனிதன் இயற்கையோடு போராட தொடங்கியது முதலே இவ்வுலகில் போர் தொடங்கிவிட்டது. முதலில் தன்னைத் தாக்க வரும் விலங்குகலோடு போரிட்டு தன்னை, தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொண்டான். பின் இனக்குழுவாக வாழத்தொடங்கிய பின் தன் இனத்தை காக்க போரடினான். நிலவுடைமை தோன்றிய பின்னர் தன் நிலப்பரப்பை விரிவு செய்ய, அண்டை நிலத்தாரோடு போரிடத்தொடங்கினான். மனிதன் மண் மேல் கொண்ட ஆசையால் உருக்கொண்ட போர்கள் இன்றளவும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இன்று நிலம் மட்டுமின்றி அதிகாரத்திற்காகவும், ஆசைக்காகவும், மதத்தின் பெயராலும் பற்பல போர்கள் நடந்துகொண்டுள்ளன. இன்றைய காலத்திலேயே இச்சூழல் எனில் வீரயுகம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் எண்ணிறந்த போர்கள் நடைபெற்றன. அக்காலத்தில் போர் நடைபெற காரணமாக இருந்தவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1. கால் நடைகளான ஆடு, மாடுகளை கவரவும், காக்கவும் போர் நடைபெற்றது.
2. எல்லையை விரிவு படுத்தவும், காக்கவும் போர் நடத்தப்பட்டது.
3. பிற நாட்டு வளத்தைக் கவர நடத்தப்பட்டது.
4. தன் தன்மானத்தி காக்க போர் நடைபெற்றது.
5. சிற்றரசுகளைக் கவர போர் நடந்தது,
6. அரசாட்சியைக் கைப்பற்ற போர் நடைபெற்றது.
7. ஒரு அரசரின், சிற்றரசரின் மகளை மணம் முடிக்க முயற்சித்து போர் நடந்தது.
7. ஒரு அரசரின், சிற்றரசரின் மகளை மணம் முடிக்க முயற்சித்து போர் நடந்தது.
இணைப்பு:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...