முட்டி மோதி குரல் எழுப்ப,
கண்களும் கைகளும்
கடப்போர் பற்றிக் கதை பேச,
மண்ணை வாரியும், சொல்லை வீசியும்
சண்டை சச்சரவுகள் ஓயாது தொடர்ந்திட,
கண்ணீர், புன்னகை, ஆத்திரம், அழுகை
அத்தனையும் தீர்க்கவென
நாளும் ஒரு கோலம் கொள்ளும்
தெருக் குழாயடிகள் காணாமல் போனதால்...
இரத்த அழுத்தத்திற்கும்
மன அழுத்தத்திற்கும்
மாத்திரைகளை விழுங்குகிறாள் என் அன்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக