இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 மே, 2020

குழாயடி மருத்துவம்


வரிசை கட்டி நின்ற குடங்கள்
முட்டி மோதி குரல் எழுப்ப,
கண்களும் கைகளும்
கடப்போர் பற்றிக் கதை பேச,
மண்ணை வாரியும், சொல்லை வீசியும்
சண்டை சச்சரவுகள் ஓயாது தொடர்ந்திட,
கண்ணீர், புன்னகை, ஆத்திரம், அழுகை
அத்தனையும் தீர்க்கவென
நாளும் ஒரு கோலம் கொள்ளும்
தெருக் குழாயடிகள் காணாமல் போனதால்...
இரத்த அழுத்தத்திற்கும்
மன அழுத்தத்திற்கும்
மாத்திரைகளை விழுங்குகிறாள் என் அன்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...