காளை
ஈஸ்வரனுக்கு வீட்டில் காலடி எடுத்து வைக்கவே சங்கடமாக இருந்தது. வேலை முடிந்து வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான். வேகமாய், சத்தம் கக்கிக் கொண்டே வரும் அவனது புல்லட் ஓசை வீட்டை நெருங்கும் போது மஞ்சள் முகத்தோடு வாசலில் வந்து சிhpக்கும் அம்மா காமாட்சியை இன்று காணவில்லை. காலணிகளைக் கழற்றி எறியும் வரையும் அவள் எட்டிப்பார்க்கவே இல்லை. அம்மாவும் டீவியப் பார்த்திருக்குமோ? இதை யோசிக்கும்போதே ஈஸ்வருக்கு வயிறெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இனி நின்று கொண்டே இருந்து பயனில்லை. வேறு வழியே இல்லை என மனதிற்குள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல எட்டிப்பார்த்தான். ஒரு மூலையில் கிடந்த வயர் கட்டிலில் அம்மாவும் அப்பாவும் எதையோ தொலைத்ததைப் போல அமர்ந்திருந்தனர். அப்பத்தா மட்டும் கீழே உட்கார்ந்து செல்லத்தில் வெற்றிலையைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் நிற்பது? சரிஉள்ளே போகலாம் என காலை எடுத்து வீட்டிற்குள் வைத்ததுதான் தாமதம் வேமாய் பறந்து வந்த அப்பத்தாவின் கைத்தடிக் கம்பு சட்டென ஒலியெழுப்பி அவன் காலடியில் விழுந்தது. அதிர்ந்துபோய் நின்றுவிட்டான். ஈஸ்வரன் வருவதை அறியாது வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அப்பாவும், அம்மாவும் அப்பத்தாவின் தடி எழுப்பிய சத்தத்தில் சுதாரித்து எழுந்தனர். அப்பாவின் பார்வை கொட்டிய நெருப்பில் பற்றிய சறுகாய் தன்னை உணர்ந்தான் ஈஸ்வரன்.
“ஏன் ஐயா! புடிச்சு உத்தியோகத்துக்குப் போயிட்டா, பழசு எல்லாம் மறந்து போகுமோ? அங்கின இருக்க போட்டாவப் பாருங்க, எங்க ஐயா பக்கத்துல நிக்கிற காளையப் பாரும். அது நம்ம குலசாமின்னுட்டுத் தொpயாதா? உங்க அண்ணன் காளைய அடக்கப்போயிதான் ஒரே அடியாப் போனாரு. ஆனா, அதுக்காக நான் என்னைக்காவது துளி கண்ணீரு சிந்திருப்பேனா? என் ராசா வீரனாப் போய் சேந்தான்னுப் பொருமையா, கவுரதையா மீசைய முறுக்கிப்பேன். ஏன்னா காளை நம்ம சாமிப்பு. அதெல்லாம் மறந்து போச்சோ? ஏன் மூனு வருசத்துக்கு முன்னாடி இந்த காக்கி உடுப்பப் போடுறதுக்கு முன்னாடி பொpய புடியாளா இருந்தவந்தானே நீ? இப்ப எல்லம் மறந்து போச்சோ?” அப்பா கேட்கக் கேட்க விழி பிதுங்கி நின்ற ஈஸ்வரன் மெல்லக் குரல் எடுத்து, “இல்லப்பா… அது வந்து… சட்டப்படி….” வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிய மகனைப் பார்த்த தந்தை கோபம் அடங்காதக் குரலோடு, “நிறுத்துப்பு. உங்க காரணம் ஒன்னுந் தேவையில்ல. படிச்சிட்டா, எல்லாம் பொpயாளா ஆயிடுறீக. புடிச்சு நம்ம குடிய உயர்த்துவீகன்னு நம்பித்தான் படிக்க வச்சு வேலைக்கு அனுப்புறோம். ஆனா வேலைக்குப் போனதும் எல்லாம் மறந்திடுது. குடும்ப வழக்கம் என்ன? பாரம்பரியம் என்ன? எல்லாங் காத்தோட போயிடுது.
“ஏன் எங்க மூத்தவரு கதை என்னாச்சு? கஷ்டப்பட்டுப் படிக்க வச்சு ஒத்த மகன ஆளாக்க நெனச்சாரு. சோறு போடுற புஞ்சைய வித்துப் படிக்க வச்சாரு. படிச்சதும் அவனுக்குப் பவுசு வந்துருச்சு. வீட்டுக் குலசாமியா கம்பீரமா நின்னுட்டுருந்த காளைக்கு சோறுபோட மடிச்சான். மூத்தவரும் ஜில்லாவுக்கே பிடிபடாத மாடுன்ன வாசி அத ஊரூராக் கூட்டிப்போயி வெளாடவச்சு அதுக்குண்டான மருவாதையால காளையக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. அதுலையும் மண்ணப் போட இந்த பாவிப்பய கவுரமண்டு சட்டம் போட்டுச்சு. நம்ம காளைய நாம் அடைஞ்சு விளையாடுறதும், கட்டி அனைச்சு அதோட கொஞ்சுறதும் தப்புன்னு சொல்லி உத்தரவு போட்டுச்சு. காளையோட வௌயாடுறது நமக்கும் அதுக்குமான சொந்தத்தக் கொண்டாடுறதுன்னுப் புரியாம ஏதோ ஊரு பேரு தொpயாதவனெல்லாம் வந்து கேஷு கொடுத்தான். அத்தோட எங்கண்ணன் மனசொடஞ்சு போயிட்டாரு. ராசாவாட்டம் ஊட்டி வளத்தக் காளைக்கு வக்கப்புல்லு போடக் கூட முடியாம நின்னாரு. இதுதான் சாக்குன்னு மாட்டக் கொண்டு சந்தையில வித்துட்டு வந்துட்டது எங்கண்ணம் பெத்த தாpசு. ஐயோ! எஞ்சாமி போச்சேன்னு யாருக்கிட்டயும் பேசாம, திங்காம உங்காம கெடந்து அந்த கொறவட்டுலயே மூனான்னாலு மூச்சடங்கிப் பேனாரு.
“இதையெல்லாம் பாத்துத்தான் என்னால ஆகாத காலம் வந்தாலும் எஞ்சாமியக் காப்பத்த உங்கக்கிட்டக் கை நீட்டக் கூடாதுன்னுட்டு, முட்டித் தேய அந்த காஞ்சக்காட்ட உழுது, என்னாலான வரும்படியப் பாக்குறேன். புரிஞ்சதாப்பு. உங்கக்கிட்ட நாங்க காசுபணங் கேக்கல. ஆனா எம்ம மருவாதையக் கெடுத்துப்புடாத. எங்கப்பு தாங்காத்தக் காளை, சாமிக்கிட்டப் போனதும், அதுக்குச் செல வச்சு வௌக்குப் பொட்டு சாமியா கும்பிட்டாரு. ஏங்கண்ணன் காளைய வித்துச் சோறுதிங்கப் பொறுக்காம, அத கசாப்புக்கடையில கறியாக்கு முன்ன தன் மூச்சவிட்டாரு. அவுக வழியிலதான் நான் மாடா உழைச்சு எங்காளைய சாமியாக் கும்புடுறேன். ஆனா, எம்பரம்பரையில வந்த நீ கையெடுத்தக் கும்புட வேண்டிய சாமிய கம்பெடுத்து அடிச்சு அசிங்கப்படுத்திட்ட. காலையிலயிருந்து டீவியில அதப்பாத்து ஊரே எங்கிட்ட வந்து எளவு கேக்குற மாதிரி கேக்குது. ஊம்மப் பாக்கவே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது. எம்மூஞ்சிலயே முழிக்காதீரும். அப்புறம் அப்பம்புள்ளைங்கிறது இல்லாமப் போயிடும்.” தன் முகத்தையேப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கோபத்தை வார்த்தைகளாய்க் கொட்டிவிட்டு புறவாசல் பக்கம் போன அப்பாவைப் பார்த்துக் கொண்டே நின்ற ஈஸ்வரன் அப்படியே வெளியே போய் திண்ணையில் அமர்ந்து தூணோரமாய் சாய்ந்து கொண்டான்.
காலையில் நடந்ததெல்லாம் அவன் கண்முன் படமாக ஓடியது. நம் பாரம்பாரிய விளையாட்டான சல்லிக்கட்டை விளையாடக் கூடாது எனவும், அதில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன என்றும் கூறி எங்கிருந்தோ வந்தவன் நீதிமன்றத்தில் போய் தடை வாங்கினான். இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து மூன்று ஆண்டுகளாய் அரசியல் செய்து விளையாடின கட்சிகள். ஆனால் தீர்வு ஒன்றும் கிடைப்பதாய்த் தெரியவில்லை. இனி இந்த ஓட்டு வியாபாரிகளை நம்பி பயனில்லை என்று உணர்ந்த ஒவ்வொரு தமிழனும் வீதிக்கு வந்து போராடினான். அந்தப் போராட்டத்தின் நியாயம் ஈஸ்வரனுக்குப் புரியாமலில்லை. ஆனால் ஒரு காவல்துறைப் பணியாளராகத் தன் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் அவனுக்கு. போராட்டம் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும் கூட்டத்தோடு ஒருவனாய் நின்றான் ஈஸ்வரன். காலை பத்துமணி இருக்கும். ஒரு காளைக் கூட்டத்தோடு போராட்டத்திற்கு ஊர்வலமாய் வந்தனர் இளைஞர்கள் சிலர். காளை மிரண்டு ஓடி, அதை யாரும் பிடித்து இழுத்தால் கூட சட்டத்தை மீறியதாய் அரசாங்கத்தின் மீது கேள்வி வந்துவிடும் எனப் பயந்த மேலிடம் மேல் அதிகாரியிடம் காரசாரமாய் பேச, அவர் அந்தக் கோபத்தைக் காவலர்கள் மீது கொட்டினார். காளையோடு சேர்த்து அந்த இளைஞர்களைக் கைது செய்ய உத்தரவு பரந்தது. கடமையே கண்ணாகி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தனர் காவலர்கள். அந்த இடமே கலவர பூமியானது. மிரண்ட மாடு இடத்தைவிட்டு அசைய மறுத்து முரண்டு பிடிக்க, மேலதிகாரியின் அதட்டல் காதில் குடைச்சல் கொடுக்க, அந்தக் கம்பீரமான காளையின் பின்புறத்தில் தன் கட்டுப்பாட்டையும் மீறி ஓங்கி ஒரு அடி வைத்தது அவனது லத்தி. அது தடமாய்ப் பதிய, வலியில் அம்மா… என காளை குரலெடுத்துக் கத்த, நிகழ்ந்த அனைத்தையும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்ப, ஈஸ்வரனின் இரக்கமற்ற செயல் அன்றைய விவாதப் பொருளானது. தன் செயலுக்காய் தன்னையே நொந்து கொண்டவனாய் நிகழ்ந்தவற்றை அசைபோட்டுக் கொண்டே தூணோடு தூணாய் இருந்த ஈஸ்வரனை வீட்டின் அருகில் உள்ள கொட்டத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த மாயனின் குரல் சுயநினைவிற்கு வரச்செய்தது.
……………………………………………………………
மாயனுக்குத் தண்ணி காட்டி, அதன் முகத்தோடு முகம் புதைத்துப் பிராயச்சித்தம் கேட்ட மகனின் கண்ணீரை ஜன்னல் வழியாப் பார்த்துக் கண்கலங்கினாள் காமாட்சி. அவளின் கலங்கிய கண்களுக்கு இடையில் மங்கலாய்த் தெரிந்தன திண்ணையில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஈஸ்வரனின் தொப்பியும், காக்கிச் சட்டையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக