இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தமிழ வரலாறும் பண்பாடும் வினா வங்கி - 1[சங்க காலம்]

  1.  அரசன் கோ என்று அழைக்கப்பட்டான்.
  2. இளவரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்? இளங்கோ
  3. நிலையான புகழைப் பெற்ற மன்னன் அரசன் அழைக்கப்பட்டான்? மன்னன்
  4. உயர்ந்த நிலையை எட்டியவனை எவ்வாறு அழைத்தனர்? வேந்தன்
  5. பல வெற்றிகளைப் பெற்றுக் குறுநில மன்னர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவன் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கொற்றவன்
  6. பேரரசனுக்கு ஒப்பானவன் யார்? கொற்றவன்
  7. மன்னனின் ஆட்சியாண்டு அவ்வாறு கணக்கிடப்படுகிறது? மன்னன் முடிசூட்டிய நாளிலிருந்து
  8. மன்னனுக்குரிய சிறப்புச் சின்னங்கள் யாவை? முடி, கொடி, வெண் கொற்றக்குடை, முரசு
  9. சங்ககாலத்தில் எத்தகைய வாரிசுமுறை பின்பற்றப்பட்டது? தந்தை வழித் தாய முறை
  10. இளம்வயதில் அரசாட்சி பெற்ற மன்னர்கள் - கரிகாற் சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
  11. சங்ககால நிர்வாகத் தலைமையகம் எது? அரசவை
  12. அரசவையின் வேறு பெயர்கள் யாவை? இருக்கை, ஓலக்கம், வேந்தவை
  13. அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?ஆலோசகர்கள், காவிதிமாக்கள்
  14. அரசர்கள் கலந்தாலோசிக்க இருந்த குழுக்கள் யாவை? எண்பேராயம், ஐம்பேராயம்
  15. எண்பேராய உறுப்பினர்கள் யாவர்? காரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவோர்.
  16. ஐம்பேராயத்தில் இடம்பெற்றோர் யாவர்? அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்
  17. அரசின் பெருங்கணக்கர் கரணத்தியலவர் எனப்பட்டனர்
  18. அரசின் பொருட்களைப் பாதுகாப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கனகச்சுற்றம்
  19. நாட்டைக்காவல் செய்யும் காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கடைக்காப்பாளர்
  20. குதிரைப்படையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? இவுளிமறவோர்
  21.   நாட்டின் முழு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
  22. நாட்டின் உட்பிரிவு [பகுப்பு] எவ்வாறு அழைக்கப்பட்டது? கோட்டம்
  23. கோட்டங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? கூற்றங்கள் [கோட்டமே கூற்றம் என்றும் கூறுவர்]
  24. கூற்று ஊராகப் பகுக்கப்பட்டது.
  25. ஊரில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அமைப்புக்கள் யாவை? மன்றம், பொதியில், அம்பலம்,  மாசானம்
  26. குடிமக்களின் தேவைகளை மன்னனிடம் எடுத்துச்செல்லும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?  மாசானம்
  27. மாசானம் என்போர் யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி அல்லது பிரதிநிதிகளின் குழு
  28. ஊர்களில் அமைதிகாக்கும் நிறுவனங்கள் யாவை? பொதியில், மன்றம்
  29.  வரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை
  30. மக்கள் மகசூலில் எத்தனை பங்கை வரியாக செலுத்தினர்? ஆறில் ஒரு மடங்கு
  31. மக்கள் வரி செலுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வாரியம்
  32. பயன்பாட்டில் இருந்த போர் கருவிகள்? அம்பு, வில், வாள், வேல், குந்தகம், கோல், கைக்கோடாரி, எஃகம், முசலம்
  33. வீரர்கள் தன் உடலைக் காக்க எவற்றைப் பயன்படுத்தினர்? கடுவாத்தோலாம் செய்யப்பட்ட கட்டை, இரும்பு மெய்மறைகள்
  34. தடுப்புப்போருக்குப் பயன்பட்டவை எவை? கையில் வைத்திருக்கும் கேடயம், கவச உடை
  35. பயன்பாட்டில் இருந்த தேர் வகைகள் யாவை? தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித் தேர்
  36. காலாட்படை வகைகள் யாவை? வாள், வேல், வில் படை, தூசிப்படை, தார் படை, முன்னணிப்படை, கூழைப்படை
  37. படையின் இறுதியில் வரும் பாதுகாவற் படை எது? கூழைப்படை 
  38. நிறைய தேர் வைத்திருந்த மன்னன் யார்? பல்தேர் இளஞ்சேட் சென்னி
  39. கடற்கொள்ளையர்களை முறியடித்த மன்னன்யார்? கடற்பிறக்கோட்டிய குட்டுவன்
  40. ஈழநாட்டின் மீது போரிட்டு வென்ற சோழ மன்னன் யார்?         திருமாவளவன் [இரண்டாம் கரிகாற் சோழன்]
  41. சேர நாட்டின் தலைநகர் - வஞ்சி, கரூர்
  42. சேர நாட்டின் துறைமுகம் - தொண்டி
  43. சோழ நாட்டின் தலை நகரம் - உறையூர்
  44. சோழ நாட்டின் துறைமுகம் - பூம்புகார்
  45. சோழ நாட்டின் வடக்கிலும் வடமேற்கிலும் எந்நாடு இருந்ததாக புறப்பாடல் காட்டுகின்றது? ஈழன் ஆண்ட ஈழ நாடு
  46. சேர, பாண்டிய நாட்டின் எல்லையை வரையறுக்கும் நூல் எது? பெருந்தொகை
  47. சோழ நாட்டின் எல்லை எந்த நூலில் குறிக்கப்பட்டு உள்ளது?                   சோழ மண்டலச் சதகம்
  48. சேர நாட்டை ஆண்ட மரபினர் யாவர்? சேரலாதன் மரபினர், பொறையர் மரபினர்
  49. சேரலை ஆண்டவர்கள் சேரர்கள்.இதில்  சேரல் என்பதன் பொருள்? மலை
  50. வஞ்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்டவர்கள் எம்மரபினர்? பொறையர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...