இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2020

அணியியல் - வழுவும் வழுவமைதியும்

  1. அணியிலக்கண வழுக்கள் எத்தனை? 9 [  பிரிபொருட் சொற்றொடர், மாறுபடு பொருள்மொழி, மொழிந்தது மொழிதல், கவர்படு பொருள்மொழி, நிரனிறை வழு, சொல்வழு, யதிவவழு, செய்யுள் வழு, சந்தி வழு
  2. பிரிபொருட் சொற்றொடர் என்றால் என்ன?                                   ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவேறு  தொடர்களைக் கூட்டி நோக்க  வேறு பொருள் தருமாறு அமைப்பது வழுவாகும்.
  3. பிரிபொருட் சொற்றொடர் வழுவமைதி எது?                                              கள்ளுண்டு களித்த நிலையிலும், பித்துப் பிடித்த நிலையிலும் கூற்று நிகழ்கையில் தொடர்பற்றவை கூறுவது வழுவமைதி ஆகும்.
  4. மாறுபடு பொருள் மொழி என்றால் என்ன?                                                                 ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொற்பொருளொடு, பின்னர் வருவன மாறி வருவது.  [உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறி பின்னர்  உன்னை ஒத்தவர்கள் நல்லவர்கள் என்பது.]
  5. மாறுபடு பொருள் மொழியின் வழுவமைதி யாது?                                           காமம், அச்சம் கைமிக மாறுபடு பொருள் மொழி வரலாம்.
  6. மொழிந்தது மொழிவு என்றால் என்ன?                                                           முன்னர் கூறியதையே மீண்டும் கூறி, அதனால் வேறு பொருள் வழங்காது இருப்பது  வழுவாகும். கூறியது கூறல் என்பது இதுவாகும்.
  7. மொழிந்தது மொழிவின் வழுவமைதி யாது?                                                 விரைவு, சிறப்பு ஆகிய இரு காரணங்களால் மொழிந்தது மொழிதல் வருதல் வழுவமைதியாகும்.
  8. கவர்படு பொருள் மொழி என்றால் என்ன?                                                             ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்த வந்த சொல் அதனையே ஐயுறும் வகையில் பல பொருளுக்குப் பொருந்தி வருவது கவர்படு பொருள் ஆகும்.  [அரிமருவு சோலை. இதில் வரும் அரி என்பது சிங்கமா, திருமாலா, வண்டா என்ற தெளிவு இல்லாமல் இருப்பது.]
  9. கவர்படு பொருள் மொழி எப்போது வழுவமைதியாக வரும்?                      வழு இல்லாமல், தெளிவாக வரும் இடத்தில் கவர்படு பொருள் மொழி ஏற்பதற்கு உரித்து. [உலகைக் காப்பது அரியே - அரி பல பொருள் தரினும்  இத்தொடரின் பொருள் திருமாலையே உணர்த்துவது வழுவமைதியாகும்.]
  10. நிரனிறை வழு என்றால் என்ன?                                                                                வரிசைப்பட வைக்கும் இடத்தில் முன்னே ஒரு வரிடையில் வைத்து, பின் உள்ளவற்றை வரிசை மாற்றி வைப்பது. [படைத்தல், காத்தல், அழித்தல் முதல் வரிசையில் வைத்து மறு வரிசையில் சிவன், திருமால், பிரம்மன் என மாற்றி அமைப்பது வழுவாகும்.]
  11. நிரனிறை வழுவமைதி யாது?                                                                             உய்த்துணரும் வந்தால் நிரனிறை வழுவமைதியாகும்.
  12. சொல் வழு என்றால் என்ன?                                                                                                 சொல்லதிகாரம் கூறும் சொல்லிலக்கண விதிகளுக்கு மாறாமல் வர வேண்டும். விதிக்கு உட்படாமல் மாறி வருவது வழு ஆகும்.
  13. சொல் வழுவமைதி யாது?                                                                                    வழுவாக வந்தாலும் சான்றோர் ஏற்பவை வழுவமைதியாகும். [மரூவுச்சொல் முதலானவை]
  14. யதிவழு என்றால் என்ன?                                                                                                 யதி வழு என்பது சீர் அமைப்பில் உருவாகும் வழுவாகும். சீர்கட்டமைப்புச் சிதைத்தல் யதி வழுவாகும்
  15. யதி வழுவமைதி யாது?                                                                                                  வகையுளியில் யதி வழுவமைதியாக ஏற்கப்படும். வகையுளி என்பது செய்யுளின் ஓசைக்கும் இலக்கணத்திற்கும் ஏற்ப தேவைப்படின் சீரைப் பிரிப்பது வழுவமைதியாக ஏற்கப்படும். 
  16. செய்யுள் வழு என்றால் என்ன?                                                                          யாப்பின் உறுப்புக்களான சீர், தளை, அடி முதலானவை யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தாமல் வருவது செய்யுள் வழு ஆகும். 
  17. செய்யுள்வழு ஏற்கப்படும் இடங்கள் யாவை?                                                ஆரிடம் சொல்லும் சூழலில் செய்யுள் வழு ஏற்கப்படும். [இருடிகள் சொல்வது, மந்திரம் சொல்வது]
  18. சந்தி வழு என்றால் என்ன?                                                                                          எழுத்ததிகார புணர்ச்சி விதிக்குப் பொருந்தாது பாடுவது சந்தி வழு ஆகும். [ஒற்று மிகும் இடத்தில் மிகாமலும், ஒற்று வரா இடத்தில் மிகுந்தும் அமைப்பது]
  19. சந்தி வழு அமைதி யாது?                                                                                              இரண்டாம் வேற்றுமைக்குப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லெழுத்து வர  ஏனைய வேற்றுமைகளோடு மாறுபட்டு வரும்.
  20. செய்யுள் மலைவுகள் யாவை?                                                                                          இட மலைவு, காலமலைவு, கலை மலைவு, உலக  மலைவு, நியம மலைவு, ஆகம மலைவு
  21. இட மலைவு என்றால் என்ன?                                                                                   மலை, நாடு, ஆறு ஆகிய மூன்றும் இடம் என்பதில் பொருந்தும். அவை முறைப்படி அமைய வேண்டு. அவ்வாறு இல்லாமல் ஒன்றன் இயல்பை மற்றொன்றாக மாற்றி உரைப்பது இட மலைவு ஆகும்.
  22. கால மலைவு என்றல் என்ன?                                                                           பொழுதும் [சிறு பொழுது], பருவமும் [பெரும்பொழுது] காலம் ஆகும்.   அவை முறைப்படி அமைய வேண்டும். இரு பொழுதை மற்றொரு பொழுதைப்போலும், ஒரு பருவத்தை மற்றொரு பருவத்தைப் போலும் மாற்றி அமைப்பது கால மலைவு ஆகும்.
  23. கலை மலைவு என்றால் என்ன?                                                                                    இன்பம்,  செல்வம் இரண்டையும் பொருந்தத் தழுவி வரும் கலைகளாம் ஆயக்கலைகள் 64 ஆகும். கலைகள் பொருத்தமின்றி வருது கலை மலைவு
  24. உலக மலைவு என்றால் என்ன?                                                                              உலகம் என்பது இந்த உலக வழக்கு , நடைமுறை , ஒழுகலாறு ஆகும். இந்த உலக வழக்கிற்கு மாறாக இலக்கியம் புனைவது உலக மலைவு ஆகும்.
  25. நியாய மலைவு என்றால் என்ன?                                                                               நியாயம் என்பது உலக காட்சி, அனுமானம், உவமை, நூல்கள் முதலான அளவைகளாம் பொருளின் செயல்பாட்டைக் கூறுவது. [தத்துவம், சித்தாந்தம்]. இந்த நியாயங்கள் முரண்படுவது நியாய மலைவு ஆகும்.
  26. ஆகம மலைவு என்றால் என்ன?                                                                                     மனு முதலான அறம் கூறும் நூல் ஆகும். இவை ஒருவருக்கு உரியதாகக் கூறும் அறத்தை மற்றதற்கு உரியதாக மாற்றிக் கூறுவது ஆகம மலைவு ஆகும். [ இல்லறத்தாருக்கு உரிய அறம் எனக் கூறியதை துறவிக்கு உரியதாக மாற்றிச் சொல்வது]
  27. ஆறு மலைவுகளும் வழுவமைதியாகக் கொள்ளப்படும் இடம் யாது?   நாடக வழக்கில் ஆறு மலைவுகளும் வழுவாகக் கொள்ளப்படா. வழு அமைதியாகவே கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...