- அணியிலக்கண வழுக்கள் எத்தனை? 9 [ பிரிபொருட் சொற்றொடர், மாறுபடு பொருள்மொழி, மொழிந்தது மொழிதல், கவர்படு பொருள்மொழி, நிரனிறை வழு, சொல்வழு, யதிவவழு, செய்யுள் வழு, சந்தி வழு
- பிரிபொருட் சொற்றொடர் என்றால் என்ன? ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவேறு தொடர்களைக் கூட்டி நோக்க வேறு பொருள் தருமாறு அமைப்பது வழுவாகும்.
- பிரிபொருட் சொற்றொடர் வழுவமைதி எது? கள்ளுண்டு களித்த நிலையிலும், பித்துப் பிடித்த நிலையிலும் கூற்று நிகழ்கையில் தொடர்பற்றவை கூறுவது வழுவமைதி ஆகும்.
- மாறுபடு பொருள் மொழி என்றால் என்ன? ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொற்பொருளொடு, பின்னர் வருவன மாறி வருவது. [உன்னை ஒத்தவர்கள் யாரும் இல்லை எனக் கூறி பின்னர் உன்னை ஒத்தவர்கள் நல்லவர்கள் என்பது.]
- மாறுபடு பொருள் மொழியின் வழுவமைதி யாது? காமம், அச்சம் கைமிக மாறுபடு பொருள் மொழி வரலாம்.
- மொழிந்தது மொழிவு என்றால் என்ன? முன்னர் கூறியதையே மீண்டும் கூறி, அதனால் வேறு பொருள் வழங்காது இருப்பது வழுவாகும். கூறியது கூறல் என்பது இதுவாகும்.
- மொழிந்தது மொழிவின் வழுவமைதி யாது? விரைவு, சிறப்பு ஆகிய இரு காரணங்களால் மொழிந்தது மொழிதல் வருதல் வழுவமைதியாகும்.
- கவர்படு பொருள் மொழி என்றால் என்ன? ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்த வந்த சொல் அதனையே ஐயுறும் வகையில் பல பொருளுக்குப் பொருந்தி வருவது கவர்படு பொருள் ஆகும். [அரிமருவு சோலை. இதில் வரும் அரி என்பது சிங்கமா, திருமாலா, வண்டா என்ற தெளிவு இல்லாமல் இருப்பது.]
- கவர்படு பொருள் மொழி எப்போது வழுவமைதியாக வரும்? வழு இல்லாமல், தெளிவாக வரும் இடத்தில் கவர்படு பொருள் மொழி ஏற்பதற்கு உரித்து. [உலகைக் காப்பது அரியே - அரி பல பொருள் தரினும் இத்தொடரின் பொருள் திருமாலையே உணர்த்துவது வழுவமைதியாகும்.]
- நிரனிறை வழு என்றால் என்ன? வரிசைப்பட வைக்கும் இடத்தில் முன்னே ஒரு வரிடையில் வைத்து, பின் உள்ளவற்றை வரிசை மாற்றி வைப்பது. [படைத்தல், காத்தல், அழித்தல் முதல் வரிசையில் வைத்து மறு வரிசையில் சிவன், திருமால், பிரம்மன் என மாற்றி அமைப்பது வழுவாகும்.]
- நிரனிறை வழுவமைதி யாது? உய்த்துணரும் வந்தால் நிரனிறை வழுவமைதியாகும்.
- சொல் வழு என்றால் என்ன? சொல்லதிகாரம் கூறும் சொல்லிலக்கண விதிகளுக்கு மாறாமல் வர வேண்டும். விதிக்கு உட்படாமல் மாறி வருவது வழு ஆகும்.
- சொல் வழுவமைதி யாது? வழுவாக வந்தாலும் சான்றோர் ஏற்பவை வழுவமைதியாகும். [மரூவுச்சொல் முதலானவை]
- யதிவழு என்றால் என்ன? யதி வழு என்பது சீர் அமைப்பில் உருவாகும் வழுவாகும். சீர்கட்டமைப்புச் சிதைத்தல் யதி வழுவாகும்
- யதி வழுவமைதி யாது? வகையுளியில் யதி வழுவமைதியாக ஏற்கப்படும். வகையுளி என்பது செய்யுளின் ஓசைக்கும் இலக்கணத்திற்கும் ஏற்ப தேவைப்படின் சீரைப் பிரிப்பது வழுவமைதியாக ஏற்கப்படும்.
- செய்யுள் வழு என்றால் என்ன? யாப்பின் உறுப்புக்களான சீர், தளை, அடி முதலானவை யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தாமல் வருவது செய்யுள் வழு ஆகும்.
- செய்யுள்வழு ஏற்கப்படும் இடங்கள் யாவை? ஆரிடம் சொல்லும் சூழலில் செய்யுள் வழு ஏற்கப்படும். [இருடிகள் சொல்வது, மந்திரம் சொல்வது]
- சந்தி வழு என்றால் என்ன? எழுத்ததிகார புணர்ச்சி விதிக்குப் பொருந்தாது பாடுவது சந்தி வழு ஆகும். [ஒற்று மிகும் இடத்தில் மிகாமலும், ஒற்று வரா இடத்தில் மிகுந்தும் அமைப்பது]
- சந்தி வழு அமைதி யாது? இரண்டாம் வேற்றுமைக்குப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லெழுத்து வர ஏனைய வேற்றுமைகளோடு மாறுபட்டு வரும்.
- செய்யுள் மலைவுகள் யாவை? இட மலைவு, காலமலைவு, கலை மலைவு, உலக மலைவு, நியம மலைவு, ஆகம மலைவு
- இட மலைவு என்றால் என்ன? மலை, நாடு, ஆறு ஆகிய மூன்றும் இடம் என்பதில் பொருந்தும். அவை முறைப்படி அமைய வேண்டு. அவ்வாறு இல்லாமல் ஒன்றன் இயல்பை மற்றொன்றாக மாற்றி உரைப்பது இட மலைவு ஆகும்.
- கால மலைவு என்றல் என்ன? பொழுதும் [சிறு பொழுது], பருவமும் [பெரும்பொழுது] காலம் ஆகும். அவை முறைப்படி அமைய வேண்டும். இரு பொழுதை மற்றொரு பொழுதைப்போலும், ஒரு பருவத்தை மற்றொரு பருவத்தைப் போலும் மாற்றி அமைப்பது கால மலைவு ஆகும்.
- கலை மலைவு என்றால் என்ன? இன்பம், செல்வம் இரண்டையும் பொருந்தத் தழுவி வரும் கலைகளாம் ஆயக்கலைகள் 64 ஆகும். கலைகள் பொருத்தமின்றி வருது கலை மலைவு
- உலக மலைவு என்றால் என்ன? உலகம் என்பது இந்த உலக வழக்கு , நடைமுறை , ஒழுகலாறு ஆகும். இந்த உலக வழக்கிற்கு மாறாக இலக்கியம் புனைவது உலக மலைவு ஆகும்.
- நியாய மலைவு என்றால் என்ன? நியாயம் என்பது உலக காட்சி, அனுமானம், உவமை, நூல்கள் முதலான அளவைகளாம் பொருளின் செயல்பாட்டைக் கூறுவது. [தத்துவம், சித்தாந்தம்]. இந்த நியாயங்கள் முரண்படுவது நியாய மலைவு ஆகும்.
- ஆகம மலைவு என்றால் என்ன? மனு முதலான அறம் கூறும் நூல் ஆகும். இவை ஒருவருக்கு உரியதாகக் கூறும் அறத்தை மற்றதற்கு உரியதாக மாற்றிக் கூறுவது ஆகம மலைவு ஆகும். [ இல்லறத்தாருக்கு உரிய அறம் எனக் கூறியதை துறவிக்கு உரியதாக மாற்றிச் சொல்வது]
- ஆறு மலைவுகளும் வழுவமைதியாகக் கொள்ளப்படும் இடம் யாது? நாடக வழக்கில் ஆறு மலைவுகளும் வழுவாகக் கொள்ளப்படா. வழு அமைதியாகவே கொள்ளப்படும்.
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 19 நவம்பர், 2020
அணியியல் - வழுவும் வழுவமைதியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக