- மடக்கணி என்பது யாது? எழுத்துக் கூட்டம் [சொல், தொடர், அடி] இடைவெளி விட்டு, திரும்பத் திரும்ப வந்து வேறு பொருளைத் தருவது.
- மடக்கணியின் பொது வகைமைகள் எத்தனை? 4 [ஓரடி, ஈரடி, மூவடி, நான்கடி - பெரும்பான்மை நான்கடியாக வரும்]
- மடக்கின் உள் வகைகள் எத்தனை? 7 [ஆதிமடக்கு, இடை மடக்கு, கடை மடக்கு, ஆதியுடன் இடைமடக்கு, ஆதியுடன் கடை மடக்கு, இடையொடு கடை மடக்கு, முழுவதும் மடக்கு]
- அடி முழுதும் மடக்கி வருதல் எத்தனை வகைப்படும்? ஈரடி மடக்கு, மூவடி மடக்கு, நான்கடி மடக்கு
- ஓரெழுத்து மடங்கி வருதலும் உண்டு.
- சித்திரக்கவி எத்தனை வகைப்படும்? 12 [கோமூத்திரி, கூடசதுக்கம், மாலை மாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், கழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகம்.
- கோமூத்திரி என்றால் என்ன? பசு நடந்து கொண்டே நீ விடுகையில் அந்நீர் தாரை ஒழுகி நெளிந்து இருப்பதைப் போல, இரு வரிகளில் மேலும் கீழும் ஒரு எழுத்து விட்டு, ஒரு எழுத்தை மாற்றி வாசிக்கப் பொருள் படுவது.
- கூட சதுக்கம் என்றால் என்ன? ஈற்று அடி எழுத்துக்கள் ஏனைய மூன்று அடிக்குள்ளும் ஒழிந்து நிற்பது.
- மாலை மாற்று என்பது யாது? செய்யுளை முதலில் இருந்து வாசிப்பது போல் இறுதியில் இருந்து வாசித்தாலும் ஒரே வடிவில் இருப்பது. [நீவாத மாதவா தாமோக ராகமோ / தாவாத மாதவா நீ - இதைத் தலைகீழாக வாசித்தாலும் மாறாது]
- எழுத்து வருத்தனம் என்றால் என்ன? பாடலில் எழுத்தை அடுக்குவது. கம், நகம், கநகம், கோகநகம் என அடுத்தடுத்த சொற்களில் எழுத்தை அடுக்குவது.
- நாகபந்தம் என்றால் என்ன? இரு பாம்புகளை வரைந்து இரு வெண்பாக்களை அந்த நாகத்திற்குள் அடுக்குவது.
- வினாவுத்தரம் என்றால் என்ன? பல வினாக்களை அடுக்கி எழுதி அதன் விடைகளை இறுதியில் ஒன்றாகத் தருவது.
- காதை தரப்பு என்றால் என்ன? ஒரு பாடலில் உள்ள எழுத்துக்களைத் தேடி எடுத்து வேறு ஒரு சிறு பாடலை உருவாக்குவது.
- கரந்துறைப் பாட்டு என்றால் என்ன? ஒரு செய்யுளை முழுவதும் எழுதி, அதன் இறுதி சொல்லுக்கு முதல் எழுத்து தொடங்கி ஒரு எழுத்து இடையிட்டு ஒரு எழுத்து என பாடல் முழுதிலும் நீக்கிவிட்டு வாசிக்க வேறு ஒரு செய்யுள் உருவாவது.
- சக்கர பந்தம் என்றால் என்ன? சக்கரம் போல் படம் போட்டு அதற்குள் செய்யுள் எழுதுவது.
- நான்கரைச்சக்கரம் என்றால் என்ன? சக்கர பந்தத்தில்வட்டம் வரைந்து நான்கு ஆரக்கால் வரைந்து எழுதுவது நான்கரைச் சக்கரம் ஆகும்.
- கழிக்குளம் என்றால் என்ன? ஒரு செய்யுளை எட்டு எட்டு நான்கு வரியாக்கி மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் ஏறும் வண்ணம் அமைத்துப் பாடுவது.
- சருப்பதோ பத்திரம் என்றால் என்ன? நான்கு வாசல் உடைய மாளிகையில் எந்த வழியாக ஏறவோ, இறங்கவோ செய்வது போல எங்கிருந்து தொடங்கினாலும் பொருள் தருவது.
- அக்கரச் சுதகம் என்றால் என்ன? ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் வேறு வேறு பொருள்பட வருவது. இதை அட்சர நீக்கம் என்றும் கூறலாம்.
- நீரோட்டம் என்றால் என்ன? இதழ் ஒட்டும் உயிர், மெய் எழுத்துக்களைத் தவிர்த்து செய்யுள் எழுதுவது.
- ஒற்று பெயர்த்தல் என்றால் என்ன? ஒரு மொழியும், தொடர்மொழியுமாக வரும் ஒன்றை அதன் பொருளை ஒழித்து வேறு பொருள்பட அமைப்பது.
- மாத்திரை சுருக்கம் என்றால் என்ன? ஒரு சொல்லின் ஒரு மாத்திரையைக் குறைக்க அது வேறு பொருள் தருவதாக மாறுவது.
- மாத்திரை வருத்தனம் என்றால் என்ன? ஒரு சொல்லின் மாத்திரையைக் கூட்டி வேறு பொருள் வருவது.
- முரசபந்தனம் என்றால் என்ன? முரசு போல படம் வரைந்து அதனுள் செய்யுள் எழுதுவது.
- திரிபாதி என்றால் என்ன? மூன்றெழுத்துக் கூட்ட அணி என்று அழைக்கப்படும். மூன்று எழுத்து கொண்ட சொல்லில் இடை எழுத்தை விடுத்த முதல் இறுதி எழுத்தைக் கூட்ட ஒரு பொருளும், முதல் எழுத்தை நீக்கி இடை, இறுதி எழுத்தைக் கூட்ட வரும் சொல் வேறு ஒரு பொருளையும் தருவது.
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 17 நவம்பர், 2020
சொல்லணிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக