- வேற்றுப்பொருள் வைப்பணி என்றால் என்ன? ஒன்றை சொல்லும் போது அதனைச் சொல்லத் தொடங்கி பின் உலகறிந்த வேறொரு செய்தியைச் சொல்லி முடிப்பது.
- வேற்றுப்பொருள் வைப்பணி எத்தனை வகைப்படும்? 8 [முழுதும் சேறல், ஒருவழி சேறல், முரணித் தோன்றல், சிலேடையின் முடித்தல், கூடா இயற்கை, கூடும் இயற்கை, இருமை இயற்கை, விபரீதப்படுத்தல்]
- வேற்றுமையணி என்றால் என்ன?தம்முள் ஒப்புமையுடைய இரு பொருள்களைச் சொல்லி பின் அவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை கூற்றாலும் [வெளிப்படையாக], குறிப்பாலும் விளக்குவது.
- வேற்றுமையணி எத்தனை வகைப்படும் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர்? 3 [ஒரு பொருள் வேற்றுமைச் சமம், இருபொருள் வேற்றுமைச் சமம், உயர்ச்சி வேற்றுமை]
- வேற்றுமையணி எவற்றோடு கூடி வரும்? குணம், பொருள், சாதி, தொழில்
- விபாவனையணி என்றால் என்ன? ஒன்றைப்பற்றிக் கூற அதற்கு உலகறிந்த காரணத்தால் விளக்காமல் வேறொரு காரணத்தால் விளக்குவது. இது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் வரும்.
- ஒட்டணி என்றால் என்ன? கவிஞன் கூறக்கருதிய பொருளை மறைத்து அதைப் புலப்படுத்த அதனோடு ஒத்த ஒன்றால் உரைப்பது.
- உவமப்போலி எனப்படும் அணி எது? ஒட்டணி
- ஒட்டணி எத்தனை வகைப்படும்? 4
- அதிசய அணி என்றால் என்ன? உலக நடைகடவாமல், உயர்ந்தோர் வியக்கும் வண்ணம் அமைவது.
- அதிசய அணி எத்தனை வகைப்படும்? 6 [பொருள், குணம், தொழில், ஐயம், துணிவு, தெரிவு]
- தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மையை நீக்கி அதன் மீது தான் கருதும் பிறிதொன்றை ஏற்றிச் சொல்வது
- தற்குறிப்பேற்றம் எத்தகு பொருட்கள் மேல் ஏற்றிச் சொல்லப்படும்? பெயர்பொருள் [அசையும் பொருள்], பெயர் அல் பொருள் [அசையா பொருள்]
- தற்குறிப்பேற்ற அணி உவம உருபுகளோடும் வரும்
- ஏதுவணி என்றால் என்ன? இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சுட்டிச் சொல்வது ஏதுவணியாகும்.
- ஏது என்பதன் பொருள் யாது? காரணம்
- காரக ஏது அணி என்றால் என்ன? காரகம் என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. ஆக்கல், அழித்தல் என்ற இருவகை நிலையில் காரகம் வரும்.
- காரக ஏதுவணி எத்தனை வகைப்படும்? 4 [ கருத்தா காரக ஏது, பொருட்காரக ஏது, கரும காரக ஏது, கருவி காரக ஏது]
- ஞாபக ஏது - காரகத்தில் வராதவை
- அபாவ ஏது - ஒன்று இல்லாமை
- சித்திர ஏது - வியப்பைத் தரும் ஏது அணி
- நிரல் நிறுத்து இயற்றுதல் ------------------- அணியே [நிரல்நிறை]
- நிரல் நிறை அணி என்பது நிரல்நிறைப் பொருல் கோள் சார்ந்தது.
- சுவையணி என்றால் என்ன? உள்ளத்து நிகழும் உணர்வு உடலில் எண்வகை மெய்ப்பாடுகளாக வெளிப்படுவத.
- சுவை அணி எத்தனை வகைப்படும்? 8 [வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை]
- தன் மேம்பாட்டுரை அணி என்றால் என்ன? ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்வது. [நெடுமொழி கூறல் இதனுடன் ஒத்தது.]
- பரியாயவணி என்றால் என்ன? கருதியதைச் சொல்லாமல் அதை உணர்த்தும் பிரிதொன்றால் உரைப்பது.
- சமாகித அணி என்றால் என்ன? முன்பு கூற முயன்ற சொல்லின் பயன் அதனால் முடிவுறாமல் வேறு ஒன்றால் முடிப்பது.
- சமாகித அணியை கொ. இராமலிங்கத் தம்பிரான் எவ்வாறு குறிப்பிடுகிறார்? துணைப்பேறு
- உதாவத்தணி என்பதன் வேறு பெயர் யாது? வீறுகோளணி
- சிறப்பு, பொருள், குணம் ஆகிய மூன்றால் உண்டாகும் உண்மையை மறுத்து உரைப்பது என்ன அணி? அவநுதியணி
- சிலேடையணி என்றால் என்ன? ஒரு வகை சொற்றொடர் பல பொருள் தருவது.
- சிலேடையணி தமிழில் எவ்வாறு அழைக்கப்படும்? இரட்டுற மொழிதல்
- சிலேடையணி எத்தனை திறப்படும்? 2 [செம்மொழி சிலேடை, பிரிமொழி சிலேடை]
- சிலேடையணி எத்தனை வகைப்படும்? 7 [ஒருவினை, பலவினை, முரண்வினை, நியமம், நியம விலக்கு, விரோதம், அவிரோதம்]
- விசேடவணி என்றால் என்ன? குணம், தொழில், சாதி, பொருள், உறுப்பு இவற்றில் குறைபடும் தன்மையில் அவற்றின் மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடவணி
- "கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து ஒருபொருள் உரைப்பது எது? ஒப்புமைக் கூட்டவணி
- ஒன்றுக்கொன்று முரண்பட்ட சொல்லும் பொருளும் தமக்குள் உள்ள மாறுபடும் தன்மையை வெளிப்படுத்துவது எது? விரோதவணி
- மாறுபடு புகழ் என்றால் என்ன? ஒன்றைப் பழிப்பதற்கு மற்றொன்றைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை
- பழிப்பது போல புகழ்வது என்ன அணி? புகழாப் புகழ்ச்சியணி
- நிதரிசனம் என்பதன் பொருள் யாது? கண்ணால் நேரில் காண்பது போன்ற காட்சி
- நிதரிசன அணி எத்தனை வகைப்படும்? புகழ்தோன்றப் பாடுவது, தீமை தோன்றப் பாடுவது என இரு வகைப்படும்
- வினை, பயன் என்னும் இரு பொருளுக்கு ஒரு முடிவு மட்டும் வருவது எந்த அணி? புணர்நிலை அணி
- ஒன்றன் பொருளை மற்றொன்றோடு பரிமாறிக்கொள்வது என்ன அணி? பரிவருத்தனை அணி
- இவருக்கு இது நடக்கட்டும் எனத் தாம் கருதியதைச் சொல்வது என்ன அணி? வாழ்த்தணி
- சங்கீரணவணி என்றால் என்ன? பல அணிகள் தம்முள் பொருந்தி வருவது.
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 16 நவம்பர், 2020
பொருளணிகள் - 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு