இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2020

தொல்காப்பியம் - புணரியல்

 

1) மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை ?

                    22

2) மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? 

                    24

3) [எழுத்தின் அடிப்படையில்] புணர்ச்சி  எத்தனை வகைப்படும் ? 

        4 (உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் மெய், மெய் முன் உயிர்)

4) சொல் வகையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

                4 (பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர்,                             தொழிலொடு தொழில்)

5) இயல்புப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

        1

6) திரிபுப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

            3 (மெய்திரிதல், மிகுதல், குன்றல்)

7) அடையொடு தோன்றினாலும் புணர் நிலைக்கு உரியவை யாவை ? 

            நிறுத்தல் சொல் குறித்து 

8) மருவுச் சொல் புணர்தலுக்குச் சான்று தருக ? 

                உன் + தந்தை - உந்தை

9) பொருளடிப்படையிலான புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

            2 (வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி)

10) புணர்ச்சியில் இடம் பெறும் வேற்றுமை உருபுகள் எத்தனை? 

                6 (ஐ, ஒடு, கு, இல், அது, கண்)

11. எந்த வேற்றுமை உருபுகள் வருமிடத்தில் ஒற்று மிகும்?

                வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வேற்றுமை உருபுகள் [கு, கண்]

12. ஆறாம் வேற்றுமை உருபு அகர ஈற்று சொல்லொடு புணர்ந்தால் நிகழ்வது?

                அகரம் கெடும்

13. பெயரோடு வேற்றுமை உருபு எங்கு புணரும்?

                பெயரின் பின் வரும்

14. பெயர் சுட்டு நிலைகள் எத்தனை வகைப்படும்? 

                2 [உயர்திணை, அஃறிணை]

15. பெயர், வேற்றுமையோடு வரும் சாரியை எங்கு புணரும்? 

                பெயர் மற்றும் வேற்றுமைக்கு இடையில் சாரியை வரும்.

16. தொல்காப்பியம் குறிப்பிடும் சாரியைகள் எத்தனை?

                 9 [இன்ன பிறவும்]

17. தொல்காப்பியம் குறிப்பிடும் சாரியைகள் யாவை?

                இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன்

18. ஆகார ஈற்று சொல்லோடு இன் சாரியைப் புணர நிகழ்வது என்ன?

                 இன் சாரியையின் இகரம் கெட்டும், கெடாமலும் வரும்.                                                              [ஆ+இன்+ஐ=ஆனை அல்லது ஆனினை]

19.  அளவைக் குறிக்கும் சொல்லை அடுத்து இன் வருகையில் நிகழ்வது யாது?

                 இன் -இல் உள்ள ன் - ற் ஆக மாறும். [பத்து+இன்+உழக்கு = பதிற்றுழக்கு]

20. சுட்டெழுத்து முதலாகிய ஐ முன் வற்றுச் சாரியை வர நிகழ்வது?

                வகர மெய் கெடும். [அவை + வற்று = அவற்று]

21. நான்காம் வேற்றுமை உருபை அடுத்து இன் சாரியை வர நிகழ்வது?

                னகரம் றகரமாக மாறும் [பூவின்+கு = பூவிற்கு]

22. நாள்மீன் [பரணி] க்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்லின்                     இடையே ஆன் வர நிகழ்வது யாது?

                ஆனில் உள்ள னகரம் றகரம் ஆகும்                                                                                                [பரணி+ஆன்+கொண்டான் = பரணியாற் கொண்டான்]

23. அகர ஈற்றை அடுத்து அத்து சாரியை வர நிகழ்வது யாது?

                அகரம் கெடும். 

24. ஐகாரத்தை ஈறாகக் கொண்ட சொல்லை அடுத்து இக்குச் சாரியை வர

          நிகழ்வது யாது?

                    இகரம் கெடும். 

25. இகரத்தை ஈறாகக் கொண்ட சொல்லை அடுத்து இக்குச் சாரியை வர

          நிகழ்வது யாது?

                    இகரம் கெடும். 

26. வல்லெழுத்தின் முன் அக்குச்சாரிசை வர நிகழ்வது யாது? 

                அக்கு-வில் உள்ள க்கு கெடும் [குன்றம் + அக்கு+ குடி - குன்றக்குடி]

27. அம் சாரியையை அடுத்து க, ச, த வர நிகழ்வது யாது?

                க, ச, த - ங, ஞ, ந ஆக மாறும். [பீர்க்கு+அம்+கொடி-பீர்க்கங்கொட்]

28. அம் சாரியையை அடுத்து மெல்லெழுத்தும், இடையின எழுத்தும் வர நிகழ்வது யாது?

                 அம்-இல் உள்ள ம் கெடும் [புளி+அம்+நுனி=புளியநுனி]

29. இன் சாரியை எந்த வேற்றுமை உருபோடு வராது?  

                    இன் உடன் வராது.

30. சாரியையின் இயல்புகள்

            1. பெயரும் தொழிலும்[வினையும்] பிரிந்து  வருமிடத்தில் சாரியை வரும்.

            2. பெயரும் பெயரும் கூடி வருமிடத்தில் வரும்

            3. வேற்றுமை உருபோடு வரும்.

            4. வேற்றுமை உருபு தொக்கி வருமிடத்தில் வரும்

            5. சொற்களின் இடையே வரும்

            6. சாரியைக்குப் பொருள் கிடையாது.

31. அத்து, வற்று ஈற்றெழுத்து, ஈற்றயல் [இறுதிக்கு முதல்] எழுத்துக் கெட

        நிகழ்வது யாது?

        வருமொழி முதலில் உள்ள வல்லெழுத்து மிகும்

32. எழுத்துச் சாரியைகள் யாவை?

                    காரம், கரம், கான்

33. நெடில் எழுத்துக்களோடு வராத எழுத்துச் சாரியைகள் யாவை?

                    கரம், கான்

34. குறிலுக்கு உரிய எழுத்துச் சாரியைகள் எவை?

                        கரம், காரம், கான்

35. ஐ பெறும் சாரியைகள் யாவை?

                        காரம், கான்

36. நிலை மொழி ஈறு மெய்யாக வருமொழி முதலில் உயிர் வர நிகழ்வது யாது?

                        மெய்யும் உயிரும் கூடி உயிர் மெய் ஆகும்.

37. நிலை மொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிர் வர என்ன நிகழும்?

                        உடம்படு மெய் தோன்றும்

38. புணர்ச்சியில் எழுத்துக்கள் மாறும் போதும் மாறாமல் இருக்கும் போதும்

         நிகழ்வது  யாது? 

                            பொருள் மாறுபடும். [இனியவை பேசு - இனி அவை பேசு]

 







      

                


2 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி. செறிவு மிகுந்த தமிழ் இலக்கண மரபை, இக்காலத் தமிழர்க்கு அறிமுகப் படுத்தும் உங்கள் நோக்கம் மிக நல்லது. எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இந்து நாளிதழில், செவ்வாய் தோறும் வரும் எனது “தமிழ் இனிது” தொடருக்கான தேடலில் உங்கள் தளம் கண்ணில் பட்டது. உங்கள் பணி தொடர்க. “வளரும் கவிதை” https://valarumkavithai.blogspot.com/ எனும் எனது வலைப்பக்கத்தை நேரம் இருக்கும்போது பார்க்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...