- எழுத்துக்கள் பிறக்க அடிப்படையான காற்று எங்கிருந்து தோன்றும்? உந்தி [கொப்பூழ், தொப்பூள்]
- காற்று நிலை பெறும் அல்லது பொருந்தும் இடங்கள் யாவை? தலை, மிடறு [தொண்டை], நெஞ்சு [உரம்]
- எழுத்துப் பிறக்க நிலைக்களன்களாகும் உறுப்புக்கள் யாவை? தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, இதழ்
- 'உந்தி முதலா முந்துவளி தோன்றி' - இதில் முந்துவளி என்பது யாது? வெளிப்படும் ஓசைக்காற்று
- எழுத்துப் பிறக்கக் காரணமான் ஓசைக்காற்றின் வேறு பெயர் யாது? உதாணன்
- உயிர் எழுத்துப் பிறக்கக் காற்று எங்கு பொருந்தி ஒலிக்கும்? மிடறு
- வாயை அங்காத்தலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? அ,ஆ
- அண்பல் நா விளிம்புற பிறக்கும் எழுத்துக்கள் யாவை? இ, ஈ, எ, ஏ, ஐ [5]
- இதழ் குவிந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை? உ, ஊ, ஒ, ஓ, ஔ [5]
- அடி அண்ணத்தை நாவின் அடிப் பொருந்திப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? க, ங
- இடை அண்ணத்தை இடை நாப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ச. ஞ
- அண்ணத்தின் அடிப்பகுதியை நாவின் நுனி பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ட, ண
- அண்ணத்திற்கு அருகில் உள்ள மேற்பல்லின் அடிப்பகுதியில் நுனி நாக்குப் பொருந்தப் பிறப்பவை? த, ந
- நுனி நா அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ற, ன
- நுனி நா அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ர, ழ
- நாவின் விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ல
- நாவின் விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ள
- இதழ்கள் இணைந்து பிறப்பவை யாவை? ப, ம
- பல்லும் இதழும் இணையப் பிறக்கும் எழுத்து யாது? வ
- யகரம் எவ்வாறு பிறக்கும்? மிடற்றிலிருந்து வெளிவரும் காற்று அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும்
- மூக்கில் தோன்றிய காற்று ஒலியோடு பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? மெல்லெழுத்துக்கள்
- சார்ந்து வரின் அல்லது தமக்கியல்பு இல்லாதவை எவை? சார்பெழுத்துக்கள்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 12 அக்டோபர், 2020
தொல்காப்பியம் - பிறப்பியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக