இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2020

தொல்காப்பியம் - பிறப்பியல்

  1. எழுத்துக்கள் பிறக்க அடிப்படையான காற்று எங்கிருந்து தோன்றும்?       உந்தி [கொப்பூழ், தொப்பூள்]
  2. காற்று நிலை பெறும் அல்லது பொருந்தும் இடங்கள் யாவை?                             தலை, மிடறு [தொண்டை], நெஞ்சு [உரம்]
  3. எழுத்துப் பிறக்க நிலைக்களன்களாகும் உறுப்புக்கள் யாவை?                  தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, இதழ்
  4. 'உந்தி முதலா முந்துவளி தோன்றி' - இதில் முந்துவளி என்பது யாது?           வெளிப்படும் ஓசைக்காற்று
  5. எழுத்துப் பிறக்கக் காரணமான் ஓசைக்காற்றின் வேறு பெயர் யாது?   உதாணன்
  6. உயிர் எழுத்துப் பிறக்கக் காற்று எங்கு பொருந்தி ஒலிக்கும்?                            மிடறு
  7. வாயை அங்காத்தலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                  அ,ஆ
  8. அண்பல் நா விளிம்புற பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                           இ, ஈ, எ, ஏ, ஐ [5]
  9. இதழ் குவிந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                                                 உ, ஊ, ஒ, ஓ, ஔ [5]
  10. அடி அண்ணத்தை நாவின் அடிப் பொருந்திப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                 க, ங
  11. இடை அண்ணத்தை இடை நாப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                 ச. ஞ
  12. அண்ணத்தின் அடிப்பகுதியை நாவின் நுனி பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                              ட, ண
  13. அண்ணத்திற்கு அருகில் உள்ள மேற்பல்லின் அடிப்பகுதியில் நுனி நாக்குப் பொருந்தப் பிறப்பவை? த, ந
  14. நுனி நா அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                          ற, ன
  15. நுனி நா அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?           ர, ழ
  16. நாவின்  விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ல 
  17. நாவின் விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ள
  18. இதழ்கள் இணைந்து பிறப்பவை யாவை?                                                                     ப, ம
  19. பல்லும் இதழும் இணையப் பிறக்கும் எழுத்து யாது?                                                       வ
  20. யகரம் எவ்வாறு பிறக்கும்? மிடற்றிலிருந்து வெளிவரும் காற்று அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும் 
  21. மூக்கில் தோன்றிய காற்று ஒலியோடு பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? மெல்லெழுத்துக்கள்
  22.  சார்ந்து வரின் அல்லது தமக்கியல்பு இல்லாதவை எவை? சார்பெழுத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...