இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2020

தொல்காப்பியம் - உருபியல்

 உருபியல்

1) அ, ஆ, உ, ஊ, ஏ,  ஔ பெறும் சாரியை ?

                            இன்

2) அகர இறுதி, பன்மை மற்றும் ‘யா’ என்ற வினாவும் பெறும் சாரியை

வற்றுச் சாரியை

பல  -  பலவற்றை

யா  - ‘ஆ’ - வற்று (யாவற்றை)

3) உகரத்தை இறுதியாக உடைய சுட்டெழுத்துப் பெறும் சாரியை ?

‘அன்’  சாரியைப் பெறும்

அது + அன் + ஐ  - அதனை

இது + அன் + ஐ   - இதனை

4) அவை, இவை என்ற ஐகார இறுதியுடைய சுட்டெழுத்து பெறும் சாரியை ?

வற்றுச் சாரியை (அவை, இவை)

5) ஐகார ஈற்று வினாச் சொல் பெறும் சாரியை

வற்று

யாவை+ஐ  -  யாவற்றை

6) நீ எநும் சொல்  னகர ஒற்றைப் பெறும் ?

‘நீ’ என்பது ‘நி’ என ஆக ‘ன’ பெற்று - ‘நின்’

7) ஓகார இறுதி பெறும் சாரியை

‘ஒன்’ எனும் சாரியை

கோனை, கோனோடு  நச் குறிப்பிடுகிறார்

8) அகர ஆகார இறுதி மரப்பெயர் பெறும் சாரியை

அத்துச் சாரியை பெறும்

1) விள + அத்து + கண் - விளவத்துக் கண்

2) பலா + அத்து + கண் - பலவத்துக்கண்

9) ஞ,ங முன் இன்

ஞ,ங என்ற புள்ளி பெறும் சாரியை 

இன்

உரிஞ் + இன் + ஐ -  உரிஞினை 

உரிஞ் + இன் + ஒடு - உரிஞினொடு

10) அவ், இவ் என்ற வகர இறுதிச் சொல் பெறும் சாரியை

அவை + வற்று + ஐ - அவற்றை

இவை + வற்று + ஐ - இவற்றை

11) தெவ் ® என்ற வகரம் பெறும் சாரியை ?

‘இன்’

தெவ்வினை, தெவ்வினொடு

12) மஃகான் புள்ளி பெறும் சாரியை யாது ?

அத்து

மரம் + அத்து +  ஐ - மரத்தை 

மரம் + அத்து +  ஓடு - மரத்தோடு

13) மகரத்தின் இடையில் வரும் சாரியை யாது ?

மகரத்திற்கு அத்து, இன் என்ற இரண்டும் வரும் 

உரும் + இன் + ஐ - உருமினை

உரும் + இன் + ஓடு - உருமினொடு

14) நும் எனும் இறுதி உடைய சொல் பெறும் சாரியை யாது ?

அத்து, இன் எவற்றையும் பெறாமல் இயல்பாக முடியும்.

15) தாம், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வாறு வரும் ?

                1) நும் என்னும் மகர இறுதி போல

                2) யாம் - எனும் இறுதிசொல் ஆ, எ ஆகும்

                3) ‘ய’ மெய் கெட்டும்

                4) தாமும் நாமும் முதல் நெடில் குறுகும் 

                    தாம் - தம் + ஆம் 

                    நாம் - நம் + ஆம்

16) எல்லாம் என்பது பெறும் சாரியை ?

அத்து, இன், வற்று, சாரியை பெறும்

அதனோடு ‘உம்’ என்பது பொருந்தும்

எல்லாம் + வற்று + உம் - எல்லாவற்றையும் 

எல்லாவற்றுக் கண்ணும் - எல்லாவற்றதும் - இளம்பூரணர்

17) உயர் திணை பெயர்கள் பெறும் சாரியை யாது ?

‘நம்’ எனும் சாரியைப் பெறும். 

எல்லாம் நம்மையும் எல்லா நம்மொடும்

18) எல்லாரும் - படர்க்கை

எல்லீரும் - முன்னிலை

எல்லாரும் எல்லீரும் என்பவை எல்லாம் எல்லீர் என நிற்கும்.  

        இறுதியில் உம் சேரும். 

  இடையில் தம்மும் நும்மும் அடையும், எல்லாம்,  தம்மையும் எல்லீர்                                        நும்மையும் என முடியும். 

19) தான் - யான் எவ்வாறு திரியும் ?

தான் - தன் எனத் திரியும்

யான் - என் எனத் திரியும்

20) அழன், புழன் பெறும் சாரியை ?

அத்து, இன் சாரியைப் பெறும்

அழன்- குளிர் காய்தற்கு வெப்பக்கங்கு இடப்பட்ட மிரப்பனை

புழன் -  இருபாலும் துளையமைந்த நீர் செல்வடிகுழாய் 

        எகின் என்பது எகினினை, எகினத்தை என்று கூறுவர் இளம்பூரணர்

21) ‘ஏமன்’ என்ற எண்ணுப் பெயர்பெறும் சாரியை ?

‘அன்’ சாரியைத் தோன்றும்

ஏழு + அன் + ஐ -  ஏழனை

22) குற்றியலுகம் பெறும் சாரியை ?

குற்றியலுகரம் இறுதி முன் இன் சாரியை பெறும். 

        நாகினை, நாகினொடு

        வரகினை, வரகினொடு

23) தான் யான் எவ்வாறு வரும் ?

தான் - தன்னை (தன்)

யான் -  என்னை (என்)

24) ஒற்று இரட்டல் வரும் இடங்கள் யாவை ?

1) நெடிலின் பின்னர் குற்றுகரங்களுக்கு இன வொற்று 

2) ஒற்று மிகத் தோன்றாத விடம் கு, சு, து, பு -  இரட்டிப்பு

3) நாடு + ஐ - நாட்டை 

4) ஆறு + ஒடு - ஆற்றொடு 

5) சாரியை இல்லாமலும் இயல்பாக வரும்

6) முயிறு என்பது முயிற்று - இளம்பூரணார் குறிப்பிடுகிறார்

25) எண்ணுப் பெயர் பெறும் சாரியை

‘அன்’  சாரியை

ஒன்றனை, இரண்டனை

26) ஒன்று முதல் எட்டு எண்களில் பத்து சேரும் போது பெறும் சாரியை.

‘ஆன்’ - சாரியை

ஒருபஃது + ஆன் + ஐ -  ஒருபானை 

இருபஃது + ஆன் + ஐ -  இருபானை

27) யாது என்ற குற்றுகர இறுதியும், சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழி 

        குற்றுகர  இறுதியும் பெறும் சாரியை யாது ?

‘அன்’ சரியை

யாது + அன் + ஐ  - யாதனை 

அஃது + அன் + ஐ  -  அதனை

28) ஏழாம் வேற்றுமை உருபு எவ்வாறு வரும் ?

1) ஏழாம் வேற்றுமை உருபு (கண்), திசைப் பெயர்களின் முன்னர்

         ‘இன்’ சாரியைப்   பெற்றும் பெறாமல் இயல்பாய் நிற்கும்.

2)  இயல்பான வழி, திசைப் பெயர் இறுதி ‘உ’கரம் கெடும்

   வடக்கு + இன் + கண் - வடக்கின்கண்

   வடக்கு + கண் - வடக்கண்

29) புள்ளி ஈறு உயிர் ஈற்றுச் சொற்கள் எவ்வாறு வரும் ?

புள்ளி ஈறு, உயிர் ஈற்றுச் சொற்கள் வேற்றுமை உருபுகளுடன் 

        பொருந்தி வரும்போது 

  சாரியைப் பெற்றும் பெறாமலும் வரும்.

கூறாத புள்ளியீறு - ண,ய,ர,ல,ள

உயிர்ரீறு   (மண்ணை) மண்ணினை 

    இவையும் சாரியை பெறாதும் பெற்றும் வரும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...