உருபியல்
1) அ, ஆ, உ, ஊ, ஏ, ஔ பெறும் சாரியை ?
இன்
2) அகர இறுதி, பன்மை மற்றும் ‘யா’ என்ற வினாவும் பெறும் சாரியை
வற்றுச் சாரியை
பல - பலவற்றை
யா - ‘ஆ’ - வற்று (யாவற்றை)
3) உகரத்தை இறுதியாக உடைய சுட்டெழுத்துப் பெறும் சாரியை ?
‘அன்’ சாரியைப் பெறும்
அது + அன் + ஐ - அதனை
இது + அன் + ஐ - இதனை
4) அவை, இவை என்ற ஐகார இறுதியுடைய சுட்டெழுத்து பெறும் சாரியை ?
வற்றுச் சாரியை (அவை, இவை)
5) ஐகார ஈற்று வினாச் சொல் பெறும் சாரியை
வற்று
யாவை+ஐ - யாவற்றை
6) நீ எநும் சொல் னகர ஒற்றைப் பெறும் ?
‘நீ’ என்பது ‘நி’ என ஆக ‘ன’ பெற்று - ‘நின்’
7) ஓகார இறுதி பெறும் சாரியை
‘ஒன்’ எனும் சாரியை
கோனை, கோனோடு நச் குறிப்பிடுகிறார்
8) அகர ஆகார இறுதி மரப்பெயர் பெறும் சாரியை
அத்துச் சாரியை பெறும்
1) விள + அத்து + கண் - விளவத்துக் கண்
2) பலா + அத்து + கண் - பலவத்துக்கண்
9) ஞ,ங முன் இன்
ஞ,ங என்ற புள்ளி பெறும் சாரியை
இன்
உரிஞ் + இன் + ஐ - உரிஞினை
உரிஞ் + இன் + ஒடு - உரிஞினொடு
10) அவ், இவ் என்ற வகர இறுதிச் சொல் பெறும் சாரியை
அவை + வற்று + ஐ - அவற்றை
இவை + வற்று + ஐ - இவற்றை
11) தெவ் ® என்ற வகரம் பெறும் சாரியை ?
‘இன்’
தெவ்வினை, தெவ்வினொடு
12) மஃகான் புள்ளி பெறும் சாரியை யாது ?
அத்து
மரம் + அத்து + ஐ - மரத்தை
மரம் + அத்து + ஓடு - மரத்தோடு
13) மகரத்தின் இடையில் வரும் சாரியை யாது ?
மகரத்திற்கு அத்து, இன் என்ற இரண்டும் வரும்
உரும் + இன் + ஐ - உருமினை
உரும் + இன் + ஓடு - உருமினொடு
14) நும் எனும் இறுதி உடைய சொல் பெறும் சாரியை யாது ?
அத்து, இன் எவற்றையும் பெறாமல் இயல்பாக முடியும்.
15) தாம், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வாறு வரும் ?
1) நும் என்னும் மகர இறுதி போல
2) யாம் - எனும் இறுதிசொல் ஆ, எ ஆகும்
3) ‘ய’ மெய் கெட்டும்
4) தாமும் நாமும் முதல் நெடில் குறுகும்
தாம் - தம் + ஆம்
நாம் - நம் + ஆம்
16) எல்லாம் என்பது பெறும் சாரியை ?
அத்து, இன், வற்று, சாரியை பெறும்
அதனோடு ‘உம்’ என்பது பொருந்தும்
எல்லாம் + வற்று + உம் - எல்லாவற்றையும்
எல்லாவற்றுக் கண்ணும் - எல்லாவற்றதும் - இளம்பூரணர்
17) உயர் திணை பெயர்கள் பெறும் சாரியை யாது ?
‘நம்’ எனும் சாரியைப் பெறும்.
எல்லாம் நம்மையும் எல்லா நம்மொடும்
18) எல்லாரும் - படர்க்கை
எல்லீரும் - முன்னிலை
எல்லாரும் எல்லீரும் என்பவை எல்லாம் எல்லீர் என நிற்கும்.
இறுதியில் உம் சேரும்.
இடையில் தம்மும் நும்மும் அடையும், எல்லாம், தம்மையும் எல்லீர் நும்மையும் என முடியும்.
19) தான் - யான் எவ்வாறு திரியும் ?
தான் - தன் எனத் திரியும்
யான் - என் எனத் திரியும்
20) அழன், புழன் பெறும் சாரியை ?
அத்து, இன் சாரியைப் பெறும்
அழன்- குளிர் காய்தற்கு வெப்பக்கங்கு இடப்பட்ட மிரப்பனை
புழன் - இருபாலும் துளையமைந்த நீர் செல்வடிகுழாய்
எகின் என்பது எகினினை, எகினத்தை என்று கூறுவர் இளம்பூரணர்
21) ‘ஏமன்’ என்ற எண்ணுப் பெயர்பெறும் சாரியை ?
‘அன்’ சாரியைத் தோன்றும்
ஏழு + அன் + ஐ - ஏழனை
22) குற்றியலுகம் பெறும் சாரியை ?
குற்றியலுகரம் இறுதி முன் இன் சாரியை பெறும்.
நாகினை, நாகினொடு
வரகினை, வரகினொடு
23) தான் யான் எவ்வாறு வரும் ?
தான் - தன்னை (தன்)
யான் - என்னை (என்)
24) ஒற்று இரட்டல் வரும் இடங்கள் யாவை ?
1) நெடிலின் பின்னர் குற்றுகரங்களுக்கு இன வொற்று
2) ஒற்று மிகத் தோன்றாத விடம் கு, சு, து, பு - இரட்டிப்பு
3) நாடு + ஐ - நாட்டை
4) ஆறு + ஒடு - ஆற்றொடு
5) சாரியை இல்லாமலும் இயல்பாக வரும்
6) முயிறு என்பது முயிற்று - இளம்பூரணார் குறிப்பிடுகிறார்
25) எண்ணுப் பெயர் பெறும் சாரியை
‘அன்’ சாரியை
ஒன்றனை, இரண்டனை
26) ஒன்று முதல் எட்டு எண்களில் பத்து சேரும் போது பெறும் சாரியை.
‘ஆன்’ - சாரியை
ஒருபஃது + ஆன் + ஐ - ஒருபானை
இருபஃது + ஆன் + ஐ - இருபானை
27) யாது என்ற குற்றுகர இறுதியும், சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழி
குற்றுகர இறுதியும் பெறும் சாரியை யாது ?
‘அன்’ சரியை
யாது + அன் + ஐ - யாதனை
அஃது + அன் + ஐ - அதனை
28) ஏழாம் வேற்றுமை உருபு எவ்வாறு வரும் ?
1) ஏழாம் வேற்றுமை உருபு (கண்), திசைப் பெயர்களின் முன்னர்
‘இன்’ சாரியைப் பெற்றும் பெறாமல் இயல்பாய் நிற்கும்.
2) இயல்பான வழி, திசைப் பெயர் இறுதி ‘உ’கரம் கெடும்
வடக்கு + இன் + கண் - வடக்கின்கண்
வடக்கு + கண் - வடக்கண்
29) புள்ளி ஈறு உயிர் ஈற்றுச் சொற்கள் எவ்வாறு வரும் ?
புள்ளி ஈறு, உயிர் ஈற்றுச் சொற்கள் வேற்றுமை உருபுகளுடன்
பொருந்தி வரும்போது
சாரியைப் பெற்றும் பெறாமலும் வரும்.
கூறாத புள்ளியீறு - ண,ய,ர,ல,ள
உயிர்ரீறு (மண்ணை) மண்ணினை
இவையும் சாரியை பெறாதும் பெற்றும் வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக