இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2020

நன்னூல் எழுத்திலக்கணம் - உயிரீற்றுப் புணர்ச்சி

 1. அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துக்களின் பின் வரும் வல்லெழுத்து மிகும்

            அ + பக்கம் = அப்பக்கம்

            இ + பக்கம் = இப்பக்கம்

            உ + பக்கம் = உப்பக்கம் [பழைய வழக்கு]

2.  எ என்ற வினா எழுத்தின் பின் வலி மிகும்

            எ + பக்கம் = எப்பக்கம்

3. அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு என்ற சொற்களுக்குப் பின் வலி மிகும்

            அந்த + பையன் = அந்தப்பையன்

            இந்த + பையன் = இந்தப்பையன்

            எந்த + பையன் = எந்தப்பையன்

            அங்கு + சென்றாள் = அங்குச்சென்றாள்

            இங்கு + சென்றாள் = இங்குச்சென்றாள்

            எங்கு + சென்றாள்  = எங்குச்சென்றாள்

            ஈங்கு + சென்றாள் = ஈங்குச்சென்றாள்

            யாங்கு + சென்றாள் = யாங்குச்சென்றாள்

4. அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்ற சொற்களின் பின் வலி மிகும்

            அவ்வகை + செய்தாள் = அவ்வகைச்செய்தாள்

            இவ்வகை + செய்தாள் = இவ்வகைச்செய்தாள்

            எவ்வகை + செய்தாள் = அவ்வகைச்செய்தாள் 

            அத்துணை + தந்தாள் = அத்துணைத்தந்தாள்

            இத்துணை + தந்தாள் = இத்துணைத்தந்தாள்

            எத்துணை + தந்தாள் = எத்துணைத்தந்தாள் 

5. தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்

               கனா + கண்டேன் = கனாக்கண்டேன்

6. அன்றி இன்றி என்னும் இகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்குப்
             பின் வலி மிகும்     
                  
              அன்றி + கெடும் = அன்றிக்கெடும்         

. 7.  இனி, தனி, அன்றி, இன்றி, மற்ற, நாடு, பொது, அணு, முழு, புது, திரு
                                                                             என்ற சொற்களின் பின் வலி மிகும்

            இனி  + காண்போம் = இனிக்காண்போம்
            தனி + சொல்               =  தனிச்சொல்
            அணு + சிதைவு          = அணுச்சிதைவு
            புது + சட்டை                = புதுச்சட்டை
            திரு + குறள்                  = திருக்குறள்

 8. . அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்

            அப்படி + செல் = அப்படிச்செல்
            இப்படி + போ = இப்படிப்போ
            எப்படி + காண்பேன் = எப்படிக்காண்பேன்

8. ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சொற்களின் பின் வலி மிகும்

            ஆண்டு + செல் = ஆண்டுச்செல்
            ஈண்டு + காண்  = ஈண்டுக்காண்
            யாண்டு + கேள் = யாண்டுக்கேள்

9. என என்னும் இடைச்சொல்லின் பின் வலி மிகும் 

            என + கொண்டாள் = எனக்கொண்டாள் 
10. மிக என்ற சொல் பின் வலி மிகும்

            மிக + கொடியன் = மிகக்கொடியன்

11. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வரும் வலி மிகும்

            வர + கண்டேன் = வரக்கண்டேன்

12. இகர ஈற்று வினை எச்சத்தின் பின் வரும் வலி மிகும்

            பேசி + பார்த்தான் - பேசிப்பார்த்தான்

13. உரி சொற்களின் பின் வரும் வலி மிகும்

            சால + சிறந்தது = சாலச்சிறந்தது
            தவ + பெரியது = தவப்பெரியது
14. திசைப் பெயர்களின் பின் வலி மிகும் 
            கிழக்கு + தெரு = கிழக்குத்தெரு
            வடக்கு + தெரு = வடக்குத்தெரு
            மேற்கு + பக்கம் = மேற்க்குப்பக்கம்
            தெற்கு + சாலை = தெற்குச்சாலை

15. எல்லா, அனைத்து - சொற்களின் பின் வரும் வலி மிகும்
            எல்லா + சூழல் = எல்லாச்சூழல்
            அனைத்து + பிள்ளைகள் = அனைத்துப்பிள்ளைகள்

16. மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய போன்ற அகர ஈற்று வினையடைகளின்                                                                                                  பின் வலி மிகும்
            மெல்ல + சிரி = மெல்லப்சிரி
            உரக்க + பேசு = உரக்கப்பேசு 

17. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வரும் வலி மிகும்
            பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
            தீ + பிடித்தது = தீப்பிடித்தது

18. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்

            அறியா + குழந்தை  = அறியாக்குழந்தை
            பாரா + கடவுள் = பாராக்கடவுள்

19. வன் தொடர் குற்றியலுகரத்தின் பின் வரும் வலி மிகும்

            சுட்டு + கொண்டாள் = சுட்டுக்கொண்டாள்
            பாட்டு + பாடினாள் = பாட்டுப்பாடினாள்

20. திரு, நடு, முழு பொது அனு போன்ற முற்றியலுகரத்தின் பின் வலி மிகும் 

                நடு + பகல் - நடுப்பகல்
                திரு + செல்வன் = திருச்செல்வன்
21 மென் தொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும்

                சங்கு + சக்கரம் = சங்குச்சக்கரம்

. எண்ணுப் பெயர்களில் அரை, பாதி, எட்டு, பத்து சொற்களின் பின் வலி மிகும்

            அரை +பங்கு       = அரைப்பங்கு
            பாதி + கிணறு    = பாதிக்கிணறு
            எட்டு + தொகை = எட்டுத்தொகை
            பத்தி + பாட்டு     = பத்துப்பாட்டு











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...