5. தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்
6. அன்றி இன்றி என்னும் இகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்குப்
. 7. இனி, தனி, அன்றி, இன்றி, மற்ற, நாடு, பொது, அணு, முழு, புது, திரு
என்ற சொற்களின் பின் வலி மிகும்
இனி + காண்போம் = இனிக்காண்போம்
தனி + சொல் = தனிச்சொல்
அணு + சிதைவு = அணுச்சிதைவு
புது + சட்டை = புதுச்சட்டை
திரு + குறள் = திருக்குறள்
8. . அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்
அப்படி + செல் = அப்படிச்செல்
இப்படி + போ = இப்படிப்போ
எப்படி + காண்பேன் = எப்படிக்காண்பேன்
8. ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சொற்களின் பின் வலி மிகும்
ஆண்டு + செல் = ஆண்டுச்செல்
ஈண்டு + காண் = ஈண்டுக்காண்
யாண்டு + கேள் = யாண்டுக்கேள்
9. என என்னும் இடைச்சொல்லின் பின் வலி மிகும்
என + கொண்டாள் = எனக்கொண்டாள்
10. மிக என்ற சொல் பின் வலி மிகும்
மிக + கொடியன் = மிகக்கொடியன்
11. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வரும் வலி மிகும்
வர + கண்டேன் = வரக்கண்டேன்
12. இகர ஈற்று வினை எச்சத்தின் பின் வரும் வலி மிகும்
பேசி + பார்த்தான் - பேசிப்பார்த்தான்
13. உரி சொற்களின் பின் வரும் வலி மிகும்
சால + சிறந்தது = சாலச்சிறந்தது
தவ + பெரியது = தவப்பெரியது
14. திசைப் பெயர்களின் பின் வலி மிகும்
கிழக்கு + தெரு = கிழக்குத்தெரு
வடக்கு + தெரு = வடக்குத்தெரு
மேற்கு + பக்கம் = மேற்க்குப்பக்கம்
தெற்கு + சாலை = தெற்குச்சாலை
15. எல்லா, அனைத்து - சொற்களின் பின் வரும் வலி மிகும்
எல்லா + சூழல் = எல்லாச்சூழல்
அனைத்து + பிள்ளைகள் = அனைத்துப்பிள்ளைகள்
16. மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய போன்ற அகர ஈற்று வினையடைகளின் பின் வலி மிகும்
மெல்ல + சிரி = மெல்லப்சிரி
உரக்க + பேசு = உரக்கப்பேசு
17. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வரும் வலி மிகும்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
18. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்
அறியா + குழந்தை = அறியாக்குழந்தை
பாரா + கடவுள் = பாராக்கடவுள்
19. வன் தொடர் குற்றியலுகரத்தின் பின் வரும் வலி மிகும்
சுட்டு + கொண்டாள் = சுட்டுக்கொண்டாள்
பாட்டு + பாடினாள் = பாட்டுப்பாடினாள்
20. திரு, நடு, முழு பொது அனு போன்ற முற்றியலுகரத்தின் பின் வலி மிகும்
நடு + பகல் - நடுப்பகல்
திரு + செல்வன் = திருச்செல்வன்
21 மென் தொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும்
சங்கு + சக்கரம் = சங்குச்சக்கரம்
. எண்ணுப் பெயர்களில் அரை, பாதி, எட்டு, பத்து சொற்களின் பின் வலி மிகும்
அரை +பங்கு = அரைப்பங்கு
பாதி + கிணறு = பாதிக்கிணறு
எட்டு + தொகை = எட்டுத்தொகை
பத்தி + பாட்டு = பத்துப்பாட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக