இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2020

பொருள் இலக்கண நூல்கள்

  1. அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் பேசும் இலக்கண நூல் எது? தொல்காப்பியம்
  2. அகப்பொருள் இலக்கண நூல்கள் யாவை? இறையனார் அகப்பொருள், தமிழ் நெறி விளக்கம், நம்பியகப்பொருள். களவியல் காரிகை, மாறனகப்பொருள்.
  3. இறையனார் அகப்பொருள் ஆசிரியர் யார்? இறையனார் [சிவபெருமான் என்று கூறுவர். குறுந்தொகையில் உள்ள கொங்குதேர் வாழ்க்கை என்னும் பாடலைப் பாடியதும் இறைவனே என்பர். இரண்டையும் இயற்றியவர் இறையனார் என்னும் கடைச்சங்கப்புலவர் என்றும் கூறுவர்.]
  4.  இறையனார் அகப்பொருளின் நூற்பாக்கள் எத்தனை? 60 
  5. இறையனார் அகப்பொருளின் பிரிவுகள் யாவை? களவியல், கற்பியல்.
  6. களவியலின் நூற்பாக்கள் எத்தனை? 33
  7. கற்பியலின் நூற்பாக்கள் எத்தனை? 27
  8. இறையனார் அகப்பொருளின் சூத்திரங்கள் பெரும்பாலும் சிறியனவே. 15 ஆம் நூற்பா மட்டும் 10 வரிகள் கொண்டது. 
  9. இறையனார் அகப்பொருளின் மற்றொரு பெயர் யாது? இறையனார் களவியல்
  10. இறையனார் களவியலுக்கு உரை எழுதியவர் யார்? நக்கீரர்
  11. நக்கீரரின் காலம் யாது? கடைச்சங்க நக்கீரர் என்று சிலர் கூறுவர். வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் என்றும் சிலர் கூறுவர். 
  12. இறையனார் அகப்பொருள் உரை நக்கீரரால் இயற்றப்பட்டு செவி வழியாக உரைக்கப்பட்டு பின்ஆம் நூற்றாண்டில் முசிறி ஆசிரியர் நீலகண்டனார் காலத்தில் உருப்பெற்றது.
  13. இறையனார் களவியலுக்கு இயற்றப்பட்ட உதாரணச் செய்யுள் கோவை யாது? பாண்டிக்கோவை
  14. பாண்டிக்கோவை யார் மீது இயற்றப்பட்டது? நெடுமாறன் 
  15. சங்கங்கள் குறித்து முதன் முதலில் விவரிக்கும் நூல் யாது? இறையனார் அகப்பொருள் உரை
  16. தமிழ்  நெறி விளக்கத்தின் காலம் யாது? கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  17. தமிழ் நெறி விளக்கத்தின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 25 [அகப்பொருள் பற்றி மட்டுமே பேசும்]
  18. தமிழ் நெறி விளக்கத்தின் பொருளியலை மட்டும் வெளியிட்டவர் யார்? உ.வே.சா
  19. நம்பியகப்பொருளின் காலம் யாது? கி.பி. 12 , 13 ஆம் நூற்றாண்டு
  20. நம்பியகப்பொருளின் ஆசிரியர் யார்? நாற்கவிராச நம்பி
  21. நாற்கவி என்பவை யாவை? ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி [இந்த நான்கு கவிகளையும் பாட வல்லவர் நாற்கவிராசர்]
  22. நாற்கவிராச நம்பியின் சமயம் யாது? சமணம்
  23. நம்பியகப்பொருள் இயல்கள் எத்தனை? 5
  24. நம்பியகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 252
  25. நம்பியகப்பொருளின் உரையாசிரியர் யார்? நூலாசிரியரே உரையாசிரியர் ஆவார்.
  26. நம்பியகப்பொருள் உரையின் அமைப்பு யாது? கருத்துரை, பொழிப்புரை, விசேட  உரை மூன்றும் அடங்கியது.
  27. நம்பியகப்பொருளின் உதாரணமாக இயற்றப்பட்ட கோவை நூல் எது? தஞ்சைவாணன் கோவை.
  28. நம்பியகப்பொருள் எவற்றை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது? தொல்காப்பிய அகத்திணையியல், இறையனார் அகப்பொருள்
  29. களவியல் காரிகையின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு [13 என்றும் கூறுவர்.]
  30. களவியல் காரிகையின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 60 [60 நூற்பா எனப் பேராசிரியர் கூறுகிறார். இன்று கிடைப்பவை 53 மட்டுமே.]
  31. களவியல் காரிகையின் பாவகை? கட்டளைக்கலித்துறை
  32. களவியல் காரிகையில் கிடைத்தப் பகுதிகளைச் செப்பம் செய்து பதிப்பித்தவர் யார்? எஸ். வையாபுரிப் பிள்ளை.
  33. மாறன் அகப்பொருளின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  34. மாறனகப்பொருளின் ஆசிரியர் யார்? திருக்குருகைப் பெருமாள் 
  35. மாறனகப்பொருள் மாறன் எனப் பெயரிடப்படக் காரணம் யாது? மாறன் திருக்குருகைப் பெருமாளின் ஆசிரியராம் நம்மாழ்வார் பெயரைக் குறிக்கும்.
  36. மாறனகப்பொருள் யார் முன் அரங்கேற்றப்பட்டது? ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி ஶ்ரீநிவாச ஜீயர்
  37. மாறன் அகப்பொருளின் இயல்கள் எத்தனை? 5
  38. மாறன் அகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 363
  39. மாறனகப்பொருளில் கிடைக்காத இயல்கள் எத்தனை? 2 [முதல், இறுதி இயல்கள் கிடைக்கவில்லை]
  40. மாறனகப் பொருளுக்கு மேற்கோளாய் அமைந்த இலக்கிய நூல் யாது? திருப்பதிக் கோவை
  41. புறப்பொருள் நூல்கள் எத்தனை? 2 [பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை]
  42. பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார்? அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் எழுதியதாகக் கூறுவர்.
  43. புறப்பொருள் வெண்பாமாலையின் காலம் என்ன? கி.பி.9 ஆம் நூற்றாண்டு
  44. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்? ஐயனாரிதனார்
  45. புறப்பொருள் வெண்பாமாலையின் படலங்கள் எத்தனை? 12 [புறத்திணைகள் 9, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை]
  46. புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பாக்கள் எத்தனை? 361
  47. புறப்பொருள் வெண்பா மாலையின் இலக்கணச் சுருக்கத்தைக் கொளு என்பர்
  48. கொளுவின் விரிவினை வெண்பா விவரிக்கும்.
  49. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்த குடி என்னும் வரி இடம் பெற்ற நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை[ கரந்தை 14].
  50. புறப்பொருள் வெண்பா மாலைக்கு எழுந்த பழைய உரையின் ஆசிரியர் யார்? சாமுண்டி தேவ நாயகர்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...