- அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் பேசும் இலக்கண நூல் எது? தொல்காப்பியம்
- அகப்பொருள் இலக்கண நூல்கள் யாவை? இறையனார் அகப்பொருள், தமிழ் நெறி விளக்கம், நம்பியகப்பொருள். களவியல் காரிகை, மாறனகப்பொருள்.
- இறையனார் அகப்பொருள் ஆசிரியர் யார்? இறையனார் [சிவபெருமான் என்று கூறுவர். குறுந்தொகையில் உள்ள கொங்குதேர் வாழ்க்கை என்னும் பாடலைப் பாடியதும் இறைவனே என்பர். இரண்டையும் இயற்றியவர் இறையனார் என்னும் கடைச்சங்கப்புலவர் என்றும் கூறுவர்.]
- இறையனார் அகப்பொருளின் நூற்பாக்கள் எத்தனை? 60
- இறையனார் அகப்பொருளின் பிரிவுகள் யாவை? களவியல், கற்பியல்.
- களவியலின் நூற்பாக்கள் எத்தனை? 33
- கற்பியலின் நூற்பாக்கள் எத்தனை? 27
- இறையனார் அகப்பொருளின் சூத்திரங்கள் பெரும்பாலும் சிறியனவே. 15 ஆம் நூற்பா மட்டும் 10 வரிகள் கொண்டது.
- இறையனார் அகப்பொருளின் மற்றொரு பெயர் யாது? இறையனார் களவியல்
- இறையனார் களவியலுக்கு உரை எழுதியவர் யார்? நக்கீரர்
- நக்கீரரின் காலம் யாது? கடைச்சங்க நக்கீரர் என்று சிலர் கூறுவர். வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் என்றும் சிலர் கூறுவர்.
- இறையனார் அகப்பொருள் உரை நக்கீரரால் இயற்றப்பட்டு செவி வழியாக உரைக்கப்பட்டு பின்ஆம் நூற்றாண்டில் முசிறி ஆசிரியர் நீலகண்டனார் காலத்தில் உருப்பெற்றது.
- இறையனார் களவியலுக்கு இயற்றப்பட்ட உதாரணச் செய்யுள் கோவை யாது? பாண்டிக்கோவை
- பாண்டிக்கோவை யார் மீது இயற்றப்பட்டது? நெடுமாறன்
- சங்கங்கள் குறித்து முதன் முதலில் விவரிக்கும் நூல் யாது? இறையனார் அகப்பொருள் உரை
- தமிழ் நெறி விளக்கத்தின் காலம் யாது? கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
- தமிழ் நெறி விளக்கத்தின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 25 [அகப்பொருள் பற்றி மட்டுமே பேசும்]
- தமிழ் நெறி விளக்கத்தின் பொருளியலை மட்டும் வெளியிட்டவர் யார்? உ.வே.சா
- நம்பியகப்பொருளின் காலம் யாது? கி.பி. 12 , 13 ஆம் நூற்றாண்டு
- நம்பியகப்பொருளின் ஆசிரியர் யார்? நாற்கவிராச நம்பி
- நாற்கவி என்பவை யாவை? ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி [இந்த நான்கு கவிகளையும் பாட வல்லவர் நாற்கவிராசர்]
- நாற்கவிராச நம்பியின் சமயம் யாது? சமணம்
- நம்பியகப்பொருள் இயல்கள் எத்தனை? 5
- நம்பியகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 252
- நம்பியகப்பொருளின் உரையாசிரியர் யார்? நூலாசிரியரே உரையாசிரியர் ஆவார்.
- நம்பியகப்பொருள் உரையின் அமைப்பு யாது? கருத்துரை, பொழிப்புரை, விசேட உரை மூன்றும் அடங்கியது.
- நம்பியகப்பொருளின் உதாரணமாக இயற்றப்பட்ட கோவை நூல் எது? தஞ்சைவாணன் கோவை.
- நம்பியகப்பொருள் எவற்றை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது? தொல்காப்பிய அகத்திணையியல், இறையனார் அகப்பொருள்
- களவியல் காரிகையின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு [13 என்றும் கூறுவர்.]
- களவியல் காரிகையின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 60 [60 நூற்பா எனப் பேராசிரியர் கூறுகிறார். இன்று கிடைப்பவை 53 மட்டுமே.]
- களவியல் காரிகையின் பாவகை? கட்டளைக்கலித்துறை
- களவியல் காரிகையில் கிடைத்தப் பகுதிகளைச் செப்பம் செய்து பதிப்பித்தவர் யார்? எஸ். வையாபுரிப் பிள்ளை.
- மாறன் அகப்பொருளின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
- மாறனகப்பொருளின் ஆசிரியர் யார்? திருக்குருகைப் பெருமாள்
- மாறனகப்பொருள் மாறன் எனப் பெயரிடப்படக் காரணம் யாது? மாறன் திருக்குருகைப் பெருமாளின் ஆசிரியராம் நம்மாழ்வார் பெயரைக் குறிக்கும்.
- மாறனகப்பொருள் யார் முன் அரங்கேற்றப்பட்டது? ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி ஶ்ரீநிவாச ஜீயர்
- மாறன் அகப்பொருளின் இயல்கள் எத்தனை? 5
- மாறன் அகப்பொருளின் நூற்பாக்களின் எண்ணிக்கை? 363
- மாறனகப்பொருளில் கிடைக்காத இயல்கள் எத்தனை? 2 [முதல், இறுதி இயல்கள் கிடைக்கவில்லை]
- மாறனகப் பொருளுக்கு மேற்கோளாய் அமைந்த இலக்கிய நூல் யாது? திருப்பதிக் கோவை
- புறப்பொருள் நூல்கள் எத்தனை? 2 [பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை]
- பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார்? அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் எழுதியதாகக் கூறுவர்.
- புறப்பொருள் வெண்பாமாலையின் காலம் என்ன? கி.பி.9 ஆம் நூற்றாண்டு
- புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்? ஐயனாரிதனார்
- புறப்பொருள் வெண்பாமாலையின் படலங்கள் எத்தனை? 12 [புறத்திணைகள் 9, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை]
- புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பாக்கள் எத்தனை? 361
- புறப்பொருள் வெண்பா மாலையின் இலக்கணச் சுருக்கத்தைக் கொளு என்பர்
- கொளுவின் விரிவினை வெண்பா விவரிக்கும்.
- கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்த குடி என்னும் வரி இடம் பெற்ற நூல் எது? புறப்பொருள் வெண்பாமாலை[ கரந்தை 14].
- புறப்பொருள் வெண்பா மாலைக்கு எழுந்த பழைய உரையின் ஆசிரியர் யார்? சாமுண்டி தேவ நாயகர்
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 20 அக்டோபர், 2020
பொருள் இலக்கண நூல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக