இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 அக்டோபர், 2020

தமிழ் இலக்கண நூல்கள் - எழுத்தும் சொல்லும்

  1.  எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
  2. நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
  3. நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
  4. பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
  5. நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
  6. நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
  7. நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
  8. குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
  9. குணவீர பண்டிதர் இயற்றிய மற்றொரு நூல் யாது? வச்சணந்திமாலை எனப்படும் வெண்பாப்பாட்டியல்
  10. நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
  11. சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால் 
  12. நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
  13. நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
  14. நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
  15. நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
  16. நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
  17. நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
  18. சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
  19. பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  20. பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
  21. சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
  22. வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
  23. பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
  24. பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
  25. பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
  26. இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
  27. சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
  28. இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
  29. இலக்கண விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
  30. வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
  31. இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்} 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...