- எழுத்து, சொல் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை?" நன்னூல், நேமிநாதம்
- நன்னூலின் காலம் யாது? கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு
- நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர்
- பவனந்தி முனிவரின் ஊர்? சியகங்கன் [மைசூரின் கோலார் பகுதி]
- நன்னூலில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 462
- நேமிநாதத்தின் காலம் யாது? 12 ஆம் நூற்றாண்டு
- நேமிநாத ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்
- குணவீர பண்டிதரின் ஊர் எது? களந்தை [களத்தூர்]
- குணவீர பண்டிதர் இயற்றிய மற்றொரு நூல் யாது? வச்சணந்திமாலை எனப்படும் வெண்பாப்பாட்டியல்
- நேமிநாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சின்னூல்
- சின்னூல் எனப் பெயர் வரக் காரணம்? சுருக்கமாக இலக்கணம் கூறுவதால்
- நேமிநாதப் பிரிவுகள் யாவை? 10 [எழுத்து-1, சொல்-9 : பெரும்பாலானவை மரபு என்றே குறிக்கப்படுகின்றன]
- நேமிநாத செய்யுள்கள் என்னப் பாவால் அனவை? வெண்பா
- நேமிநாத ஆசிரியரின் சமயம்? சமணம்
- நேமிநாததில் உள்ள நூற்பாக்கள் எத்தனை? 99
- நேமிநாதம் என்ன பாவால் ஆக்கப்பட்டது? வெண்பா
- நேமி நாதம் எனப் பெயரிடப்பட்டதன் காரணம் யாது? குணவீர பண்டிதர் தன் ஆசிரியரான நேமி நாதர் பெயரால் எழுதி உள்ளார். இவர் 22-ஆவது தீர்த்தங்கரரும் ஆவார்
- சொல்லுக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து
- பிரயோக விவேகத்தின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- பிரயோக விவேகத்தின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய தீட்சிதர்
- சுப்பிரமணிய தீட்சிதரின் ஊர்? ஆழ்வார் திருநகரி
- வடமொழியில் இருந்து தழுவி எழுதப்பட்ட நூல், வட மொழிக்கும் தமிழுக்குமான இலக்கண ஒற்றுமைகளை முன்னிறுத்திப் பேசுகின்றது.
- பிரயோக விவேகத்தில் உள்ள படலங்கள் எத்தனை? 4
- பிரயோக விளக்கச் செய்யுள்கள் என்னப்பாவால் ஆனவை? கட்டளைக் கலித்துறை
- பிரயோக விளக்கத்தில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 51 [கூடுதலாக 41 பாடல்களைக் கொண்டது என்றும் கூறுவர்]
- இலக்கணக்கொத்தின் காலம் யாது? 17ஆம் நூற்றாண்டு
- சுவாமிநாத தேசிகரின் ஊர்? திருவாவடுதுறை மடம்
- இலக்கணக் கொத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 3
- இலக்கண விளக்கத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 119
- வடமொழியின் உயர்வுக்காகத் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் யாது? இலக்கணக் கொத்து
- இலக்கணக் கொத்து தமிழின் எழுத்துக்களாக உரைப்பவை? 5 [எ, ஒ, ற. ழ. ன]-{ஏனைய பொது எழுத்துக்கள் வடமொழி எழுத்துக்களே எனக்கூறும் அவர் 'ஐந்தெழுத்தால் ஒரு பாஷை என்று அறையவே நாணுவர் அறிவுடையோர் என்றும் கூறியுள்ளார்}
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 19 அக்டோபர், 2020
தமிழ் இலக்கண நூல்கள் - எழுத்தும் சொல்லும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக