இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2020

தொகை மரபு - தொல்காப்பியம்

  1. ங, ஞ, ந், ம் - மெல்லெழுத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்களை அடுத்து வருமொழியில் க, ச, த, ப வர மெல்லெழுத்து மிகும்.                     [விளம்+கோடு-விளங்கோடு, விளம்+தோல்-விளஞ்செதில்]
  2.  ஞ, ந, ம, ய, வ மற்றும் உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் வருமொழியாக வரும் நேரத்தில் வேற்றுமை, அல்வழி இரண்டிலும் இயல்பாகப் புணரும். [கனி+மரம்-கனிமரம், உயிர்+யாது-உயிர்யாது]
  3. ஞ, ந, ம மூன்றும் இயல்பாவதோடு உறழ்ந்து முடிதலும் உண்டு.     [கதிர்+நுனி-கதிர்நுனி] 
  4. ண, ன என்னும் சொற்களின் முன் யா, ஞா ஒத்த தன்மையனவாக வரும் [யா-ஞாவாக, ஞா-யா வாக மாறலாம்] -      மண்+யாத்த-மண்ஞாத்த,  மண்+ஞாத்த-மண்யாத்த.
  5. நிலை மொழி இறுதியில் ன, ண வந்து வரு மொழி முதலில் மொழி முதலான 12 எழுத்துக்களும் வர அல்வழியில் இயல்பாகும்.                            [கண்+பெரியது - கண்பெரியது, பொன்+மகவு- பொன்மகவு]
  6. நிலை மொழி இறுதியில் ல,ன வந்து வருமொழி முதலில் த,ந வரின் த,ந - ற, ன ஆகத் திரியும். (கல்+ தீது- கல்றீது, கன்+நன்று- கன்னன்று)
  7. ண,ள முன் த, ந வரின் த- ட என்றும்,  ந-ண என்றும் திரியும்.(மண்+தீது-மண்டீது, மண்+நன்று- மண்ணன்று)
  8. முன்னிலை வினைச் சொல் முன் உயிர்,  மெய்  வருமொழியாக வர இயல்பாகவோ,  உறழ்ந்தோ புணரும். நட+கொற்றா - நடகொற்றா என  இயல்பாகவும்,  நடக்கொற்றா  என உறழ்ந்தும்  புணரும் 
  9. ஒள என்ற எழுத்தை ஈறாகக் கொண்ட முன்னிலை வினைச்சொல் ஞ,ந,ம,வ என்னும் புள்ளி இறுதியும், குற்றியலுகர இறுதியும் உகரம் பொற்று வலி மிகுந்தும் மிகாமலும் புணரும்.  கௌ+கொற்றா -  கௌவு கொற்றா,  கௌவுக்கொற்ற.
  10. உயிர் மற்றும் மெய் ஈறாகிய உயர்திணைப் பெயர்கள் வருமொழியில் நாற்கணமும் வர இயல்பாகப் புணரும். (பாரி+கண்டேன்- பாரிகண்டேன்.)
  11. இகர ஈற்று உயர் திணைச் சொற்கள் வலி மிக்குப புணரும்.  ( கொற்றிக் கேள்)
  12. விரவுப் பெயர்கள் இயல்பாகப புணரும். (சாத்தன் தின்றான்)
  13. மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வரும் உயிர், மெய் ஈறு வலி மிகும் (நாய்+கடிப்பட்டான்-நாய்க்கடிபட்டான்)
  14. இ,ஐ ஈற்றுச் சொற்கள் அல்வழிப் புணர்ச்சியில்  இயல்பாகவோ,  வலி மிகுந்தோ வரலாம். (பருத்தி+செடி - பருத்தி செடி, பருத்திச் செடி)
  15. ஏழாம் வேற்றுமைப் பொருளில் அதோளி, இதோளி, எதோளி,  ஆண்டை,  ,யாண்டை போன்ற இ, ஐ ஈற்றுச் சொற்கள் இயல்பாகவோ,  வலி மிகுந்தோ புணரும். (அதோளி + கொண்டான்- அதோளி  கொண்டான்,  அதோளிக் கொணடான்)
  16. நெடில் அடுத்து வரும்  ஒற்றுக் கெடும். (கோல்+நன்று - கோனன்று)
  17. குறில் முன் வரும் ஒற்று புணர்ச்சியில் இரட்டும் (மண்+அகல்- மண்ணகல்)
  18. ஆறாம் வேற்றுமை,  நான்காம்  வேற்றுமையில் குறில் முன் ஒற்று இரட்டாது. (தம் + அது- தமது, தம்+கு -தமக்கு
  19. நும் வேற்றுமையில் இயல்பாகப் புணரும் (நும் +அது - நுமது,  நும்+கு-நுமக்கு)
  20. முகத்தல்,  நீட்டல்,  எண்ணல் அளவைப் பெயர்கள் ஏகாரம் பெற்றுப் புணரும். (இரண்டு + கால்- இரண்டே கால்)
  21. அரை என்னும் பாதியைக் குறிக்கும் சொல்லில் ஏகாரம் வராது.  
  22. அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்கு - இதில் வரும் பால் என்பது குறிப்பது யாது? பாதி [அரை]
  23. குற்றியலுகரத்தோடு குறை என்னும் சொல் சேர இன் சாரியைச் சேரும்.   (பாக்கு+குறை-பாக்கின் குறை)
  24. கலம் என்னும் முகத்தல் அளவை குறை உடன் சேர அத்துச் சாரியைப் பெற்று வரும். (கலம் +குறை- கலத்துக் குறை)
  25. பனை மற்றும் கா அடுத்து குறை வர   இன்  சாரியைப் பெறும்.  (பனை+குறை- பனையின் குறை,  கா+குறை-காவின் குறை)
  26. முகத்தல், நிறுத்தல் அளவைப் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ - என்னும் எழுத்துக்களை மொழி முதலாகக் கொண்டு வரும். [கலம், நாழி, கழஞ்சு, நிறை, உழக்கு, பலம், மா, அந்தை]
  27. யாவர் என்னும் பலர்பால் சொல்லில் உள்ள வகரம்  கெட்டு யார் என்று மரூவியது.
  28. யாது என்னும் ஒன்றன் பால் சொல்லில் வகரம் தோன்றி ஆவது மரூவியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...