- ங, ஞ, ந், ம் - மெல்லெழுத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்களை அடுத்து வருமொழியில் க, ச, த, ப வர மெல்லெழுத்து மிகும். [விளம்+கோடு-விளங்கோடு, விளம்+தோல்-விளஞ்செதில்]
- ஞ, ந, ம, ய, வ மற்றும் உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் வருமொழியாக வரும் நேரத்தில் வேற்றுமை, அல்வழி இரண்டிலும் இயல்பாகப் புணரும். [கனி+மரம்-கனிமரம், உயிர்+யாது-உயிர்யாது]
- ஞ, ந, ம மூன்றும் இயல்பாவதோடு உறழ்ந்து முடிதலும் உண்டு. [கதிர்+நுனி-கதிர்நுனி]
- ண, ன என்னும் சொற்களின் முன் யா, ஞா ஒத்த தன்மையனவாக வரும் [யா-ஞாவாக, ஞா-யா வாக மாறலாம்] - மண்+யாத்த-மண்ஞாத்த, மண்+ஞாத்த-மண்யாத்த.
- நிலை மொழி இறுதியில் ன, ண வந்து வரு மொழி முதலில் மொழி முதலான 12 எழுத்துக்களும் வர அல்வழியில் இயல்பாகும். [கண்+பெரியது - கண்பெரியது, பொன்+மகவு- பொன்மகவு]
- நிலை மொழி இறுதியில் ல,ன வந்து வருமொழி முதலில் த,ந வரின் த,ந - ற, ன ஆகத் திரியும். (கல்+ தீது- கல்றீது, கன்+நன்று- கன்னன்று)
- ண,ள முன் த, ந வரின் த- ட என்றும், ந-ண என்றும் திரியும்.(மண்+தீது-மண்டீது, மண்+நன்று- மண்ணன்று)
- முன்னிலை வினைச் சொல் முன் உயிர், மெய் வருமொழியாக வர இயல்பாகவோ, உறழ்ந்தோ புணரும். நட+கொற்றா - நடகொற்றா என இயல்பாகவும், நடக்கொற்றா என உறழ்ந்தும் புணரும்
- ஒள என்ற எழுத்தை ஈறாகக் கொண்ட முன்னிலை வினைச்சொல் ஞ,ந,ம,வ என்னும் புள்ளி இறுதியும், குற்றியலுகர இறுதியும் உகரம் பொற்று வலி மிகுந்தும் மிகாமலும் புணரும். கௌ+கொற்றா - கௌவு கொற்றா, கௌவுக்கொற்ற.
- உயிர் மற்றும் மெய் ஈறாகிய உயர்திணைப் பெயர்கள் வருமொழியில் நாற்கணமும் வர இயல்பாகப் புணரும். (பாரி+கண்டேன்- பாரிகண்டேன்.)
- இகர ஈற்று உயர் திணைச் சொற்கள் வலி மிக்குப புணரும். ( கொற்றிக் கேள்)
- விரவுப் பெயர்கள் இயல்பாகப புணரும். (சாத்தன் தின்றான்)
- மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வரும் உயிர், மெய் ஈறு வலி மிகும் (நாய்+கடிப்பட்டான்-நாய்க்கடிபட்டான்)
- இ,ஐ ஈற்றுச் சொற்கள் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாகவோ, வலி மிகுந்தோ வரலாம். (பருத்தி+செடி - பருத்தி செடி, பருத்திச் செடி)
- ஏழாம் வேற்றுமைப் பொருளில் அதோளி, இதோளி, எதோளி, ஆண்டை, ,யாண்டை போன்ற இ, ஐ ஈற்றுச் சொற்கள் இயல்பாகவோ, வலி மிகுந்தோ புணரும். (அதோளி + கொண்டான்- அதோளி கொண்டான், அதோளிக் கொணடான்)
- நெடில் அடுத்து வரும் ஒற்றுக் கெடும். (கோல்+நன்று - கோனன்று)
- குறில் முன் வரும் ஒற்று புணர்ச்சியில் இரட்டும் (மண்+அகல்- மண்ணகல்)
- ஆறாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமையில் குறில் முன் ஒற்று இரட்டாது. (தம் + அது- தமது, தம்+கு -தமக்கு
- நும் வேற்றுமையில் இயல்பாகப் புணரும் (நும் +அது - நுமது, நும்+கு-நுமக்கு)
- முகத்தல், நீட்டல், எண்ணல் அளவைப் பெயர்கள் ஏகாரம் பெற்றுப் புணரும். (இரண்டு + கால்- இரண்டே கால்)
- அரை என்னும் பாதியைக் குறிக்கும் சொல்லில் ஏகாரம் வராது.
- அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்கு - இதில் வரும் பால் என்பது குறிப்பது யாது? பாதி [அரை]
- குற்றியலுகரத்தோடு குறை என்னும் சொல் சேர இன் சாரியைச் சேரும். (பாக்கு+குறை-பாக்கின் குறை)
- கலம் என்னும் முகத்தல் அளவை குறை உடன் சேர அத்துச் சாரியைப் பெற்று வரும். (கலம் +குறை- கலத்துக் குறை)
- பனை மற்றும் கா அடுத்து குறை வர இன் சாரியைப் பெறும். (பனை+குறை- பனையின் குறை, கா+குறை-காவின் குறை)
- முகத்தல், நிறுத்தல் அளவைப் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ - என்னும் எழுத்துக்களை மொழி முதலாகக் கொண்டு வரும். [கலம், நாழி, கழஞ்சு, நிறை, உழக்கு, பலம், மா, அந்தை]
- யாவர் என்னும் பலர்பால் சொல்லில் உள்ள வகரம் கெட்டு யார் என்று மரூவியது.
- யாது என்னும் ஒன்றன் பால் சொல்லில் வகரம் தோன்றி ஆவது மரூவியது
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 20 அக்டோபர், 2020
தொகை மரபு - தொல்காப்பியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக