இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2020

தொல்தமிழக விருதுகள்

  1. மாராயம் என்பது என்ன?  போரில் சிறந்த வீரனுக்குத் தரப்படும் பட்டம் 
  2. மாராயம் குறித்து பேசும் தொன்னூல் எது? தொகாப்பிய வஞ்சித் திணையில் மாராயம் பெற்ற நெடுமொழி என்ற துறையில்  குறிக்கப்பட்டுள்ளது
  3. எட்டி என்பது என்ன? எட்டி என்பது  நாட்டின் சிறந்த வணிகனுக்கு வழங்கப்படும் விருது ஆகும். வீரன் கண்ணுக்கு எட்டும் வரை உள்ள நிலம் இறையிலி நிலமாக வழங்கப்படும். அடையாளமாக எட்டிப்பூவும் வழங்கப்படும். இது குறித்து இளம்பூரணர் விவரிக்கிறார்.
  4. காவிதி என்பது என்ன? காவிதி என்பது நாட்டைப் பஞ்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் காக்கும் சிறந்த உழவனுக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும்.
  5. காவிதி பட்டம் பெற்ற சங்கப்புலவர்கள் யாவர்?  ஆவூர் காவிதிகள் சாதேவனார், இளம்புல்லூர் காவிதி, கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்
  6. இறையிலி என்றால் என்ன? இறை என்பது வரியைக் குறிக்கும். வரி இல்லாத நிலம் இறையிலி நிலம் ஆகும்.
  7. தலைக்கோல் என்றால் என்ன? ஆடற்கலையில் சிறந்தவருக்கு சிறந்தவருக்குத் தரப்படும் விருது ஆகும்.
  8. தலைக்கோள் எதனால் ஆனது? தோற்ற மன்னனின் வெண்கொற்றக் குடை எடுத்து அதில் விலை உயர்ந்த சம்பூதநம் என்ற பொன் தகடு, விலை உயர்ந்த நவமணி கலந்து தயாரிக்கப்படும் கோல் ஆகும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...