1. தும்பைத்திணை என்றால் என்ன?
வீரத்தை, படை வலிமையை மட்டும் அடிப்படைப் பொருளாக எண்ணி
போர்தொடுத்து
2. தும்பைத் திணை எதன் புறத்திணை?
தும்பை நெய்தலின் புறத்திணை ஆகும்.
3. தும்பைத்திணையில் அட்டையாடல் என்றால் என்ன?
வீரரின் உடலில் அம்பு, வேல் தைக்க, உயிரிழந்த உடல் நிலத்தில் விழாமல்
அட்டைப்பூச்சி இறந்த பின்னும் நீரில் ஆடுதல் போல இருநிலம்
தீண்டாமல் ஆடுதல் ஆகும்.
4. தும்பைத்திணையின் துறைகளாக தொல்காப்பியர் குறிப்பிடுவன
எத்தனை?
12
5. வாகைத்திணை எதன் புறத்திணை?
பாலைத் திணை
6. வாகைத்திணை என்றால் என்ன?
குற்றமற்ற கொள்கைக் கொண்டவர்கள் தத்தம் ஆற்றலை, வலிமையைக்
காட்டப் போரிட்டு வெற்றி பெறுதல்.
7. வாகை எத்தனைப் பிரிவுகளைக் கொண்டதென தொல்காப்பியர்
கூறுகிறார்?
7 [பார்ப்பன வாகை, அரச வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை,
அறிஞர் வாகை, தாபதவாகை, பொருநவாகை]
8. பார்ப்பன வாகை என்பது யாது?
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு
தொழிலை உடையது பார்ப்பன வாகை [பார்ப்பனப் பக்கம்]
9. அரசவாகை என்பது யாது?
ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்கல், குடி ஓம்பல் என்னும் 5 தொழில்
உடையது அரச வாகை
10.வணிக, வேளாண் வாகை என்பது யாது?
ஓதல், உழவு, ஈதல், வாணிகம், விருந்தோம்பல், நிரை காத்தல் என்னும்
ஆறும் உடையது ஏனோர் பக்கமும். அதாவது வேளான் வாகை, வணிக
வாகை
11. அறிஞர் வாகை [அறிவன் தேயம்] என்பது யாது?
இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் முக்காலமும் அறிந்தது அறிஞர் வாகை
12. தாபத வாகை என்றால் என்ன?
நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலாடை உடுத்தல், சடைபுனைதல்,
ஊருக்குள் செல்லாமை, காட்டில் உணவு கொள்ளுதல், கடவுட் பூசை,
விருந்தோம்பல் என்னும் எட்டையும் கொண்டது தாபத வாகை [பக்கம்]
13. பொருந வாகை எத்தனை வகைப்படும்?
பாணர், பாடினி என்னும் இருபாலானது பொருந வாகை.
14. வாகை என்பது யாது?
வாகை என்பது போரில் வென்ற நிலையைக் குறிப்பது
15. வாகைத்துறைகளின் எண்ணிக்கை எத்தனை எனப் புறப்பொருள்
வெண்பாமாலை கூறுகிறது?
32
16. வாகை அரவம் என்பது யாது?
போரில் வெற்றி பெற்ற மன்னனின் வீரர்கள் வாகைப் பூ சூடி கடலென ஆர்ப்பரிப்பது
17. அரசவாகை என்பது யாது?
வெற்றிகொண்ட அரசனின் செங்கோலையும், அவனது நல்லியல்பையும் புகழ்ந்து பாடுவது.
18. முரச வாகை என்றால் என்ன?
அரசனின் வெற்றி முரசின் தன்மையைக் கூறல்.
மரக்களவழி என் பது யாது?
போர்க்களத்தையும் ஏர்க்களத்தையும் ஒப்பாகக் கொண்டு மன்னனி
நிலத்தை உழும் உழவனுக்கு ஒப்பாகக் காட்டுவது
[மன்னன் - உழவன், போர்க்களம் - வயல், யானை - மாடுகள்,
வேல் - கலப்பை, வெகுளி - விதை, புகழ் - தானியம்]
20. களவேள்வி என்பது யாது?
போர்க்களத்தில் வேள்வி செய்தல். கொல்லும் வலிமையுடைய பேய்கள்
வயிறார உண்ண மன்னன் களத்தில் வேள்வி செய்தல்.
21. முன்தேர்க்குரவை என்பது யாது?
வாகை சூடிய மன்னன் தேர்முன் பேய்கள் கூத்தாடிச் செல்வது
22. பின் தேர்க்குரவை என்பது யாது?
வெற்றி பெற்ற மன்னன் தேரின் பின் வீரர்களும், விறலிகளும் ஆடிப்
பாடிச் செல்வது பின்தேர்க்குரவை
23. பார்ப்பன வாகை என்பது யாது?
வேள்வி மண்டபத்தில் வேதத்தில் வல்லவர்களாம் பார்ப்பனர்களுக்குச்
சிறப்புச் செய்வது.
24. வாணிக வாகை என்பது யாது?
வணிகர்களுக்கு உழவு, பசுக்களைப் பாதுகாத்தல், வாணிகம், ஓதல்,
வேட்டல், ஈதல், என்னும் ஆறு வகை அறங்களை எடுத்தியம்புதல்
25. வேளாண் வாகை என்பது யாது?
அந்தனர், மன்னர், வணிகர் பாராட்டும் படி வேளாளர் சிறப்புடன்
கடனாற்ற வேண்டும் என எடுத்துரைத்தல்.
26. பொருதவாகை என்பது யாது?
தமக்கு ஒப்பானவரும், தன்னைவிட மிக்கானவரும் இல்லை என்னும்
செருக்கோடு பிறரை இகழக்கூடாது என மன்னனிடம் சான்றோர்
அறிவுறுத்துதல்
27. அறிவன்வாகை என்பது யாது?
முக்காலத்தையும் தன் அறிவால் உணர்ந்து வருபொருளை
[வரவிருப்பதை] உரைக்கும் அறிவனின் சிறப்பைப் பாடுதல்.
28. தாபத வாகை என்பது யாது?
தவம் செய்வோர் தம் தவத்தில் இருந்து மாறாமல் இருக்கவேண்டும்
என்பதை அறிவுறுத்துதல்.
29. கூதிர் பாசறை என்பது யாது?
தன் துணையுடன் கூடியின்புறும் கூதிர்க்காலத்தில் தலைவியை
நினைக்காமல் போர் ஒன்றையே சிந்தித்து மன்னன் தங்கியிருக்கும்
கூதிர்க்காலப் பாசறையின் தன்மையைக் கூறுதல்.
30. வாடைப் பாசறை என்பது யாது?
பாசறையில் தங்கியிருக்கும் காலத்தில் கூதிர்கால வாடைக்காற்றின்
கொடுமையைப் பற்றிக் கூறுதல்.
31. அரச முல்லை என்பது யாது?
பகைமையை அழிக்க ஆற்றல் மிக்க அரசனை, அவனது வீரத்தை
எடுத்துரைப்பது.
32. பார்ப்பனமுல்லை என்பது யாது?
தம்முள் முரண்பட்ட பகை மன்னர்கள் இருவரையும் சமரசம் செய்வது.
33. அவைய முல்லை என்றால் என்ன?
அறங்கூறும் அவையில் இருக்கும் சான்றோரின் திறனைப் பாடுவது
34. கணிவன் முல்லை என்றால் என்ன?
போருக்குச் செல்லும் முன்னும், போர்க்காலத்திலும் நாளையும்,
கோளையும் கணிக்கும் கணிவனின் திற்ம் உரைப்பது.
35. மூதின் முல்லை என்றால் என்ன?
காலம் காலமாய் வீரம் நிறைந்த தமிழ்க்குடியில் பிறந்த மகளிரின்
மற உணர்வைப் புகழ்வது.
36. ஏறாண் முல்லை என்பது யாது?
ஆண்மை மிக்க குடியின் சிறப்பை உணர்த்தஉணர்த்துதல்
37. வல்லாண்முல்லை என்பது யாது?
வீரம் நிறைந்தவனின் ஊர், குடி, பிறப்பு முதலானவற்றைக் கூறி வீரனை
சிறப்பிப்பது.
38. காவல் முல்லை என்பது யாது?
வெற்றி பெற்ற மன்னனின் மன்னனின் நிலக்காவலின் திறனைப்
போற்றுவது.
39. பேராண்முல்லை என்றால் என்ன?
வெற்றி பெற்ற அரசனின் பேரண்மையைப் போற்றுவது.
40. மறமுல்லை என்றால் என்ன?
வெற்றி பெற்ற பின் வீரன் ஒருவனின் மறமாண்பைப் பாராட்டிப் பரிசு
அளிக்கும் போது, பரிசை ஒரு பொருட்டாகக் கருதாமல் போர்க்கள
நினைவாகவே இருந்து பகைவர்களை அழிப்பது பற்றி மட்டுமே
பேசிக்கொண்டிருக்கும் வீரத்தைப் புகழ்வது.
41. குடை முல்லை என்றால் என்ன?
வெற்றிபெற்ற அரசனின் வெற்றிச் சிறப்புடைய வெண்கொற்றக்
குடையின் சிறப்பினை எடுத்துரைப்பது.
42. கண்படை நிலை என்றால் என்ன?
போர் முடிந்து வெற்றி பெற்ற பின் இனி பகைவரே இல்லை என்னும்
நிறைவோடு மன்னன் கண்ணுறங்கும் தன்மையைக் கூறுவது.
43. அவிப்பலி என்றால் என்ன?
வீரத்தை வேள்வியாக, தவமாகக் கொண்டு வாழும் வீரர்கள் வேள்வி
இறுதியில் செஞ்சோற்று க்கடன் கழிக்க அவி எழுவதைப் போல மன்னன் மீது கொண்ட விசுவாசத்தால்
அவனுக்காகத் தம் உயிரைப் பலியாக்கக் கொடுப்பதைப் பாடுவது.
44. சால்புமுல்லை என்றால் என்ன?
இனிய, நற்குணங்கள் அனைத்தும் நிரம்பிய சாண்றோரின்
சான்றாண்மையைப் போற்றிப் பாடுவது.
45. கிணைநிலை என்றால் என்ன?
கிணை என்னும் பறையை இசைப்பவன் வயலை உழுது மக்களைக்
காக்கும் வேளாளனைப் புகழ்ந்து பாடுவது.
46. பொருளோடு புகறல் என்பது யாது?
உலகப்பொருள்களின் மீதான பற்றை நீக்கி மெய்ப்பொருளை விரும்பல்
உண்மைத் தத்துவப்பொருளைப் பற்றி வாழ்வதே வெற்றி உணர்த்தல்.
47. அருளோடு நீங்கல் என்பது யாது?
உலகு நிலையற்றது என்னும் உண்மையை உணர்ந்து நிலை உலகிற்கு
உரிய அறம் முதலானவற்றைச் செய்ய அறிவுறுத்தல். இதனை
அருளோடு புணர்ந்த அகற்சி என்கிறது தொல்காப்பியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக