இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 நவம்பர், 2020

பொருளியல்


1) மகளிர் நால்வருக்கும் உரிய பண்புகள் ?

உயிர், நாணம், மடன் (தலைவி, தோழி, நற்றாய் செவிலி)

2) தனித்துப் பேசும் இயல்புடையவர்கள் யாவர் ?

‘பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’ நற்றாய், தலைவி, செவிலி,                        தோழி

3) தலைவிக்குரிய மடன் பண்புகளாக உரையாசிரியர் குறிப்பிடுபவை                       யாவை ?

தன்வயின் கரத்தலும், அவன்வயல் கேட்டல்

4) இசை -------- இயையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர்

5) தோழி அறத்தொடு நிற்கும் வகை - 7

7) அறத்தொடு நிற்கும் காலத்தன்றி 

அறத்தியல் மரபியுலன் --------- என்ப  [தோழி என்ப]

8) உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப’’

இது செவிலிக்குரிய மரபு.

9) பெண்டிர்குரிய பண்புகள் யாவை?

செறிவு - அடக்கம்

நிறைவு - அமைதி

செம்மை - மனங்கோடாமை

செப்பு - சொல்லுதல்

அறிவு - நன்மை, தீமைகளை

10) பால்கெழுகிளவி நால்வர்க்கு முரித்தே’’ - நச்சினார்க்கினியார்- விளக்கம்

தோழி, செவிலி, நற்றாய், பாங்கன்

11) அறத்தியல் மரபு இலள் - நச்சினார்

அறத்தியல் முறைமை இலர் - இளம்பூரணர்

12) வேட்கை மறுத்துக் கிளத்தாங் குரைத்தல்

மரிஇய மருங்கின் உரித்தென மொழிப’’ - இந்நூற்பா

தலைமகளுக்கும் தோழிக்கும் உரியதாகும் - மரிஇய மருங்கு - களவு                

        நீடிக்கப்பட்ட இடம்

13) --------------- பிறவும்

வளர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப 

தேரும், யானையும், குதிரை

14) பொருளியலை ஒழிபியல் என்றும் கூறலாம் என்றவர் ? 

        இளம்பூரணர்

15) உலகியலில் எல்லோருக்கும் உரியதாய் வரும் சொல் ---------- எனப்படும்

16) பால்கெழுகிளவி நால்வருக்கு உரித்தே

17) பொருளென மொழியினும் வரைநிலை இன்றே

18) கரம் என மொழிதலும் வரைநிலை இன்றே

19) யாதானும் ஓர் காரணம் கற்பித்து தலைவனும் தலைவியும் சந்தித்ததைக் 

        கூறுதல்? ஏதீடு, தலைப்பாடு.

20) இரவினும் பகலினும் நீவா என்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் 

        என்று தலைவனிடம் கூற்று நிகழ்த்துபவர்?

தோழி

21) தந்தை செல்வம் மக்கள் பெறுவது தாய் உரிமை

22) உசாவுதல் என்பது உரையாடுதல்

23) இறைச்சி என்பது அகத்திணையில் உரிப்புறத்ததுவே

24) பரத்தையரிடம் பாணர் முதலானவரை தூது அனுப்புதல் நால்வருக்கு 

        உரித்து எனினும் சிறப்புடையது என்ப்து எந்நில தலைவருக்கு உரியது. 

        மருதநிலம்

25) வருத்தம் மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் 

        இரக்கம்

26) மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையும் காலை புலவியுள் உரிய

27) கருப்பொருளின் புறத்துப் பிறப்பது - இறைச்சி

28) நிம்பிரி - பொறாமை

29) காட்டலாக பொருட்களாக தொல்காப்பியம் பொருளியல் கூறும் 

        பொருள்கள் எத்தனை ?

12. ஒப்பு, உருவு, வெறுப்பு, கற்பு, ஏர் [அழகு], எழில், சாயல், நாண், மடன், 

        தோய், வேட்கை, நுகர்வு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...