- உவமை எத்தனை வகைப்படும்? 4 [வினை, பயன், மெய், உரு]
- வினை உவமை - புலிபோலப் பாய்ந்தான்
- பயன் உவமை - மாரி போல் வழங்கினான்
- மெய் [வடிவம்] உவமை - கொடி போன்ற அடியாள்
- உரு [நிறம்] உவமை - செவ்வான் அன்ன மேனி
- ஒரு உவமைத் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட உவம வகையைப் பெற்று வருவதும் உண்டு.
- உவமேயத்தை விட உவமை உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
- உவமேயம் என்பது யாது? உவமிக்கப்படும் பொருள்
- உவமைக்கு நிலைக்களன்களாக இருப்பவை யாவை? சிறப்பு, நலன், காதல், வலிமை
- சிறப்பு - பாரி போல் வள்ளல்
- நலன் - மலர் போல் முகம்
- காதல் - மாதர் முகம் போல் மதி
- வலிமை - அரிமா போல் நோக்கு
- கீழ்மையும் நிலைக்களனாக வருவது உண்டு
- சுட்டிக்கூறும் உவமம் என்பது யாது? உவமையையும், உவமேயத்தையும் பிரித்துக் கூற இயல்வது. உவம உருபு பெற்று வருவது.
- சுட்டிக் கூறா உவமம் என்பது யாது? உவம உருபு இல்லாதது.[பிறை நெற்றி]
- பொருளையே உவமையாக்கல் உண்டு என்கிறார் தொல்காப்பியர். இது பிற்காலத்தில் உருவகம் ஆனது.
- உவம உருபுகள் எண்ணிக்கை யாது? 36 [அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, என்ற, வியப்பை, எள்ள, இழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய]
- வினை உவமைக்கான உருபுகள் யாவை? அன்ன, ஆங்க, மான, இறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்கு [8]
- பயன் உவமைக்கான உருபுகள் யாவை? எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ [8]
- மெய் உவம உருபுகள் யாவை? கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப [8]
- உரு உவம உருபுகள் யாவை? போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த [8]
- உள்ளுறை உவமம் எவ்வாறு அழைக்கப்படும்? உவமப்போலி
- உவமப்போலி எத்தனை வகைப்படும்? வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு
- தலைவி எவ்வாறு உவமை கூற வேண்டும்? தலைவி அறிந்த பொருள் கொண்டு உவமை செய்ய வேண்டும்
- தோழி உவமைக் கூறுதற்கு உரிய பொருட்கள் யாவை? அந்நிலத்தில் உள்ள எல்லாவற்றையும் உவமையாக்குதற்கு உரியவள்.
- தலைவன் எவ்வாறு உவமை கூற வேண்டும்? அவனது பரந்த அறிவிற்கு ஏற்ப உவமை சொல்வர்.
- உவமை கூறுவதில் யாருக்கு இடம் வரைவு இல்லை? பாணன் முதலியோருக்கு
- தலைவி உவமை கூறும் இடங்கள் யாவை? நெய்தல், மருதம்
- தலைவன் என்னா இடத்திலும் உவமை கூறுவார்
- பொருந்துவழி நோக்கி உவமை கூறுதற்கு உரியோர் யாவர்? தோழி, செவிலி
- தடுமாறு உவமை என்பது யாது? இது போல இது என இரு பொருட்களைத் தெளிவாக உவமை, பொருள் என்று கூறாது ஐயத்தோடு கூறுவது. அல்லது ஐயத்தை உருவாக்குவது
- ஒரு பொருளுக்கு உவமை, அதற்கு ஒரு உவமை என அடுக்கிக் கூறலும் உண்டு.
- நிரல் நிறை உவமை என்றால் என்ன? உவமைப் பொருட்கள் ஒரு வரிசை, உவமைப்படுத்தப்படும் பொருட்கள் ஒரு வரிசை என அடுக்கிக் கூறுதல் நிரல் நிறை உவமை ஆகும். இது அடுக்கி வரும் உவமை ஆகும்.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 15 நவம்பர், 2020
உவமையியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக