1. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
ஆறு வகைப்படும்.
நாடு = ஈரெழுத்து ஒரு மொழி
வரகு = உயிர்த்தொடர் மொழி
வீழ்க = இடைத்தொடர் மொழி
எஃகு = ஆய்தத்தொடர் மொழி
கிழக்கு = வன்தொடர் மொழி
அன்பு = மென்தொடர் மொழி
2. ஈரொற்றுத் தொடர் மொழி ------ ஆகா
இடைத்தொடராக.
3. குற்றியலுகரம் அல்வழி வேற்றுமைகளில் எவ்வாறு புணரும் ?
அல்வழி மற்றும் வேற்றுமையில் புணர்ந்தாலும் நிலைமொழி இறுதியில் உகரம் நிற்கும்.
நாகுகடிது - அல்வழி
நாகு கடுமை - வேற்றுமை
4. வன்தொடர் குற்றியலுகரத்தின் முன் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்வந்தால் எவ்வாறு புணரும்?
உகரம் குறுகியே ஒலிக்கும்
சுக்கு + கடிது = சுக்குக்கடிது
5. நிலைமொழி குற்றியலுகரமாக வருமொழி ‘யகரம்’ வந்தால் எவ்வாறு புணரும்.
குற்றியலிகரமாகத் தோன்றும்
ஆறு + யாது = ஆறியாது (நெடில் தொடர்)
மரபு + யாது = மரபியாது (உயிர்த்தொடர்)
6. நெடில் தொடர்க்குற்றியலுகரமும், உயிர்த்தொடர் குற்றியலுகரம், வல்லெழுத்து முதலாக வரின் எவ்வாறு புணரும் ?
வருமொழிக்குத்தக வல்லினம் இரட்டிக்கும்.
நாடு + பற்று = நாட்டுப்பற்று (நெடில் தொடர்)
வயிறு + பசி = வயிற்றுப்பசி (உயிர்த்தொடர்)
7. நெடில் தொடர் குற்றியலுகரம், உயிர்த்தொடர் குற்றியலுகரம் வல்லெழுத்து முதலாக வர அவற்றில் வல்லெழுத்து மிகாமலும் வரும் ?
‘‘அத்திறத்தில்லை வல்லெழுத்து மிகலே’’
8. இடைத்தொடர் மற்றும் ஆய்தத் தொடர் எவ்வாறு வரும் ?
இடைத்தொடர், ஆய்தத் தொடர் குற்றியலுகரங்களின் முன் வல்லினம் முதலாம் சொல் வந்தால், வல்லினம் மிகாமல் இயல்பாகப் புணரும்.
தெள்கு + கால் = தெற்கு கால் = தெள்ளுப் பூச்சி
எஃகு + கால் = எஃகு கால்
9. வன்தொடர் மென்தொடர்குற்றியலுகரம் எவ்வாறு புணரும் ?
வன்தொடர், மென் தொடர்க் குற்றியலுகரங்களின் வல்லினம் வர வல்லெழுத்து மிகும்.
மென்தொடர் இடையில் உள்ள மெல்லெழுத்து தனக்கு இனமான வல்லெழுத்தாக மாறும்.
கொக்கு + கால் = கொக்குக்கால்
குரங்கு + கால் = குரங்குக்கால்
10. மரப்பெயர்க் கிளவியில் வரும் சாரியை :
‘அம்’ சாரியைப் பெறும்.
தேக்கு + கட்டை = தேக்கங்கட்டை (வன்தொடர்)
வேம்பு+ + பூ = வேப்பம்பூ (மென்தொடர்)
11. மெல்லின ஒற்று வல்லினமாக மாறாத மரப்பெயர்களும் உண்டு
குருந்து+ கிளை = குருந்தங்கிளை
புன்+கம்பூ = புங்கம்பூ
12. ஈரெழுத்து குற்றியலுகரம், வல்லினக் குற்றியலுகரமும் பெறும் சாரியை.
அம் - சாரியை
ஏறு + கோள் = ஏறங்கோள்
வட்டு + போர் = வட்டம்போர்
ஏறங்கோள் = ஏறுதழுவுதல்
13. மென்தொடர்க்குற்றியலுகரம் என்ன சாரியைப் பெறும் ?
அக்குச்சாரியைப் பெறும்.
குன்று கூகை குன்றக்கூகை
மன்று பெண்ணை மன்றுப் பெண்ணை
14. ‘‘எண்ணுப் பெயர் கிளவி உருபியல் நிலையும்’’ என்பதை விளக்குக.
எண்ணுப் பெயர் உருபியலில் சொல்லப்பட்டது போல அன்சாரியைப்பெற்றுவரும்.
ஒன்று+ காயம்= ஒன்றன்காயம்
ஒன்று + கூறு - ஒன்றன்கூறு
15. வண்டும் பெண்டும் என்ற மென் தொடர் குற்றியலுகரம் பெறும் சாரியை ?
இன் சாரியை
வண்டு + கால் - வண்டின்கால்
பெண்டு கை பெண்டின்கை
16. பெண்டு பெறும் சாரியை.
இன், அன்
= பெண்டின்கை = பெண்டன்கை
17. வினாசுட்டு எழுத்துக்கள் என்னசாரியைப் பெற்று வரும் ?
யாது என்ற வினாப்பெயரும், சுட்டு முதலாகிய ஆய்தம் அமைந்த பெயரும் அன் சாரியைப் பெறும்.
யாது + கோடு = யாதன் கோடு
அஃது + கோடு = அஃதன்கோடு
18. உயிர்முன் ஆய்தம் வந்தால் எவ்வாறு புணரும் ?
சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் நிலை மொழியாக உயிர் முதல் சொற்கள் வந்து அவ்வழியில் புணரும்போது ஆய்தம் கெடாமல் வரும்.
அஃது + அடை =அஃதடை
19. ‘‘ஏனை முன் வரினே தான்நிலை இன்றே’’
மற்ற இனங்கள் வரின் ஆப்தம் நில்லார் முடியும்.
அஃது + கடிது = அதுகடிது
20. அல்வழியில் குற்றிலுகரம் எவ்வாறு முடியும் ?
இயல்பாக முடியும் (நாகுகடிது, வரகுகடிது)
21. வன்தொடர் குற்றிலுகர முன் வல்லின வருமொழியாக அல்வழியில் எவ்வாறு புணரும்.
வல்லெழுத்து மிக்கு புணரும்.
கொக்கு + பறக்கும் = கொக்குப் பறக்கும்.
22. ஈங்கு, ஆங்கு, ஊங்கு என்ற சுட்டெழுத்து, யாமுதல் ஆகிய வினாவும் எவ்வாறு புணரும்?
வருமொழியில் வல்லெழுத்து மிகுந்து முடியும்.
ஆங்கு கொண்டான் = ஆங்குக்கொண்டான்
23. ‘யா’ என்ற வினா எவ்வாறு புணரும் ?
இயல்பாக புணரும்.
யாங்கு கொண்டான்.
24. ‘‘அந்நால் மொழியும் தம்நிலை திரியா’’ விளக்கம்.
ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு என்ற சொற்கள் வல்லினமாக திரியாது.
25. ‘உண்டு’ என்ற சொல் எவ்வாறு புணரும் ?
உள்ளதைக் குறிக்கும்.
26. ‘‘இருதிசை புணரின் ஏ இடை வருமே’’
திசையைக் குறிக்கும் குற்றியலுகரம் இறுதிப் பெயரோடு வேறுதிசைப்பெயர் புணரின் ‘ஏ’ என்னும் சாரியைப் பெறும்.
தெற்கு வடக்கு = தெற்கே வடக்கு
27. இரண்டு பெருந்திசைகள் புணரும் போது ஏற்படும் மாற்றம் ?
வட + கிழக்கு = வடகிழக்கு
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு என மாறும்.
28. பத்து என்ற எண் பிற எண்களுடன் எவ்வாறு புணரும்.
இன் சாரியைப் பெற்று புணரும்.
பத்து + ஒன்று = பதினொன்று
(இரண்டு என்ற எண்ணிற் மட்டும் இவ்விதி பொருந்தாது)
29. பத்தொடு ‘இரண்டு’ என்ற சொல் எவ்வாறு வரும் ?
பத்து + இரண்டு = பன்னிரண்டு
த்(உ) = கெட்டு = பத் = த்(ன) கரமாகி இரட்டித்து வரும் = பன்னிரண்டு
30. பத்துமுன் ஆயிரம் வந்தால் எவ்வாறு வரும் ?
பத்து + ஆயிரம் = பதினாயிரம்
பத்தாயிரம் என்பது மக்கள் வழக்கு.
31. பத்து முன் நிறை, அளவுப் பெயர் வந்தால் எவ்வாறு புணரும் ?
இன் சாரியைப் பெற்று புணரும்.
பத்து + கடிஞ்சு = பதின்கடிஞ்சு (நிறை)
பத்து + கலம் = பதின்கழம் (அளவு)
32. ஒன்று முன் பத்து வந்தால் எவ்வாறு புணரும் ?
1. ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயர்கள் நிலை மொழியாக இருக்க, பத்து வந்தால் பத்தின் தகர ஒற்று கெட அவ்விடத்தில் ஆய்தம் தோன்றும்.
2. ஆறு என்பதில் எவ்வித(று)வும் கெடாது.
3. மற்றைய எண்ணுப்பெயர் நிலைமொழியின் இறுதி உகரம் மெய்யொடும் கெடும்.
என்று பத்து = எருபஃது
33. ஒன்று, இரண்டு முன் பத்து வரின் எவ்வாறு புணரும் ?
ஒன்று + பத்து = ஓர்+பத்து, ஒருபஃது
ன், ண் ஆகிய மெய்கள் ரகர உகரமாக (ரு) வாகமாறும்
34. இரண்டு என்ற எண் பத்தின் முன் எவ்வாறு புணரும் ?
இரண்டு + பத்து = இருபது, இருபஃது
ரகரம் இல்லாமல் கெடும் (ருகரமாக)
35. 3, 6 என்ற எண் எவ்வாறு புணரும் ?
மூன்று, ஆறு எண்கள் நிலைமொழியாக வருமொழி பத்து வரின் நெடில் குறிலாகும். மூன்றில் உள்ள னகர ஒற்று பகர ஒற்றாகும்.
மூன்று + பத்து = முப்பது, முப்பஃது
ஆறு + பத்து = அறுபது
36. நான்கன் ஒற்றே றகரம் ஆகும்.
நான்கு + பத்து = நாற்பது (னகரம், றகரமாக மாறும்)
37. ஐந்தன் ஒற்றே மகரமாகும்.
ஐந்து + பத்து = ஐம்பது (நகரம் மகரமாக மாறும்)
38. எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்.
டகரம் ணகரமாக மாறும்
எட்டு + பத்து = எண்பது
39. தொண்னூறு எவ்வாறு புணரும் ?
1. தகர ஒற்று தோன்றல் ஒன்பஃது தொன்பஃது
2. தொன் பஃது, பஃது கெடல் தொன்
3. னகரம் ணகரமாய் இரட்டல் தொண்ண்
4. ஊகாரம் தோன்றல் தொண்ணூ
5. தகரம் றகரமாகி உகரம் கெடல் தொண்ணூறு
(தொண்கு தலையிட்ட பத்துக்குறை தொல் 1358)
தொல்காப்பியரர் காலத்தில் தொண்டு வழக்கத்தில் உள்ளதை அறியமுடிகிறது.
40. ஒன்று முதல் ஒன்பது இறுதிமுன், அளவும் பெரும் நிறைப் பெயர் வந்தால் எவ்வாறு புணரும் ?
ஒன்று + கலம் = ஒருகலம்
41. ‘‘மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும்’’
மூன்று + கலம் = முக்கலம் (னகரம் நகரமாகத்திரிதல்)
42. ‘‘ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்தாகும்’’.
ஐந்து + கலம் = ஐங்கலம் (அளவு)
43. மூன்று, ஐந்து முன் கசதப வரின் எவ்வாறு புணரும் ?
மூன்று வல்லெழுத்து பெறும்.
ஐந்து வல்லெழுத்துக்குரிய மெல்லெழுத்து பெறும்.
மூன்று + சாடி = முச்சாடி அளவு
மூன்று + தொடி = முத்தொடி நிறை
ஐந்து + சாடி = ஐஞ்சாடி அளவு
44. எட்டன்முன் ஞ, ந,ம என்னும் எழுத்துக்கள் வரின் எவ்வாறு புணரும் ?
ந, ம, என்னும் மெய்யெழுத்தும், அ என்னும் உயிரெழுத்தையும் முதலாக உடைய அளவு, நிறைப் பெயர;கள் வரின் ‘எண்’ என்பது நிலைமொழியாக இருக்கும்.
எட்டுநாழி = எண்நாழி
45. மூன்று என்ற எண் முன் வகரம் வந்தால் எவ்வாறு புணரும் ?
மூன்று + வட்டி = முவ்வட்டி
46. ‘‘நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்’’
நான்கு + வட்டி = நால்வட்டி
47. முதல், இரண்டு எண்கள் எவ்வாறு புணரும் ?
ஒரு, இரு என்பவை ஒர், இர்என ஆகி ஓர், ஈர் என குறில் நெடிலாகும்.
ஒரு அகல் = ஓர்+ அகல் = ஓரகல்
48. மூன்று, நான்கு, ஐந்து என்ற எண்கள் எவ்வாறு வரும் ?
மூன்று+ அகல் = முவ்வகல் (வ)
நான்கு + அகல் = நாலகல் (ல)
ஐந்து + அகல் = ஐயகல் (ய)
49. மூன்று என்ற எண்ணின் முன் வழக்கு என்ற சொல் வந்தால் எவ்வாறு புணரும் ?
மூன்று குறுகாது நீண்டு ஒலிக்கும்
மூன்று + வழக்கு = மூவுழக்கு
50. ஆறு என்ற எண்பெயர் முன் உயிரெழுத்து வந்தால் எவ்வாறு புணரும் ?
ஆறு + அகல் = ஆறகல் (என குறுகாமல் முடியும்)
51. ஒன்பது என்ற பெயரின் முன் அளவு, நிறைப்பெயர் வந்த என்ற சாரியைப் பெறும் ?
இடையில் ‘இன்’ வரும் ஒன்பது + கலம் = ஒன்பதின் கலம் என சாரியைப் பெறும்.
52. ஒன்று முதல் என்பது வரை எண்கள் முன் நூறு வந்தால் எவ்வாறு புணரும் ?
ஒன்று +நூறு = ஒருநூறு
53. மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.
மூன்று + நூறு = முந்நூறு
54. ‘‘நான்கு, ஐந்து முன் நூறு வரின்’’ எவ்வாறு புணரும்.
நான்கு, ஐந்து முன் நூறு வரின் ஒற்று மாறாது
நான்கு + நூறு = நானூறு
55. தொள்ளாயிரம்
- ஒன்பது முன்நூறு வர ஒகர உயிர் முன் தகரம் வரும்
- னகரம், ளகரம் ஆகும்.
- நூறு என்பதில் நகர மெய் கெட்டு ஆகாரம் வரும்
- பின் இடையே ஓர் இகரமும், ரகரமும் வரும்.
- இறுதி றகர உகரம் கெட்டு மகர ஒற்றாய் முடியும்
- தொள்ளாயிரம்
56. ஒன்று, இரண்டு என்பவற்றின் முன் ஆயிரம் வந்தால் எவ்வாறு புணரும் ?
நிலை மொழி உகரம் கெடும்.
ஒன்று (ஒரு) ஆயிரம் = ஓர் ஆயிரம்
57. ஒரு இரு என்பனவற்றில் முதல் குறில்கள், நெடில்கள் வந்தால் குற்றமில்லை.
ஒராயிரம் - ஓராயிரம்
58. ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும். (ஐந்து +ஆயிரம்=ஐயாயிரம்)
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். (நாலு+ஆயிரம்=நாலாயிரம்)
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும். (மூன்று+ஆயிரம்=மூவாயிரம்)
59. ஆறு என்பதன் முன் ஆயிரம் வந்தால் எவ்வாறு புணரும் ?
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்
60. ஒன்பது முன் ஆயிரம் வந்தால் எவ்வாறு வரும் ?
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
(இன்) சாரியைப் பெறும்.
61. ஒன்று + நூறாயிரம் = ஒரு நூறாயிரம்
(திரிபு பெற்று முடியும்)
62. நூறு + ஒன்று = நூற்றொன்று என உகரம் கெடா இரட்டித்து புணரும்.
63. நூறு + ஒரு பஃது = நூற்றொருபஃது என றகரம். எஃகு இரட்டித்து முடியும்.
64. அளவுநிறையில் நூறு எவ்வாறு புணரும் ?
நூறு + கலம் = நூற்றுக்களம்
நூறு + கழஞ்சு = நூற்றுக்கழஞ்சு
8. தெள்குகால் இயல்பாக புணரும் அம்மா
பதிலளிநீக்கு12.அம் சாரியை
பதிலளிநீக்கு13. மன்றப்பெண்ணை சரியா அம்மா
பதிலளிநீக்கு19.மற்ற கணங்கள் வந்தால் ஆய்தப் புள்ளி நிற்காது சரிங்களா அம்மா
பதிலளிநீக்கு