- னகரம் றகரமாகும் இடங்கள்
1. வேற்றுமையில் வருமொழி முதலில் கசதப வர றகரமாகும். [பொன்+குடம் = பொற்குடம்]
2. மன், சின், ஆன், ஈன், பின், முன் - வருமொழி முதலில் க, ச, த, ப, வர ன- ற ஆகும். [மன்+கொண்கன்]
3. வினையெச்ச னகரத்தை அடுத்து கசதப வர ன்-ற் ஆகும். [வரின்+காண்பேன்=வரிற் காண்பேம்]
4. சுட்டு முதலைத் தொடர்ந்து வரும் வயின் - யில் உள்ள ன-ற ஆகும்.
[அவ்வயின்+பார்க்கலாம்=அவ்வயிற் பார்க்கலாம்]
5. வினா எழுத்தாம் எகரத்தை அடுத்து வரும் வயின் - யில் உள்ள ன-ற ஆகும். [எவ்வயின்+பார்க்கலாம்=எவ்வயிற் பார்க்கலாம்]
2. குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும் [குயின்+கூட்டம்=குயின்கூட்டம்]
3. எகின் என்ற மரப்பெயர் அம் சாரியை பெற்று வரும். [எகினங்கோடு]
4. எகின் என்ற பறவைப்பெயர் அகரச்சாரியைப் பெற்று வலிமிகும். [எகின்+கால்=எகினக்கால்]
5. னகர ஈற்று இனப் பெயர்கள் இயல்பாகப் புணரும். [எயின்+குடி=எயினக்குடி]
6. மீன் அடுத்து வல்லெழுத்து வர உறழும் [இயல்பு - மீன்+கண்= மீன்கண்], [திரிபு - மீன் + கண் = மீற்கண்]
7. தேன் அடுத்து வல்லெழுத்து வர உறழும்
[இயல்பு - தேன்+குடம்-தேன்குடம்]
[ன்-ற் ஆதல் - தேன்+குடம்-தேற்குடம்]
[னகரம் கெட, வல்லெழுத்து மிகும் - தேன்+குடம்-தேக்குடம்]
[மெல்லெழுத்து மிகும் - தேன்+குடம் - தேங்குடம்]
8. தேன் அடுத்து மெல்லெழுத்து வர உறழும்
[இயல்பு : தேன்+மொழி- தேன்மொழி]
[ன -கெடும்: தேன்+மொழி - தேமொழி]
9. தேன் அடுத்து இறால் வர இயல்பாகப் புணரும்.
[தேன்+இறால்-தேன் இறால்]
10. தேன் அடுத்து இறால் வர தகர ஒற்று வருதல் உண்டு.
[தேன்+இறால்-தேன்த்திறால்]
11. மின், பின், பன், கன் நான்கும் உகரம் பெற்றுப் புணரும்
[மின்+கடிது-மின்னுக்கடிது, மின்+நீண்டது-மின்னுநீண்டது]
12. வேற்றுமையில் கன் சொல் அ- சாரியையுடன் வல்லொற்று வலி மிகும் [கன்+குடம்- கன்னக்குடம்]
13. னகர ஈற்று இயற்பெயர் முன் தந்தை முறைப்பெயர் வந்தால் னகர மெய்
தகரத்தோடு கெடும். [சாத்தன்+ தந்தை-சாத்தந்தை]
14. ஆதன், பூதன் பெயர்கள் போன்ற சொற்கள் முன் தந்தை வர னகர ஈறு, அதன் முன் உள்ள தகரம் கெடும் [ஆதன்+தந்தை-ஆந்தை]
15. இயற்பெயர் அடையோடு வர இயல்பாகப் புணரும்.
[பெருஞ்சாத்தன் + தந்தை- பெருந்தாத்தன்தந்தை
16. னகர ஈற்று மக்கள் இயற்பெயர் புணர்ச்சியில் அன் கெட்டு, அம் தோன்றும். [சாத்தன்+கொற்றன்- சாத்தங் கொற்றன்]
17. தான், பேன், கோன் என்னும் இயற்பெயர்கள் முறைப்பெயரோடு புணர்கையில் னகர ஒற்றுக் கெடாது. [தான்கொற்றன்]
18. வேற்றுமையில் தான், யான் என்னும் பெயர் நெடுமுதல் [தா-த, யா-ய] குறுகும், யகரம் - எகரமாக மாறும். [தான்+கை-தன்கை, யான்+கை-என்கை] இயல்பாகப் புணர்தலும் உண்டு.
19. அழன் என்னும் சொல்லின் இறுதி கெட்டு னகர ஒற்று கெட்டு வல்லெழுத்து மிகும். [அழன்+குடம்- அழக்குடம்]
20. முன் அடுத்து இல் வர இடையில் றகர ஒற்றுத் தோன்றும். [முன்+இல்முன்றில்]
21. வேற்றுமையில் யகர இறுதியை அடுத்து வல்லெழுத்து வர வலி மிகும்.
[நாய்+செவி-நாய்ச்செவி]
22. தாய் அடுத்து வல்லெழுத்து வந்தாலும் இயல்பாகப் புணரும்.
[தாய்+செவி-தாய்செவி]
23. மகனோடு தாயை இணைத்து வருகையில் வருமொழி முதலில் உள்ள
கசதப மிகும். [மகன்தாய்+பரிவு-மகன்தாய்ப்பரிவு]
24. யகர ஈற்றுச் சொல்லின் சில இடங்களில் வல்லொற்று மிகுதல்,
மெல்லொற்று மிகுதல் இரண்டும் உறழ்தல் உண்டு.
[வேய்+குறை - வேய்க்குறை, வேய்ங்குறை]
25. அல்வழியில் யகர இறுதி இயல்பாகப் புணரும். [காய்+சிறிது-காய்சிறிது]
26. ரகர இறுதி யகர இறுதியைப் போல வலி மிகும் [ஊர்+குளம்-ஊர்க்குளம்]
27. ஆர், வெதிர், சார், பீர் ஆகிய சொற்களில் மெல்லெழுத்து மிகும்.
[ஆர்+கோடு-ஆர்ங்கோடு, பீர்+கொடி-பீர்ங்கொடி]
28. சார் அடுத்து காழ் வர வலி மிகும். [சார்+காழ்-சார்க்காழ்]
29. பீர் சொல் அம் சாரியைப் பெற்றுப் புணரும். [பீர்+கொடி-பீரங்கொடி]
30. லகர இறுதியை சொல் னகர ஈற்றைப் போல ல-ற ஆக மாறும்.
[பல்+பொடி-பற்பொடி]
31.லகர ஈற்றை அடுத்து மெல்லெழுத்து வர லகரம் னகரமாகும்.
[கல்+மலை-கன்மலை]
32. லகர ஈற்றுச்சொற்கள் அல்வழியில் உறழும்.
[இயல்பு - பல்+பெரிது - பல் பெரிது]
[திரிபு - பல்+பெரிது - பற் பெரிது]
33. லகர இறுதியை அடுத்து தகரம் வர லகரம் ஆய்தமாகத் திரிதலும் உண்டு. [ பல்+தொடை - பஃறொடை, கல்+தீது- கஃறீது]
34. நெடிலை அடுத்து வரும் லகரம் திரிதலும், இயல்பாதலும் உண்டு.
[கால்+படி -கால் படி, காற்படி]
35. அல்வழியிலும், வேற்றுமையிலும் நெல், செல், கொல், சொல் நான்கும்
லகரம் றகரமாகத் திரியும். [நெல்+ பெருகிற்று- நெற்பெருகிற்று]
36. இல் என்னும் சொல்
1. இயல்பாகப் புணரும் - இல்+பொருள் - இல்பொருள்
2. ஐ இடையில் வரும் - இல்+ பொருள் - இல்லைப்பொருள்
3. ஆகாரம் வரும் - இல்+பொருள் - இல்லாப்பொருள்
37. வல் என்னும் சொல் உகரம் பெற்று வருமொழியில் வல்லினம் வர வலிமிகும். [வல்+கடிது-வல்லுக்கட்து], வருமொழியில்
மெல்லினம் வரின் இயலாகப் புணரும் [வல்ஞான்று]
38. பூல், வேல், ஆல் மூன்றும் அம் சாரியைப் பெறும்.
[ஆல்+காடு-ஆலங்காடு]
39. வெயில் மழையைப் போல் அத்து, இன் சாரியைப் பெறும்
[வெயில்+சென்றான்-வெயிலத்துச் சென்றான், வெயிலிற்சென்ரான்]
40. சுட்டு முதலான வகர ஈற்றுச்சொல்
வேற்றுமையில் வற்றுச் சாரியைப் பெறும்.
[அவ்+செயல்-அவற்றுச்செயல்]
அல்வழியில் வகரம் ஆய்தமாகும்.
[அவ்+கடிது-அஃகடிது]
வருமொழியில் மெல்லெழுத்து வர வகரம் மெல்லெழுத்தாகும்.
[அவ்+ஞான்று- அஞ்ஞான்று]
உயிர் அல்லது இடையினத்தோடு இயல்பாகப் புணரும்
[அவ்+உடல் - அவ்வுடல்]
41. சுட்டெழுத்து அல்லாமல் பிற வகரங்கள் உகரச்சாரியைப் பெறும்.
[தெவ்+கண்டான்- தெவ்வுக்கண்டான்]
42. ழகர ஈற்றுச்சொல்லில் வலி மிகும்
[ஊழ்+பயன் - ஊழ்ப்பயன்]
43. தாழ் கோலோடு புணர அக்குச் சாரியை பெறும்.
[தாழ்+கோல் - தாழக்கோல்]
44. தமிழ் என்ற சொல் வலி மிகுதலும் உண்டு, அக்குச் சாரியைப் பெறுதலும் உண்டு. [தமிழ் + கல்வி - தமிழ்க்கல்வி, தமிழக்கல்வி]
45. குமிழ் என்னும் மரப்பெயர் மெல்லெழுத்து மிகுந்தோ, அம் சாரியைப்
பெற்றோ வரும். [குமிழ்+கோடு-குமிழ்ங்கோடு, குமிழங்கோடு]
46. பாழ் என்னும் சொல் [வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து மிகுந்து] உறழ்ந்து வரும் [பாழ்+கிணறு- பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு]
47. ஏழ் என்னும் சொல் அன் சாரியைப் பெறும்
[ஏழ்+பொருள்-ஏழன் பொருள்]
48. ஏழ்- அடுத்து அளவைப் பெயர்கள் வர நெடுமுதல் குறுகி, உகரம் சேரும்
[ஏழ்+கழஞ்சு-எழுகழஞ்சு]
49. ஏழ் அடுத்து
1. பத்து வர அளவைப் பெயருக்கு உரிய மாற்றங்களோடு
பத்தில் உள்ள த் - ஃ ஆகும். [எழுபஃது]
2. ஆயிரம் வர உகரம் சேராது [ஏழ்+ஆயிரம்-ஏழாயிரம்]
3. நூறாயிரம் வர இயல்பாகும் [ஏழ்+நூறாயிரம்- ஏழ் நூறாயிரம்]
4. பேரெணோடு புணர இயல்பாகும் [ஏழ் தாமரை, ஏழ் ஆம்பல்]
5. உயிரெழுத்தை முதலாகக் கொண்ட அளவுப் பெயர் வர
இயல்பாகப் புணரும். [ஏழ்+அரை- ஏழரை]
50. கீழ் உறழ்ந்து புணரும் [கீழ்+கரை - கீழ்கரை, கீழ்க்கரை]
51. ளகர ஈறு
1. வேற்றுமையில் ளகரம் டகரமாகும்
[புள்+பெயர்-புட்பெயர்]
2. வருமொழியில் மெல்லெழுத்து வர ணகரமாகும்
[கள்+ நீர்- கண்ணீர்]
3. அல்வழியில் உறழும்
[முள்+ கடிது -முள்கடிது, கட்டீது]
4. வருமொழியில் தகரம் வர ஆய்தம் பெறவும் செய்யும்
[முள்+தீது -முள்தீது, முட்டீது, முஃடீது]
5. நெடிலை அடுத்து இயல்பாகும் [கோள்+கடிது- கோள்கடிது]
6. தொழிற் பெயர்கள் உகரம் பெறும்.
[துள்+சிறப்பு -துள்ளுச் சிறப்பு]
52. இருள் அத்துச் சாரியைப் பெறும்
53. புள், வள் உகரம் பெறும்
54. மக்கள் தக்க இடத்தில் ள்-ட் ஆகும் [மக்கட்பண்பு]
5. எயின்+ குடி=எயின்குடி
பதிலளிநீக்கு10. தேத்திறால்
பதிலளிநீக்கு