- ஞகரத்தை மொழி ஈறாகக் கொண்ட தொழிற் பெயர் வரு மொழி முதலில் க, ச, த, ப வரின் ஞ்-உகரம் ஏற்று வல்லெழுத்து மிக்கு வரும். [உரிஞ்+தீது-உரிஞுத்தீது]
- ஞகரத்தை அடுத்து ஞ, ந, ம, வ வரின் ஞ -உகரம் பெற்று வரும் [உரிஞ்+மாண்டது=உரிஞு மாண்டது]
- நகரத்தை மொழி ஈறாகக் கொண்ட சொல் வரு மொழி முதலில் க, ச, த, ப வரின் ந-உகரம் ஏற்று வல்லெழுத்து மிக்கு வரும். [பொருந்+கடிது=பொருநுக்கடிது]
- வேற்றுமையில் நகர ஈற்றுச் சொல் வந்து வருமொழி முதலில் க,ச,த,ப வர உகரம் வராமல் [பொருந்+கலைஞர்=பொருநக் கலைஞர்]
- வெரிந் என்ற சொல்லை அடுத்து க,ச,த,ப வர நகரம் கெட்டு மெல்லெழுத்து மிகும். [வெரிந்+குறை=வெரிங்குறை]
- வெரிந் அடுத்து க,ச,த,ப வர சில நேரம் வல்லெழுத்து மிகுதலும் உண்டு. [வெரிந்+குறை=வெரிக்குறை]
- வேற்றுமையில் ணகர இறுதியை அடுத்து வரு மொழி முதலில் வல்லெழுத்து வரின் ண- டகரமாகும். [மண்+குடம்=மட்குடம்]
- ஆண், பெண் அடுத்து வல்லெழுத்து வரின் இயல்பாக முடியும். [ஆண்+கை=ஆண்கை, பெண்+தலை=பெண்தலை]
- ஆண் என்னும் மரப்பெயர் அரை மரப்பெயர் போல அம் சாரியை பெற்று வரும்.
- செய்யுளில் விண் - அடுத்து வருமொழியில் விண் வரும்போது அத்துச் சாரியைப் பெற்று வரும். [விண்+கொட்டும்=விண்ணத்துக்கொட்டும்]. அத்துச் சாரியைப் பெறாமலும்வரும். [விண்கொட்டும்]
- ணகர ஈற்றுத் தொழிற் பெயரை அடுத்து வல்லெழுத்து வர உகரம் பெற்று வல்லொற்று மிகும். [மண்+கடிது=மண்ணுக்கடிது] மெல்லின, இடையினம் வர உ மட்டும் பெறும்.[மண்+மகிழ்ந்தது=மண்ணுமகிழ்ந்தது].
- ணகர ஈற்றுக் கிளைப்பெயர் [இனப்பெயர்] வல்லெழுத்தோடு இயல்பாகப் புணரும். [உமண்+குடி=உமண்குடி]
- எண் என்ற உணவுப் பெயரை அடுத்து வரு மொழியில் வல்லினம் வர் ணகரம் டகரம் ஆகும். [எண்+சிறிது=எட்சிறிது].
- முரண் என்னும் தொழிற் பெயர் அல்வழியில் இயல்பாகப் புணரும். [முரண்+கொடிது=முரண்கொடிது]. வேற்றுமையில் ண் - ட் ஆகத் திரியும். [முரண் + தொழில் = முரட்டொழில்]
- வேற்றுமையில் மகர ஈற்று சொல் வந்து வருமொழி முதலில் வல்லெழுத்து வர மகரம் கெட்டு வல்லொற்று மிகும். [அகம்+பொருள்=அகப்பொருள்].
- மகர ஈற்று சொல்லை அடுத்து அகரம் வர மகரம் கெட்டு அகரம் ஆகாரம் ஆதலும் உண்டு. [மரம் + அடி = மரா அடி - மராவடி] ஆகாரம் ஆகாமல் இருத்தலும் உண்டு. [மரம் + அடி = மர அடி - மரவடி]
- மகர ஈற்று சொற்களை அடுத்து வல்லினம் வர சில நேரம் மெல்லெழுத்து மிகுதலும் உண்டு. [ குளம்+கரை= குளங்கரை/ குளக்கரை].
- இல்லம் என்னும் மரப்பெயரை அடுத்து வல்லெழுத்து வர அது விசை மரப்பெயரைப் போல மெல்லொற்று மிகுந்து வரும். [இல்லம்+கோடு=இல்லங்கோடு].
- அல்வழிப் புணர்ச்சியில் மகர ஈற்றுச் சொல் மெல்லெழுத்து மிக்குப் புணரும். [இடம்+கொடுத்தான்=இடங்கொடுத்தான்].
- அகம் என்னும் சொல்லை அடுத்து கை வந்தால் அகத்தில் உள்ள அ தவிர மற்றவை [கம்] கெட்டு மெல்லெழுத்து மிகும் [அகம்+கை=அங்கை]
- இலம் என்னும்சொல்லை அடுத்து படு என்ற சொல் வந்தால் இயல்பாகப் புணரும். [இலம்+படு=இலம்படு]
- ஆயிரம் என்னும் எண் சொல்லை அடுத்து அதை ஒத்த எண் வரும்போது அத்துச் சாரியைப் பெற்று வரும். [ஆயிரம்+ஒன்று=ஆயிரத்தொன்று]
- ஆயிரம் அடைச் சொல்லோடு வந்தாலும் அத்துச் சாரியை பெற்று வரும். நாலாயிரம்+ஐந்நூறு = நாலாயிரத்தைந்நூறு]
- ஆயிரத்தை அடுத்து அளவைப் பெயர் வர மகரம் கெட்டு வலி மிகும். [ஆயிரம் + கழஞ்சு = ஆயிரக் கழஞ்சு, ஆயிரப்படி, ஆயிரக்கலம்]
- படர்க்கைப் பெயர், முன்னிலைப் பெயராய் உள்ள மகர ஈற்றுச் சொல்லை அடுத்து வல்லினம் வர மகரம், உகரம் கெட்டு ரகர ஒற்று வரும். [எல்லாரும்+கை=எல்லார்கை]
- படர்க்கைப் பெயர், முன்னிலைப் பெயராய் உள்ள மகர ஈற்றுச் சொல்லை அடுத்து வல்லினம் வர மகரம், உகரம் கெட்டு மெல்லெழுத்து மிகலும் உண்டு. [தம் + கை =தங்கை]
- எல்லாம் என்பது உயர்திணையைக் குறித்தால் நம் சாரியைப் பெற்று வரும். [எல்லா நங்கை]
- நும் என்னும் சொல்லை அடுத்து ம் எல்லெழுத்து வரும். [நும்+கை=நுங்கை]
- நும் என்னும் சொல் அல்வழியில் நுயிர் என்று ஆகும்.
- மகர ஈற்று தொழிற்பெயர் ஞகர ஈற்றைப் போல உகரம் பெற்று வல்லெழுத்து மிகும். [செம்+கடிது=செம்முக்கடிது]
- வேற்றுமை, அல்வழியில் ஈம், கம், உரும் மூன்றும் உகரம் பெற்று வல்லெழுத்து மிகுந்து வரும். [ஈம்+கடிது = ஈமுக்கடிது, உருமுக்கடிது]
- வேற்றுமையில் ஈம், கம் இரண்டும் அக் சாரியைப் பெற்று வருதலும் உண்டு. [ஈம்+குடம்=ஈமக்குடம், கம்+குடம்=கம்மக்குடம்]
- மகர ஈற்றை அடுத்து வகரம் வர மகரம் குறுகலுமம் உண்டு. இயல்பாகவும் புணர்தல் உண்டு. [நிலம்+வலிது=நிலம்வலிது].
- மகர ஈற்று நாட்பெயர் அன், அத்துச் சாரியை பெற்றும் வரும். [மகம்+கொண்டான்=மகத்தாற் கொண்டான், மகம்+கை=மகத்துக்கை]
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 14 அக்டோபர், 2020
மெய்யீற்றுப் புணர்ச்சி - தொல்காப்பியம் - 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக