இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தமிழ்ச் சிறுகதைகள் - வினா வங்கி 2 [மணிக்கொடி எழுத்தாளர்கள்]

  1. மணிக்கொடி இதழ் தொடங்கி ஓராண்டிற்குள் எந்த இதழுடன் இணைக்கப்பட்டது? டி.எஸ். சொக்கலிங்கத்தின்  'காந்தி'
  2. மணிக்கொடி இதழ் மீண்டும் தொடங்கப்பட்ட காலம் எது? 1937
  3. மணிக்கொடி சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்? பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, வ.ரா, கு.ப.ரா.,சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லா.ச.ரா.
  4. பி.எஸ்.ராமையாவின் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எது? நட்சத்திர குழந்தைகள் 
  5. கு.ப.ராஜகோபாலன்  தன கதைகளில் எத்தகைய பரிசோதனைகளை செய்தார்? உள்ளடக்கப் பரிசோதனை 
  6. கு.ப.ரா கதைகளில் மையமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவன யாவை? உணர்ச்சி  விவரிப்பு,பாலியல் சிக்கல்களை ஆராய்வது   
  7. கு.ப.ராவின் சிறுகதை நூல்கள் யாவை? புணர்ஜென்மம், காணாமலே காதல், இறுதி வெளிச்சம் 
  8. கு. ப. ராவின் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள் யாவை? காணாமலே காதல், விடியுமா? புனர்ஜென்மம், கனகாம்பரம், சிறிது வெளிச்சம், சாருன்னிசா, ஆற்றாமை, வயது வந்துவிட்டது, மூன்று உள்ளங்கள் 
  9. கு. ப. ராவின் முற்று பெறாத புதினம் எது? வேரோட்டம் 
  10. கு.ப. ரா பிறந்த ஆண்டு? 1901
  11. கு.ப.ரா பிறந்த ஊர்? கும்பகோணம், 
  12. கு.ப.ரா இறந்த ஆண்டு? 1944 
  13. கு.ப.ரா எந்த இதழில் பணியாற்றினார்? கிராம ஊழியன் 
  14. கு.ப.ரா எத்தனைக் கதைகள் எழுதியுள்ளதாக க.நா.சு கூறுகிறார்? 85   
  15. சிறுகதையின் மன்னன் யார்? புதுமைப்பித்தன்
  16. சிறுகதையின் மாப்பஸான் யார்? புதுமைப்பித்தன்
  17. புதுமைப்பித்தன் பிறந்த ஆண்டு? 1906 ஆம் ஆண்டு [ஏப்ரல்]
  18. புதுமைப்பித்தன் மறைந்த ஆண்டு 1948 ஆம் ஆண்டு
  19. புதுமைப்பித்தனின் தந்தைப் பெயர் யாது? சொக்கலிங்கம்
  20. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன? விருத்தாச்சலம்
  21. புதுமைப்பித்தன் பிறந்த ஊர் எது? திருப்பாதிரிப்புலியூர்
  22. புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை எது? ஆற்றங்கரை பிள்ளையார்
  23. புதுமைப்பித்தனின் தமிழ் இலக்கிய அறிவையும், உணர்வையும் வெளிப்படுத்துபவை யாவை? அன்று இரவு, சாபவிமோச்சனம், கபாடபுரம்
  24. இலக்கிய, வரலாற்றுச் சம்பவங்களுக்கு அமரத்துவம் கொடுத்து புதுமைப்பித்தன் உருவாக்கிய சிறுகதைகள் யாவை? அன்று இரவு, சாப விமோச்சனம், அகல்யை, சிற்பியின் நரகம், கபாடபுரம்
  25. அங்கதச் சுவை நிறைந்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் யாவை? நாரதராமாயணம், எப்போதும் முடிவிலே இன்பம், திருக்குறள் குமரேசம் பிள்ளை, புதிய கந்த புராணம், கட்டிலை விட்டிறங்கா கதை
  26. கார்த்திகேசு சிவத்தம்பி கடவுளும் கந்தசாமி பிள்ளையும் குறித்துக் கூறுவது யாது?  புதுமையும் பழமையும் இணைத்துக் காட்டும் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் புதுமைப்பித்தனின் அற்புத சிருஷ்டிகளில் ஒன்று
  27. வாதவூராரின் மனப்போராட்டத்தைச் சித்தரிக்கும் புதுமைப்பித்தனின் கதை எது? அன்றிரவு [அன்று இரவு]
  28. புதுமைப்பித்தனின் கதைகள் எவ்வகை இலக்கிய இசத்தைச் சார்ந்தவை? எதார்த்தவாதம்
  29. புதுமைப்பித்தன் கதைகளில் எத்தகு வழக்குக் கையாளப்படுகிறது? திருநெல்வேலி பேச்சு வழக்கு [திருநெல்வேலி   வேளாளர் பேச்சு வழக்கு]
  30. வட்டாரவழக்கு மொழிநடையில் சிறுகதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? புதுமைப்பித்தன்
  31. உலகளவில் நன்வோட்ட உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றவர் யார்? ஜேம்ஸ் ஜாய்ஸ்
  32. தமிழில் முதலில் நனவோடை உத்தியைக் கையாண்டவர் யார்? புதுமைப்பித்தன்
  33. நனவோட்ட உத்தியைக் கையாண்டு புதுமைப்பித்தன் இயற்றிய கதைகள் யாவை? கயிற்றரவு, செல்லம்மாள், சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  34. புதுமைப்பித்தன் நனவோட்ட உத்தியைக் கையாண்டு எழுதிய முதல் கதை எது? கயிற்றரவு
  35. "பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குஒ பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்" - என தன் கதை பற்றிக் கூறியவர் யார்? புதுமைப்பித்தன் [காஞ்சனை முன்னுரை]
  36. தன் கதைகளின் பொதுப் பண்பாக புதுமைப்பித்தன் கூறியது யாது? நம்பிக்கை வறட்சி
  37. புதுமைப்பித்தனின் மறுவாசிப்பு சிறுகதைகள் யாவை? சாபவிமோச்சனம், அகலிகை, புதிய நந்தன்
  38. பேய்பயத்தை மையமிட்ட புதுமைப்பித்தனின் சிறுகதை எது? காஞ்சனை
  39. கற்பிற்குப் புதுப்பொருள் கூறும் புதுமைப்பித்தனின் கதை? பொன்னகரம்
  40. சிறுகதை எழுதிய இலக்கிய இரட்டையர்கள் ? கு.ப.ரா, ந. பிச்சமூர்த்தி
  41. சிறுகதையின் சாதனை என்று மதிப்பிடப்படுபவர்? ந. பிச்சமூர்த்தி
  42. ந. பிச்சமூர்த்தியின் குறிப்பிடத் தகுந்த படைப்பு? பதினெட்டாம் பெருக்கு
  43.  மணிக்கொடி குழுவில் ஒருவரான சி.சு.செல்லப்பா ஆசிரியராக இருந்த இதழ் யாது? எழுத்து
  44. சி,சு செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? சரசாவின் பொம்மை, மலைமேடு, அறுபது, வெள்ளை, புதியவன், நொண்டிக் குழந்தை, கொண்டுவந்த சீர், நீர்க்குமிழி, என்ன சம்பந்தம்
  45. வாழ்க்கை முரண், மனித முரண்களை வெளிக்கொணரும் எழுத்தாளர் யார்? லா.ச.ராமாமிருதம்
  46. லா.ச.ரா.வின் சிறப்புடைய சிறுகதைகள் யாவை? கைவண்ணம், ஜனவரி இதழ்கள்
  47. சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற மனிதனின் குறை வாழ்க்கையை காட்டும் சி.சு. செல்லப்பாவின் கதை? மூடி இருந்தது
  48. குற்றப்பரம்பரை சட்டத்தினைப் பேசும் சி.சு. செல்லப்பாவின் சிறுகதை யாது? கள்ளர் மடம்
  49. இந்தியக்காதல் பற்றி பேசும் சி.சு.செல்லப்பாவின் கதை? வாழ்க்கையில் காதல்
  50. காபூலி நாடோடிகளைப் பற்றிய சி.சு வின் கதை? பந்தயம்
  51. நடைமாடுகள்- மாட்டுத்தாவணிகள் பற்றி பேசும் சி.சு.வின் கதை? பெண்டிழந்தான்
  52. பண்ணையாளர்களின் மாட்டுவண்டிப் பந்தயத்தைப் பேசும் சி.சுவின் சிறுகதை யாது? கூடு சாலை
  53. பேருந்து வருகையால் அழிந்து போன குதிரை வண்டிக்காரர்கள் பற்றி பேசும் சி.சு. செல்லப்பாவின் கதை? மூணுலாந்தல்
  54. சி.சுவின் சிறுகதை திறனாய்வு நூல் யாது? தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

1 கருத்து:

  1. அருமையா சேவை பலருடைய வழிகாட்டி இப்படி ஒரு வழிகாட்ல் ஏற்ற காலத்தில் கிடைத்திருந்தால் தலை நிமிர்ந்திருப்போம்.நன்றி தோழி திவ்யா அவர்களே குரல் உங்கள் வளம் அருமை

    பதிலளிநீக்கு

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...