- சிறுகதையின் பிறப்பிடம் எது? அமெரிக்கா
- உலக அளவில் சிறுகதையின் முன்னோடி யார்? ஆலன் எட்கர்போ
- சிறுகதை முன்னோடி ஆலன் எட்கர்போ சிறுகதைக்கான இலக்கணம் வகுத்த ஆண்டு? 1842
- ஆலன் எட்கர்போ சிறுகதையின் இலக்கணமாகக் கூறுவது? முதல் வாக்கியமே படிப்போரை ஈர்த்துவிட வேண்டும்
- சிறுகதையின் தொடக்கமும், முடிவும் குதிரைப் பந்தையம் போல இருக்க வேண்டும் என்றவர்? செட்ஜ்வி
- உலகளவில் முதல் சிறுகதையை எழுதியவர் யார்? வாசிங்டன் இர்விங்
- வாசிங்டன் இர்விங் எழுதிய முதல் சிறுகதை எது? ரிப்வேன் விம்பிள்
- வங்காள மொழியில் சிறுகதை முன்னோடிகள் யாவர்? பக்கிங்க் சந்திரர், ரவீந்திரநாத தாகூர்
- தமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடி எது? பரமார்த்த குரு கதை
- பரமார்த்த குரு கதையின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
- சந்திரவண்ணம் பிள்ளையின் கதை நூல் எது? கதாசிந்தாமணி
- வீராச்சாமி செட்டியாரின் கதை நூல்? விநோதரசமஞ்சரி, விக்கிரமாதித்தியன்
- தாண்டவராய முதலியாரின் கதை நூல்? பஞ்சதந்திரக் கதைகள்
- தமிழ்ப் புலவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த நூல் எது? விநோதரசமஞ்சரி
- பாரதியார் யாருடைய சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார்? தாகூர்
- கொல்கத்தாவில் எந்த இதழில் வெளியான தாகூரின் கதைகளைப் பாரதியார் மொழிபெயர்த்தார்? மார்டன் ரிவ்யூ
- பாரதியின் சிறுகதைகளைக் கட்டுக்கதை என்றவர்? கார்த்திகேசு சிவதம்பி
- பாரதி சிறுகதைக்கு ஆற்றிய சிறந்த சேவை எனக் கார்த்திகேசு சிவத்தம்பி எதைக் கூறுகிறார்? தாகூர் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தது.
- பாரதியார் தம் கதைகளை எந்த இதழ்களில் வெளியிட்டார்? ஞானபாநு, கதாரத்னாகரம், சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன்
- பாரதியார் அதிகமான சிறுகதைகளை வெளியிட்ட இதழ் எது? சுதேசமித்திரன் [16 கதைகள்]
- பாரதியார் தம் கதைகளை எதைக் கருதி எழுதுவதாகக் கூறுகிறார்? கற்பனை நயம்
- பாரதியார் எந்தெந்தப் புனைப்பெயர்களில் கதை எழுதினார்? ஷெல்லிதாஸ், சாவித்திரி, காளிதாஸன், சக்திதாஸன்
- பாரதியாரின் வடிவச் செ றிவு மிக்கக் கதைகள் யாவை? காந்தாமணி, பண்டாரத்தின் கதை, மிளகாய்ச் சாமியார்
- மாதவையா எழுதிய கதைகளின் தொகுப்பு? குசிகர் குட்டிக்கதைகள்
- குசிகர் குட்டிக்கதைகள் வெளிவந்த ஆண்டு? 1924
- மாதவையா நடத்திய இதழ் யாது? பஞ்சாமிர்தம்
- மாதவையா நிறைவு செய்யாமல் விட்ட கதை யாது? ஏட்டுச்சுரைக்காய்
- வ.வே.சு-வின் சிறுகதைக் தொகுதி? மங்கையற்கரசியின் காதல்
- மங்கையற்கரசியின் காதலில் எத்தனை கதைகள் உள்ளன? 8
- மங்கையற்கரசியின் காதலில் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள்? 4
- வ.வே.சு ஐயரின் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள் யாவை? அழேன்ழக்கே, எதிரொலியாள், அனார்க்கலி, லைலா மஜ்னூன்
- தமிழின் முதல் சிறுகதை என ஏற்கப்படுவது? குளத்தங்கரை அரசமரம்
- குளத்தங்கரை அரசமரம் வெளியான ஆண்டு யாது? 1913 - 17/ 19
- மங்கையற்கரசியின் காதல் வெளியான ஆண்டு எது? 1927
- வ.வே.சு ஐயர் சிறுகதைக்கு அளித்த முன்னுரையை எப்படிக் கூறுகிறார்? சூசிகை. விஜயசூசிகை
- 'ஜாதீய சலனங்கள் எல்லாவற்றிற்கும் இலக்கியம் அளவுகோல்' என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
- வ. வே. சு ஐயர் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் எது? தேசபக்தன்
- "கதைகள் ரஸம் பொருந்தியவையாயிருப்பதோடு பெருநோக்கம் கொண்டவையாயிருத்தல் வேண்டும்" என்றவர் யார்? வ.வே.சு.ஐயர்
- சிறுகதையின் அகல வளர்ச்சிக்குக் காரணம் யார்? கல்கி
- சிறுகதையின் ஆழ வளர்ச்சிக்குக் காரணம்? மணிக்கொடி குழுவினர்
- மணிக்கொடி தன் இதழ் வழி சிறுகதை வளர்த்த காலம்? கி.பி.1933-1955
- சிறுகதையை ஒரு இயக்கமாகக் கொண்டு வளர்த்த இதழ்? மணிக்கொடி
- மணிக்கொடி தொடங்கிய ஆண்டு எது? 1934
- மணிக்கொடியைத் தொடங்கியவர் யார்? கே. சீனிவாசன்
- மணிக்கொடி எழுத்தாளர்கள் யாவர்? பி. எஸ். ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லாசாரா
- மணிக்கொடியின் பதிப்பாசிரியர் யார்? வ. ரா
- 1933 இல் தொடங்கிய ஓராண்டுக்குள் நின்றுவிட்ட, சிறுகதைகளை வெளியிட்ட இதழ்? மணிக்கொடி
- மீண்டும் மணிக்கொடி இயங்கத் தொடங்கிய காலம் எது? 1937
- கதைகளின் வடிவிலும், கதைப் பொருளிலும் புதிய சோதனைகள் செய்வதற்க்குக் களமாக அமைந்த இதழ்? மணிக்கொடி
- சிறுசிறு நிகழ்ச்சிகளைக் கதையாக்கிய உ. வே.சு அவற்றிற்கு இட்ட பெயர்? கண்டதும் கேட்டதும், நல்லுரைக்கோவை
- ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை என்றவர் யார்? அட்சன்
- சிறுகதை என்பது பிரச்சனைகளை அலசிடும் படைப்பன்று, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கொண்டதன்று. அது மனித சூழமைவு பற்றி உள்ளவாறு கூறுவதாகும் என்றவர் யார்? பிராங்க் ஓ கானர்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 28 செப்டம்பர், 2020
தமிழ்ச் சிறுகதைகள் - வினா வங்கி 1 [தொடக்ககாலம்]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக