இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 டிசம்பர், 2020

பக்தி இலக்கிய வரிகள்

 "தோடுடைசெவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்

    காடுடைய சுடலைப் பூசியென் உள்ளம்கவர் கள்வன்

    ஏடுடைய மலரான் உனைநாட் பணிந்தேத்த அருள்செய்த

    பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே"

                                                                            [திருஞானசம்பந்தர் - முதல் பாடல்]

    "வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

    மிகநல்ல வீணைதடவி

    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

    சனிபாம் பிரண்டும் உடனே

    ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல

    அடியார் அவர்க்கு மிகவே"

                                            [திருஞானசம்பந்தர் - கோளறு பதிகம்]

    "கூற்றாயினவாறு விலக்ககலீர்

    கொடுமை பல செய்தன நானறிவேன்"

                                            [திருநாவுக்கரசர் - முதல் பாடல்]

    "மாசில்வீணையும் மாலை மதியமும்

    வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசுவண்டறைப் பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே"

                             [திருநாவுக்கரசர் - சுண்ணாம்புக்காளவாசலில் வீசப்பட்ட போது]

    "சொற்றுணை வேதியன் சோதிவானவன்

    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

    கற்றூணைப் பூட்டியோர் கடலிலே பாய்ச்சினும் 

    நற்றுணையாவது நமச்சிவாயவே"

                              [திருநாவுக்கரசர்- கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட போது]

    "தலைகொள் நஞ்சமுதாக விளையுமே

    தழல்கொள் நீறுதடாகமது ஆகுமே

    கொலைசெய் யானை குனிந்து பண்யுமே

    கோளரா வின்கொடு விடம் தீருமே"

                            [திருநாவுக்கரசர் - பல்லவ மன்னனால் அடைந்த துன்பங்கள்]


    "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

    மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டா:

    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

    பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்

    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

    அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

    தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்

    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

                                [திருநாவுக்கரசர் - அகத்துறைப் பாடல்]


    "பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! 

    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

    வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

    அத்தாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே"

                                                        [சுந்தரர் - முதல் பாடல்]

    

    "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

    மின்னார் சென்சட மேல்மிளிர் கொன்றை அணிந்தவனே

    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே"

                                                   [சுந்தரர்]


    "பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

    ஊனுடை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உவப்பிலா ஆனந்தமாய

    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே

    யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்கெழுந்த ருளுவது இனியே"

                                                        [மாணிக்கவாசகர்]

    "தேனுக்குள் இன்பம் சிவப்போ? கறுப்போ?

    வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

    தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

    ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"

                                                        [திருமூலர்]

    "ஒன்றே குலமே ஒருவனே தேவன்"

    "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

    "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

    "நன்றே நினைமின் நமனில்லை"

    "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"

                                                        [திருமூலர்]

    "எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

    அக்கோலத்து அவ்வுருவே யாம்"

    "அறிவானும் தானே: அறிவிப்பான் தானே:

    அறிவாய் அறிகின்றான் தானே; விரிசுடர்பார் ஆகாயம்

    அப்பொருளுந் தானே அவன்"

                                                         [காரைக்கால் அம்மையார்]

    "வையந் தகளியா வார்கடலே நெய்யாக

    வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

    சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை

    இடராழி நீங்குகவே என்று" 

                                                    [பொய்கையாழ்வார்]

    "இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்

    பெருந்தமிழில் நல்வேன் பெரிது"

    "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

    இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

    ஞானத் தமிழ் புரிந்த நான்"

                                                   [பூதத்தாழ்வார்]

    "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

    அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்

    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

    என்னாழி வண்ணன்பால் இன்று"

                                                [பேயாழ்வார்]

    "மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி

    ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறு தொட்டில்

    பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

    மாணிக் குறளனே! தாலேலோ!

    வையமளந்தானே! தாலேலோ!

                                            [பெரியாழ்வார்]

    "கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

    திருப்பவள செவ்வாய்தான் தித்திருக்குமோ

    மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்

    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே"

                                            [ஆண்டாள்]


 







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...