இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 நவம்பர், 2020

சங்கப்பாடல் வரிகள்: பத்துப்பாட்டு

 திருமுருகாற்றுப்படை:

    "இழுமென் இழிதரும் அருவிப்

    பழமுதிர் சோலை மலைக்கிழ வோனே"

    "பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,

    சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்"
    "சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,
    நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,
    செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்,
    நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப,

    இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே"
    "நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய

    உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
    பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக"


பெருநராற்றுப்படை:

    "கொல்லை உழுகொழு ஏய்ப்ப, பல்லே

    எல்லையும் இரவும் ஊந்தின்று மழுங்கி"

    "ஆறலைக் கள்வர் படைவிட அருளின்

    மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை"

    "வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
    சீருடை நன் மொழி நீரொடு சிதறி"
 
 "வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி"
    

சிறுபாணாற்றுப்படை:

    "வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
    எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
    வரு புனல் வாயில் வஞ்சியும்"
    
    "தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
    மகிழ் நனை, மறுகின் மதுரையும்"
 
    "தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
    நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
    ஓடாப் பூட்கை உறந்தையும்"

    "குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,
    மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,
    இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்"
    
    "இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
    ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி"
    
             உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடி என விறலியின்

    


பெரும்பாணாற்றுப்படை:

    "வானம் ஊன்றிய மதலை போல

    ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி

    விண்பொர நிவந்த வேயா மாடத்து

    இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி"


  "பழுமரம் தேரும் பறவை போல,

    கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
    புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!"

   "மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
    மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
    ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
    மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்"
    

கூத்தராற்றுப்படை:

    "படுத்து வைத்தன்ன பாறை மருங்கில்

    எடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி"

முல்லைப்பாட்டு:

    "நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு

    நீடுநினைந்து ஆற்றியும் ஓடுவளை திருத்தியும்"

    "இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்

    அஞ்செவி நிறைய ஆலின"

    "ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை

        முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து"

 நெடுநல் வாடை
    
    "    மா மேயல் மறப்ப, மந்தி கூர,
    பறவை படிவன வீழ, கறவை

    கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
    குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்"
    
    "ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,

    படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,
    முடலை யாக்கை, முழு வலி மாக்கள்"


"நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,

தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து"


    "வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
    முன்னோன் முறைமுறை காட்ட,"

குறிஞ்சிப்பாட்டு:

    "விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை

    நின்னொடு உண்டலும் புரைவது"

    "அறம்புணை ஆகத்தேற்றி பிறங்கு மலை

    மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது"

    "நேர்இறை முன்கை பற்றி நுமர்தர

      நாடுஅறி நன்மணம் அயர்கம்; சிலநாள்

    கலங்கல் ஓம்புமின் இஅல்ங்கு இழையீர்"

மதுரக்காஞ்சி:

    "திரையிடு மணலினும் பலரே உரைசெல

    மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே"

   "வானம் நீங்கிய நீல்நிற விசும்பின்

    மின்னு நிமிர்ந்தனையர் ஆகி"

பட்டினப்பாலை:    

    "தமவும் பிறவும் ஒப்ப நாடி,
    கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது,

    பல் பண்டம் பகர்ந்து வீசும்"
   
    "முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
    வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
    வாரேன்; வாழிய, நெஞ்சே!"




பத்துப்பாட்டு நூல்களின் தொடக்க வரிகள்:

திருமுருகாற்றுப்படை:

    உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
    பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

பொருநராற்றுப்படை:
    அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
    சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது,
    வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

சிறுபாணாற்றுப்படை:   
    மணி மலை ப் பணைத் தோள் மா நில மடந்தை
    அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
    செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,

பெரும்பாணாற்றுப்படை:
    அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
    பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
    காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,

முல்லைப்பாட்டு:
    நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
    வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
    நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
    பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,

மதுரைக்காஞ்சி:
    ஓங்குதிரை வியன் பரப்பின்
    ஒலி முந்நீர் வரம்பு ஆக,
    தேன் தூங்கும் உயர் சிமைய
    மலை நாறிய வியல் ஞாலத்து,

நெடுநல்வாடை:
    வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,
    பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
    ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
    ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,

குறிஞ்சிப்பாட்டு
    அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
    ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
    விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
    அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,

பட்டினப்பாலை
    வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
    திசை திரிந்து தெற்கு ஏகினும்,
    தற் பாடிய தளி உணவின்
    புள் தேம்பப் புயல் மாறி,
    வான் பொய்ப்பினும், தான் பொய்யா,


    மலைத் தலைய கடல் காவிரி
    புனல் பரந்து பொன் கொழிக்கும்

மலைபடுகடாம்: 
    திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
    விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து,


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...