- தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
- வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது? கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி
- வீரமாமுனிவருக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் அளித்த பெயர் யாது? தைரியநாதன் [இதைத் தமிழ்ப்படுத்தியே வீரமாமுனிவர் என மாற்றினார்]
- தேம்பாவணி எந்த சமயக் காப்பியம்? கிறித்தவம்
- தேம்பாவணியின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- தேம்பாவணியின் பாவகை? விருத்தப்பா
- தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை? 3615
- தேம்பாவணியின் பெயர் காரணம் யாது? தேம்பா+ அணி - வாடாத மாலை, தேம்+பா+அணி - தேன் ஒத்த பாக்களால் ஆன நூல்
- தேம்பாவணியின் காண்டங்கள் எத்தனை? 3
- தேம்பாவணியின் படலங்கள் எத்தனை? ஒவ்வொரு காண்டத்திற்கும் 12 வீதம் 36 படலங்கள்
- தேம்பாவணியின் காப்பியத் தலைவன் யார்? வளன் [சூசை]
- தேம்பாவணியை புறநிலைக் காப்பியம் என்றவர் யார்? வீரமாமுனிவர்
- கம்பராமாயணத்தில் பாடப்படாத பொருள் யாது? இன்பம்
- இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்? ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை
- இரட்சணிய யாத்திரிக பாடல்கள் எண்ணிக்கை? 3766
- இரட்சணிய யாத்திரிக பாக்கள் யாவை? கலிப்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வஞ்சிப்பா
- இரட்சணிய யாத்திரிகம் இயற்றி முடிக்க ஆன காலம்? 14 வாரம்
- இரட்சணிய யாத்திரிகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு? 1891
- இரட்சணிய யாத்திரகத்தின் எதன் தழுவல் நூல்? ஜான் பன்யன் எழுதிய 'தி பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்' என்பதன் தழுவல்
- இரட்சணிய யாத்திரிகத்தின் தலைவன், தலைவி யார்? கிறித்தவன், ஆன்மா
- இரட்சணிய யாத்திரிகம் நாயகன் நாயகி பாவத்தில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
- இயேசு காவியத்தின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
- இயேசு காவியத்தின் காலம் யாது? 1981
- இயேசு காவியம் எத்தனை பாகம் கொண்டது? 5
- இயேசு காவிய தலைப்புகள் எத்தனை? 149
- சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்? உமறுபுலவர்
- உமறுபுலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
- சீறாப்புராணத்தின் காலம் யாது? 17 ஆம் நூற்றாண்டு
- சீறாப்புராணத்தின் பா யாது? விருத்தப்பா
- சீறாப்புராண படலங்கள் யாவை? 92
- சீறாப்புராண பாடல்கள் எத்தனை? 5027
- சீறாப்புராண காண்டங்கள் எத்தனை? 3 [விலாதத்துக் காண்டம், நுபுல்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம்]
- சீறாப் புராண கதைத்தலைவன் யார்? நபிகள் நாயகம்
- முகியித்தீன் புராணத்தின் வேறு பெயர் யாது? குத்பு நாயகம்
- முகியித்தீன் புராண ஆசிரியர் யார்? சேகுனாப் புலவர்
- முகியித்தீன் புராணத்தின் காலம் யாது? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
- முகியித்தீன் புராண காண்டங்கள் எத்தனை? 2
- முகியித்தீன் புராண பாடல்களின் எண்ணிக்கை? 1343
- மருமக்கள் வழி மான்மியத்தின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- மருமக்கள் வழி மான்மியத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
- பாண்டியன் பரிசை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
- பாண்டியன் பரிசு வெளியான ஆண்டு எது? கி.பி. 1943
- பூங்கொடியின் ஆசிரியர் யார்? முடியரசன்
- பாரதசக்தி மகாகாவியத்தின் ஆசிரியர் யார்? சுத்தானந்த பாரதியார்
- பாரதசக்தி மகாகாவியத்தின் காலம் யாது? கி.பி. 20 ஆம் நூற்றாண்டு
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 23 நவம்பர், 2020
சமயக்காப்பியங்கள் - 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக