காப்பியங்களில் முக்கிய பாத்திரங்கள்
சிலப்பதிகாரம்:
தலைவி - கண்ணகி
தலைவன் - கோவலன்
கண்ணகி தந்தை - மாநாய்கன்
கண்ணகி தோழி - தேவந்தி
தேவந்தி கணவன் - பாசண்டச் சாத்தன்
கோவலன் தந்தை - மாசாத்துவன்
கோவலன் நண்பன் - மாடலமறையோன்
மாதவியின் தாய் - சித்திராபதி
மாதவி தோழி - வயந்தமாலை
மாதவி மகள் - மணிமேகலை
கவுந்தியடிகள் - பெண் சமணத்துறவி
அறவண அடிகள் - ஆண் பௌத்தத் துறவி
மாதரி- கவுந்தியடிகள் கண்ணகியை அடைக்கலப்படுத்தியவர்
ஆயர்குலப் பெண்
ஐயை - மாதரியின் மகள்
கௌசிகாமணி - மாதவியின் நலம் விரும்பி - மாதவி 2-ஆம் கடிதம்
மதுராபதி - மதுரை காவல் தெய்வம்
செங்குட்டுவன் - கண்ணகிக்குக் கோயில் கட்டியவன்
வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி
கண்ணகி கோவிலுக்கு வந்த இலங்கை மன்னன் - கயவாகு
தேவந்தி - கண்ணகி கோவிலின் முதல் பூசாரி
செங்குட்டுவன் அமைச்சர்கள் - அழும்பில்வேள், வில்லவன் கோதை
வடநாட்டுப் போரில் செங்குட்டுவனுக்கு உதவியோர் - சதகர்ணிகள்
மணிமேகலை:
கதைத் தலைவி - மணிமேகலை
மணிமேகலை தாய் - மாதவி
மணிமேகலை தோழி - சுதமதி
சுதமதியைக் கவர்ந்து கைவிட்டவன் - மாருதவேகன்
பௌத்த துறவி - அறவண அடிகள்
உணவிட்டு பத்தினி - ஆதிரை
ஆதிரையின் கணவர் - சாதுவன்
யானைத்தீ நோய் கொண்டவள் - காயசண்டிகை - வித்யாதர மங்கை
காயசண்டிகைக்கு சாபமிட்டவர் - விருச்சிக முனிவர்
மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் சென்றவர்
- மணிமேகலா தெய்வம்
முதலில் அமுதசுரபியை வைத்திருந்தவன் - ஆபுத்திரன்
ஆபுத்திரனுக்கு அமுத சுரபி கொடுத்தது - சிந்தாதேவி
அமுதசுரபி பற்றி கண்ணகிக்குச் சொன்னது - தீவதிலகை
ககந்தனின் மகன் சதுக்கப்பூதத்தால் கொல்லப்படக் காரணமானவள் - மருதி
கந்திற்பாவையிடம் முறையிட்டுத் தன் கற்பை நிறுவியவள் - விசாகை
சீவகசிந்தாமணி:
கதைத்தலைவன் - சீவகன்
சீவகனின் தந்தை - சச்சந்தன்
சீவகனின் தாய் - விசையை
சீவகனின் வளர்ப்புத்தந்தை - கந்துக்கடன்
சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
சீவகனின் நண்பன் - பதுமுகன், புத்திசேனன்
சீவகனின் மனைவியர்:
காந்தருவதத்தை - யாழிசையால் வென்று திருமணம் செய்தான்
குணமாலை - மதயானையை அடக்கித் திருமணம் செய்தான்
பதுமையார் - பாம்பின் விடம் நீக்கித் திருமணம் செய்தான்
கேமசரியார் - காதல் கொண்டு திருமணம் செய்தான்
கனகமாலை - வில்வித்தைக் கற்பித்துத் திருமணம் செய்தான்
விமலை - பந்தாடிய விமலையைத் திருமணம் செய்தான்
சுரமஞ்சரி - காதல்கொண்டு கிழவன் வேடம் பூண்டு திருமணம் செய்தான்
இலக்கணை - மாமன் மகளை திருமணம் செய்தான்
சீவகன் நண்பன் பதுமுகனுக்கு மணம் முடித்தவன் - கோவிந்தை
குண்டலகேசி:
தவைலி - பத்திரை
பத்திரை கணவன் - காளன்
பத்திரை தந்தை - இராசகிருக நாட்டு மன்னன்
சாரிபுத்தர் - குண்டலகேசியை வாதில் வென்று பௌத்தத்திற்கு மாற்றியவர்