1.புணர்ச்சியின் மற்றோரு பெயர் யாது ? சந்தி
2.செய்யுள் விகாரங்கள் - 9
3. தொல்காப்பிய எழுத்ததிகார இயல்கள் எத்தனை ? 9
4. நன்னூல் எழுத்ததிகார இயல்கள் எத்தனை ? 5
5. நன்னூலார் எழுத்து இலக்கணத்தை எத்தனை வகைப்படுத்துகிறார் ? 12
6. நன்னூல் எழுத்தியல் எத்தனை எழுத்திலக்கண வகைமைகளை உள்ளடக்கியது? 10
7. நன்னூலில் புணர்ச்சி எத்தனை இயல்களில் விவரிக்கப்டுகின்றது ? 3
8. உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை ? 12
9. மெய் எழுத்துகளின் எண்ணிக்கை - 18
10. முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
11. சார்பெழுத்து வகைகள் - 10
12. அளப்படைகள் எத்தனை ? 2 [ உயிரளபெடை, ஒற்றளபெடை]
13. குறுக்கங்கள் எத்தனை ? 6
14. உயிர்மெய் எண்களின் எண்ணிக்கை ? 216
15. ஆய்தங்களின் எண்ணிக்கை - 8
16. உயிரௌபெடை எண்ணிக்கை -21
17. ஒற்றேளப்படை எண்ணிக்கை -42
18. குற்றியலிகரம் எண்ணிக்கை -37
19. குற்றியலுகரம் எண்ணிக்கை -36
20. ஐகாரக்குறுக்கம் எண்ணிக்கை -3
21. ஒவ்கரக்குருக்கம் எண்ணிக்கை -1
22. மகரக்குறுக்கம் எண்ணிக்கை -3
23. ஆய்தக்குறுக்கம் எண்ணிக்கை -2
24. சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை -369
25. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் -3
26. தொல்காப்பியர் சார்பெழுத்துக்களை எவ்வாறு அழைக்கிறார்? எழுத்தோரன்ன
27. சுட்டு எழுத்துக்கள் -3 {ஆ ,இ ,உ }
28. முதலில் வரும் வினா எழுத்துக்கள் -2 {எ ,யா }
29. இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் -2{ஆ ,ஓ }
30. முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துக்கள் - ஏ
31. அண்மைச்சுட்டு? இ
32. சேய்மைச்சுட்டு ? அ
33. இடைமைச்சுட்டு ? உ
34. வினாச்சுட்டு ? எ
35. மெய்யெழுத்து வகைகள் ? 3
36. வல்லினத்தின் வேறு பெயர்? வன்கணம்
37. மெல்லினத்தின் வேறு பெயர்? மென்கணம்
38. இடையினத்தின் வேறு பெயர்? இடைக்கணம்
39. ஐகாரத்தின் இன எழுத்து? இ
40. ஒளகாரத்தின் இன எழுத்து? உ
41. தொல்காப்பியர் எழுத்தின் இயல்பை எத்தனை இயல்களில் குறிப்பிடுகிறார்? 2 {நூல்மரபு, மொழிமரபு }
42. உயிரௌபெடையின் மாத்திரை -3
43. நெடிலின் மாத்திரை -2
44. குறிலின் மாத்திரை -1
45. ஒற்றின் மாத்திரை -1
46. ஐகார குறுக்கத்தின் மாத்திரை -1
47. ஓளகாரக்குறுக்கத்தின் மாத்திரை -1
48. ஒற்றெழுத்தின் மாத்திரை -1/2
49. குற்றியலிகரத்தின் மாத்திரை -1/2
50. குற்றியலுகர மாத்திரை -1/2
51. ஆய்த எழுத்தின் மாத்திரை -1/2
52. ஆய்த குறுக்க மாத்திரை -1/4
53. மகரக்குறுக்க மாத்திரை -1/4
54. குற்றியலுகர எண்ணிக்கை -36
55. குறில் உயிர் மெய் -90
56. நெடில் உயிர் மெய் -126
57. முதலில் வரும் வினா எழுத்துக்கள் ? { எ , யா }
58. இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் ? {ஆ ,ஒ }
59. முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து ? ஏ
60. நாற்கணம் - {உயிரக்கணம்,வன்கணம் ,மென்கணம் ,இடைக்கணம்}
61. எழுத்தை உருவாக்கும் காற்று ? உதாணன்
62. எழுத்தை உருவாக்கும் காற்று எங்கிருந்து உருவாவதாக தொல்காப்பியர் கூறுகிறார் ? உந்தி
63. தொண்டையில் காற்று பொருந்தி பிறப்பவை ? உயிர்
64. எழுத்து பிறக்க தொழில்படும் உறுப்புகள் ? உதடு,நாக்கு,பல்,அண்ணம்
65. மூக்கில் காற்று பொருந்த பிறக்கும் எழுத்து ? மெல்லினஎழுத்து
66. மார்பில் பிறக்கும் எழுத்து? வல்லினம்
67. வாயைத் திறத்தலால் {அங்காத்தலால்} பிறக்கும் எழுத்து ? அ,ஆ
68. இதழ் குவிய பிறப்பவை ? உ,ஊ,ஒ,ஓ,ஒள
69. மேல்வாய்,பல்,நாக்கு,ஓரம் பொருந்த பிறப்பவை? இ,ஈ,எ,ஏ,
70. பல்லும் நாக்கும் பொருந்த பிறக்கும் எழுத்துக்கள் ? இ,ஈ,எ,ஏ,ஐ,த,ந
71. தனி எழுத்து வடிவம் உள்ள சார்பெழுத்துக்கள்? உயிர்மெய்,ஆய்தம்
72. ஆய்த எழுத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ? அஃகேனம்,தனிநிலை,முப்பாற்புள்ளி,முப்புள்ளி
73. ஐ அளபெடுக்கையில் அதனுடன் வரும் குறில் ? உ
74. உயிர் அளபெடையின் வகைகள் ? 4
75. 'மகடூஉ' எவ்வகை அளபெடை ? இயற்கை அளபெடை
76. பெயரை வினையாக மாற்ற பயன்படும் அளபெடை ? சொல்லிசை அளபெடை
77. அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள் ? 10
78. ஒற்று சொல்லின் எந்தெந்த இடத்தில் அளபெடுக்கும் ? இடை,கடை
79. குற்றியலுகரம் சொல்லின் எங்கு வரும் ? இறுதி
80. குற்றியலுகர வகைகள் ? 6
81. குற்றியலுகரமாக மாறும் எழுத்துக்கள் ? 6 {கு,சு,டு,து,பு,று }
82. குற்றியலுகர எண்ணிக்கை ? 36
83. தனி நெடிலை அடுத்து உகரம் வருவது ? நெடில் தொடர் குற்றியலுகரம்
84. 'சாய்வு` இது எவ்வகை குற்றியலுகரம் ? இடைத் தொடர் குற்றியலுகரம்
85. குற்றியலிகர வகைகள் ? 2{தனிமொழி குற்றியலிகரம்,புணர்மொழி குற்றியலிகரம் }
86. குற்றியலிகர எண்ணிக்கை ? 37
87. தனிமொழி குற்றியலிகரத்தில் குறுகி ஒலிக்கும் அசைச் சொல் ?மியா
88. ஐகாரக்குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடத்தில் வரும்? முதல்,இடை,இறுதி
89. ஒளகாரக்குறுக்கம் சொல்லின் எந்த இடத்தில் வரும் ? முதல்
90. இறுதியில் வருமொழி முதலில் தகர உயிர்மெய் வந்தால் நிலைமொழி இறுதியில் உள்ள ல்,ள் எவ்வாறு திரியும்? ஆய்தம்
91. எந்த ஒற்றுகளைத் தொடர்ந்து வரும் மகர ஒற்று குறுகி ஒலிக்கும் ? ன,ண
92. அளபெடுத்து வரும் சார்பெழுத்துக்கள் ? 2 { உயிரௌபெடை ,
ஒற்றெளபெடை }
93. சார்பெழுத்துக் குறுக்கங்கள் ? 6 {குற்றியலுகரம்,குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கும்,ஒளகாரக்குறுக்கம்,மகர குறுக்கும்,ஆய்தக்குறுக்கம்}
94. பதங்களின் வகைகள்? 2 - பகுபதம், பகாப்பதம்
95. எழுத்துக்களின் அடிப்படையில் பதங்களைத் தொல்காப்பியர் எவ்வாறு பகுக்கிறார்? 3 {ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்மொழி}
96. . எழுத்துக்களின் அடிப்படையில் பதங்களை நன்னூலார் எவ்வாறு பகுக்கிறார்? 2{ஓரெழுத்து ஒருமொழி, தொடர்மொழி}
97. ஓரெழுத்து ஒருமொழியாக இயங்காத உயிர் நெடில் எது? ஒள
98. பகுபதத்திற்கான எழுத்துக்கள்- 2 முதல் 9
99. பகாப்பதத்திற்கான எழுத்துக்கள் - 2 முதல் 7
100. பகாபதமாக வருபவை - பெயர், வினை, இடை, உரி
101. இடம், காலம், சினை, குணம், தொழில் காரணமாக வரும் பெயர்கள் - பகுபதம்
102. பகுபதமாக வரும் வினை - காலம் காட்டும் வினை
103. பகுபத உறுப்புக்களின் எண்ணிக்கை- 6
104. விகுதிகள் எத்தனை வகைப்படும்? 9
105. ஆண்பால் விகுதிகள் - அன், ஆன்
106. பெண்பால் விகுதிகள் - அள், ஆள்
107. பலர்பால் படர்க்கை விகுதிகள்? அர்,ஆர்,ப,மார்
108. பலவின் பால் படர்க்கை விகுதிகள்? அ,ஆ
109. வியங்கோள் விகுதிகள்? அ, இய, இயர்
110. பகுபத உறுப்புக்களில் காலம் காட்டுபவை - இடைநிலை
111. இறந்த கால இடை நிலைகள் - த், ட், ற், இன்
112. நிகழ்கால இடை நிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
113. எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
114. தமிழில் மட்டும் சிறப்பாக உள்ள உயிர் எழுத்துக்கள்? 2 {எ, ஒ}
115. தமிழில் மட்டும் சிறப்பாக உள்ள சார்பெழுத்துக்கள் எத்தனை? 8
116. பொருள் அடிப்படையிலான புணர்ச்சிகள் -2 {வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழி}
117. வேற்றுமை உறுப்புகள் - 6
118. தொகைநிலைத் தொடர்கள் - 5
119. தொகாநிலைத் தொடர்கள் - 9
120. விகாரப்புணர்ச்சி வகைகள் - 3 {தோன்றல், திரிதல், கெடுதல்}