- முதல் ஆங்கில நாவல் எந்த ஆண்டு வெளியானது? 1740
- இந்தியாவின் முதல் புதினம் எது? துர்க்கேஷ நந்தினி
- இந்தியாவில் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1865
- மலையாள முதல் புதினம்வெளியான ஆண்டு யாது? 1887
- தமிழின் முதல் புதினம் யாது? பிரதாப முதலியார் சரித்திரம்
- தமிழின் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1879
- தமிழின் முதல் புதினத்தை எழுதியவர் யார்? மாயூரம் வேதநாயகம்
- கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர் யார்? பி.ஆர். ராஜம் ஐயர்
- கமலாம்பாள் சரித்திரம் வெளியான ஆண்டு? 1896
- கமலாம்பாள் சரித்திரம் எந்த இதழில் தொடராக வெளிவந்தது? விவேக சிந்தாமணி
- தீனதயாளு புதினத்தின் ஆசிரியர் யார்? நடேச சாஸ்திரி
- முத்து மீனாட்சியின் ஆசிரியர் யார்? அ. மாதவையா
- தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் யாது? மோகனாங்கி
- தமிழின் முதல் வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? தி.த.சரவணமுத்துப் பிள்ளை
- நாவல் ராணி யார்? கோதைநாயகி அம்மாள்
- சுகுணசுந்தரியின் ஆசிரியர் யார்? மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சுகுண சுந்தரி வெளியான ஆண்டு யாது? 1887
- மோகனாங்கி வெளியான ஆண்டு யாது?1895
- தமிழின் முதல் துப்பறியும் புதினத்தை எழுதியவர் யார்? எம்.எஸ்.நடேச சாஸ்திரி
- தானவன் எந்த ஆண்டு வெளியானது?1894
- கமலாக்ஷி சரித்திரத்தை இயற்றியவர் யார்? பொன்னுசாமி பிள்ளை
- தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய புதினங்கள் யாவை? கமலாக்ஷி, ஞானாம்பிகை, சிவஞானம், விஜயசுந்தரம், ஞானசம்பந்தம், ஞானப்பிரகாசம்
- மாதவையா எழுதிய புதினங்கள் யாவை? பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி
- எஸ்.ஏ. இராமேஸ்வரி எழுதிய புதினம் யாது?
- மங்கம்மாள் புதினத்தை எழுதியவர் யார்?
- முதல் இரு வரலாற்றுப்புதினங்களும் யாருடைய வரலாற்றைப் பேசுகிறது? ராணி மங்கம்மாள்
- அயல் மாநிலக்கதைக்களத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் புதினம் யாது? அதை எழுதியவர் யார்?
- மொழிபெயர்ப்புப் புதினங்களை அதிகமாக மொழிபெயர்த்தவர்கள் யாவர்? ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
- மறைமலை அடிகள் எழுதிய தழுவல் நாவல் யாது?
- மதிவானனை எழுதியவர் யார்?
- ந.பலராமையர் எழுதிய புதினம் யாது?
- மீனாட்சி சுந்தரம்மாள் எழுதிய புதினங்கள் யாவை?
- 26 ஆண்டுகளில் 29 முறைப் பதிப்பிக்கப்பட்ட ராஜாம்பாளை இயற்றியவர் யார்?
- புதுமைப்பித்தனின் எழுத்துலக வாரிசு யார்? ஜெயகாந்தன்
- ரிஷிமூலம் எழுதியவர் யார்? ஜெயகாந்தன்
- சிறுகதையாக எழுதப்பட்டுப் புதினமாக வளர்ந்த ஜெயக்காந்தனின் புதினம் யாது? சிலநேரங்களில் சில மனிதர்கள்
- வாழ்க்கை அழைக்கிறது யாருடைய புதினம்? ஜெயகாந்தனின் முதல் புதினம்
- தி. ஜானகி ராமனின் புதினங்கள் யாவை? அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்
- திரைப்படமான தி.ஜாவின் புதினம் யாது? மோகமுள்
- இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை? குறிஞ்சித்தேன், கரிப்புமணிகள், அலைவாய்கரையினிலே, சேற்றில் மனிதர்கள். கூட்டுக்குஞ்சுகள்
- இராஜம் கிருஷ்ணன் பிறந்த ஆண்டு யாது? 1925
- மலைவாழ் மக்களின் சிக்கலைப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?குறிஞ்சித்தேன்
- குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?கூட்டுக்குஞ்சுகள்
- கடற்கரைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்துப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது? அலைவாய் கரையினிலே, கரிப்புமணிகள்
- தோப்பில் முதமது மீரான் எங்கு பிறந்தார்? தேங்காய்ப்பட்டணம்
- தோப்பில் முதமது மீரானின் புதினங்கள் யாவை? ஒருகடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வுநாற்காலி
- தோப்பில் முதமது மீரான் எந்த புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? சாய்வு நாற்காலி
- கல்கியின் இயற்பெயர் யாது? இரா. கிருஷ்ணமூர்த்தி
- கல்கியின் முதல் புதினம் யாது? விமலா
- கல்கியின் தொடக்ககால புனைப்பெயர் யாது? தேனீ
- கல்கியின் முதல் புதினம் எந்த இதழில் தொடராக வந்தது?
- கல்கியின் முன்னோடிகள் யாவர்?
- கல்கியின் புதினங்கள் யாவை?
- தமிழகத்தின் வால்டர் ஸ்காட் யார்? கல்கி
- கல்கி எந்தப் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? அலையோசை
- நிறைவு பெறாத கல்கியின் புதினம் யாது?
- அகிலனின் இயற்பெயர் யாது? அகிலாண்டம்
- அகிலனின் புதினங்கள் யாவை? பெண், வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர், புதுவெள்ளம், வாழ்வு எங்கே?, பால்மரக்காட்டினிலே, சித்திரப்பாவை, பாவைவிளக்கு, துணைவி, நெஞ்சின் அலைகள், சிநேகிதி, எரிமலை, சக்திவேல், நிலவினிலே, இன்பநினைவு
- அகிலனின் வரலாற்றுப் புதினங்கள் யாவை? வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர்
- சின்னச்சாம்பு யாருடைய படைப்பு? தேவன்
- கோதைத்தீவு யாருடைய புதினம்? தேவன்
- ஆரணி குப்புசாமியின் இரத்தினபுரி ரகசியம் எத்தனை பாகங்களைக் கொண்டது? 9
- முதல் முழு தேசிய இயக்க நாவல் எது? தேசபக்தன் கந்தன்
- முதல் முழு தேசிய இயக்க நாவலை எழுதியவர் யார்? கே.எஸ்.வேங்கடரமணி
- முழுமுதல் கிராமிய நாவல் எது? மண்ணாசை [சங்கரராமின் புதினம்]
- மண்மணம் வீசும் நாவல் முன்னோடி யார்? சங்கரராம்
- துப்பறியும் சாம்புவைப் படைத்தவர் யார்?
- தனிமனித வரலாற்று நாவல் : fiction biography வகைப் புதின முன்னோடி யார்? எம்.எஸ்.கல்யாண சுந்தரம்
- முதல் தனிமனித வரலாற்றுப் புதினம் யாது? இருபது வருஷங்கள்
- அண்ணாவின் புதினங்கள் யாவை?
- தில்லானாமோகனாம்பாளின் ஆசிரியர் யார்?
- மு.வரதராசனின் முதல் புதினம் யாது? செந்தாமரை
- மு.வ.வின் புதினங்கள் யாவை?செந்தாமரை, கள்ளோ காவியமோ, அந்த நாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், அகல்விளக்கு, கயமை, பெற்றமனம், நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை
- விந்தனின் இயற்பெயர் யாது? கோவிந்தன்
- விந்தனின் புதினங்கள் யாவை? பாலும் பாவையும், சுயவரம், மனிதன் மாறவில்லை, பசிகோவிந்தம், மிஸ்டர் விக்கிரமாதித்தன், ஓ மனிதா
- பாட்டாளி புனைகதை ஆசிரிய முன்னோடி யார்?
- கூட்டுறவை மையமாகக் கொண்ட முதல் புதினம் யாது? உழைக்கும் கரங்கள்
- சாண்டில்யன் எழுதிய முதல் வரலாற்றுப் புதினம் யாது? ஜீவபூமி
- சத்யாகிரகம் பற்றிய முதல் தமிழ் நாவல் யாது? பலாத்காரம் [சாண்டியன்]
- பொய்த்தேவின் ஆசிரியர் யார்? க.நா. சுப்ரமணியம்
- கோ.வி. மணிசேகரனின் நூறாவது புதினம் யாது? ஒரு தீபம் ஐந்து திரிகள்
- இந்திரா பார்த்தசாரதியின் முதல் புதினம் யாது? காலவெள்ளம்
- இந்திரா பார்த்தசாரதியின் புதினங்கள் யாவை?காலவெள்ளம், தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புணல்
- இந்திரா பார்த்தசாரதியின் சாகித்ய அகாதெமி விருது வென்ற புதினம் யாது? குருதிப்புணல்
- சுந்தர ராமசாமியின் புதினங்கள் யாவை?ஜே.ஜே. சிலக்குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை
- அசோகமித்திரனின் புதினங்கள் யாவை?கரைந்த நிழல்கள், தண்ணீர், 18ஆவது அட்சக்கோடு, ஆகாயத்தாமரை, இன்று
- திரைப்படத் துறை குறித்த அசோகமித்திரனின் புதினம் யாது? கரைந்த நிழல்கள்
- புனலும் மணலும் யாருடைய படைப்பு? அ. மாதவன்
- ஜெயகாந்தனின் முதல் புதினம் யாது? வாழ்க்கை அழைக்கிறது
- ஜெயகாந்தனின் புதினங்கள் யாவை? வாழ்க்கை அழைக்கிறது, பாரிஸுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- தாகம் யாருடைய புதினம்? கு. சின்னப்பபாரதி
- சாகித்ய அகாதெமி விருது வென்ற டி. செல்வராஜின் புதினம் யாது? தோல்
- டி. செல்வராஜின் புதினங்கள் யாவை? மலரும் சருகும், தேநீர், தோல்
- சேரி மக்கள் பற்றிய முதல் புதினம் யாது? மலரும் சருகும்
- நீலபத்மநாபனின் புதினங்கள் யாவை? பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம், இலையுதிர் காலம்
- கீறல்கள் யாருடைய புதினம்? ஐசக் அருமைநாதன்
- சாயாவனம் யாரால் இயற்றப்பட்டது? சா. கந்தசாமி
- காகித மலர்கள் யாருடைய புதினம்?ஆதவன்
- பாலகுமரனின் புதினங்கள் யாவை? விழிமயக்கம், தென்னம்பாளை, ஆனந்தவயல், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள், கொம்புத்தேன், மெர்க்குரிப்பூக்கள், நிலாக்கால மேகம், தாயுமானவர்
- தலைகீழ் விகிதங்கள் யாருடைய முதல் புதினம்? நாஞ்சில்நாடன்
- புத்தம் வீடு யாருடைய படைப்பு? ஹெப்சிபா ஜேசுதாசன்
- தமிழில் வரலாற்றுப் புதினத்தின் தந்தை யார்? கல்கி
- சூடாமணியின் புதினங்கள் யாவை? புன்னகைப்பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா
- யுனெஸ்கோ உலக இலக்கியப்படைப்புக்காக ஏற்ற முதல் நூல் எது? ஆகாசவீடுகள்
- வாசந்தியின் புதினங்கள் யாவை? ஆகாசவீடுகள், மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள், நான் புத்தன் இல்லை, நிஜங்கள், அந்தி நேரத்து உதயங்கள், மூங்கில் பூக்கள்
- கீதமடி நீ எனக்கு யாருடைய புதினம்? இந்துமதி
- நெசவாளர்கள் பற்றிய தொ.மு.சி. ரகுநாதனின் புதினம் எது? பஞ்சும் பசியும்
- தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குறித்த டி.செல்வராஜின் புதினம் எது? தேனீர்
- கம்யூனிசம் பேசும் ஐசக் அருமைராஜனின் புதினம் யாது? கீறல்கள்
- சௌராட்டிரர்கள் பற்றிய எம்.வி.வெங்கட்ராமனின் புதினம் யாது? வேள்வித்தீ
- நனவோடை உத்தியிலான சி.சு.செல்லப்பாவின் புதினம் யாது? ஜீவனாம்சம்
- நடப்பியல் உத்தியைக்கையாண்ட முதல் புதினம் யாது? கமலாம்பாள் சரித்திரம்
- விடுதலை உணர்வைப் பேசும் முதல் தமிழ்ப் புதினம் யாது? காந்திமதி [பனையப்பச்செட்டியார்]
- கடித வடிவிலான முதல் புதினம் யாது? கோகிலாம்பாள் கடிதங்கள்
- முதல் பெண் புதின ஆசிரியர் யார்? கிருபா சத்தியநாதன்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 17 ஏப்ரல், 2021
புதின இலக்கிய வினாவங்கி
சனி, 10 ஏப்ரல், 2021
ஒப்பிலக்கியம்
- ஒப்பிலக்கியம் என்னும் பெயர் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? Comparative Literature
- comparative என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? சேக்ஸ்பியர் : ஹென்றி 4 என்ற நாடகத்தில் பயன்படுத்தினார்.
- Comparative Literature என்ற சொல்லாட்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்? மாத்யூ அர்னால்டு
- தமிழில் ஒப்பிலக்கியத்திற்கு வித்திட்டவர்கள் யாவர்? ஜி.யு.போப், எஸ்.கிருஷ்ணசாமி, சித்தாந்தா
- ஒப்பியல் கொள்கைகள் சார்ந்த முதல் நூலை எழுதியவர் யார்? மொழியியல் அறிஞர் தேவநேய பாவாணர்
- தேவநேய பாவாணர் எழுதிய ஒப்பியல் நூல் யாது? ஒப்பியல் மொழிநூல்
- ஒப்பிலக்கிய அறிமுகம் எழுதியவர் யார்? தமிழண்ணல்
- ஒப்பியல் நோக்கு எழுதியவர் யார்? வ.சுப. மாணிக்கம்
- கிரேக்க வீரயுகப்பாடல்களுடன் சங்கப்பாடல்களை ஒப்பிட்டு சங்க காலத்தை வீரயுகம் என்றவர் யார்? க. கைலாசபதி
- ஒப்பியல் இலக்கியத்தின் ஆசிரியர் யார்? க. கைலாசபதி
- வை.சச்சிதானந்தம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? The impact of western thought on Bharathi, Whitman and Bharathi - A Comparative Study, ஒப்பிலக்கியம் ஊர் அறிமுகம், ஒப்பிலக்கியம் என்றால் என்ன?
- கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? Shakespear and Ilango as Tragedians, The Problem of Evil in king Lear and Silappathikaaram
- ஒப்பிலக்கியக் கழகத்தை உருவாக்கியவர் யார்? ஜி.ஜான் சாமுவேல்
- ஜி.ஜான் சாமுவேல் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? திராவிட மொழிகளின் ஒப்பாய்வு ஓர் அறிமுகம், ஷெல்லியும் பாரதியும் ஒரு புதிய பார்வை, ஒப்பிலக்கியத் திறனாய்வு, திறனாய்வு சிந்தனைகள், ஒப்பாய்வுக் களங்கள், Studies in Comparative lit., Studies in Tamil Poetry
- க. கைலாசபதி எழுதிய நூல்கள் யாவை? அடியும் முடியும், இரு மகாகவிகள்
- ஜி. வான்மீகிநாதன் எழுதிய நூல் யாது? மாணிக்கவாசகரும் ரூமியும்
- தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நூல்? ஷெல்லியும் பாரதியும், கங்கையும் காவிரியும்
- க. நா. சுப்பிரமணியம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சிறந்த பத்து இந்திய நாவல்கள்
- கதிர் மகாதேவன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் தொன்மம்
- கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள்? எங்கு காணினும் சக்தி, தமிழில் ஒப்பியல் கோட்பாடுகள், இலக்கியத்தில் பழம் புதுமையும் புதுப்பழமையும், விடுதலைச்சிட்டும் புரட்சிக் குயிலும்
- அ.அ. மணவாளன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இலக்கிய ஒப்பாய்வுக் காப்பியங்கள், இராமகாதையும் இராமாணங்களும்
- சி. கனகசபாபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதி- பாரதிதாசன் கவிதை மதிப்பீடு
- மா. காத்தையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதிதாசன் வாணிதாசன் பாடல்கள் ஒப்பீடு
- பேரா.சி.மெய்கண்டான் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? புரட்சிக்கவியும் பில்ஹணீயமும் - ஓர் ஒப்பீடு
- சு. கோபிநாத் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தமிழ்க் காப்பியங்களில் அவலச்சுவை
- டாக்டர் அகத்தியலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே
- மு. அருணாச்சலம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கிழக்கு வெளுக்கிறது.
- ரீட்டா என். முத்து எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தேம்பாவணி - சீறாபுராணக் கதைகள் - ஓர் ஒப்பீடு
- பத்மா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? நாவுக்கரசு நம்மாழ்வார் - சமயநெறிகள் ஒப்பீடு
- பி. பரமேஸ்வரி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பராமாயணம், வில்லி பாரதத்தில் வரும் எதிர்நிலை நாயகர்கள் ஒப்பீடு
- சி. என். குமாரசாமி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? மாதவியும் கிளியோபாத்ராவும்
- சக்கர. இலக்குமிகாந்தன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இராபர்ட் பிராஸ்டும் கண்ணதாசனும்
- ச.வே.சுப்பிரமணியன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திரஜித்தும் இலக்குவனும்
- தண்டபாணி தேசிகர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வள்ளுவரும் கம்பரும்
- ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஒப்பிலக்கிய நூல்? காளத்தி வேடனும் கங்கை வேடனும்
- நாமக்கல் கவிஞர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பரும் வால்மீகியும்
- இராய. சொக்கலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பனும் சிவனும்
- எம். சோலையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதியும் மில்ட்டனும்
- சித்ரா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வால்ட்விட்மனும் கண்ணதாசனும்
- இராம. குருநாதன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்கப்பாட்டும் ஜப்பான்யக் கவிதையும்
- க. ரத்னம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இவர்கள் பார்வையில் அகலிகை
- ப. மருதநாயகம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கிழக்கும் மேற்கும், புதுப்பார்வைகளில் புறநானூறு
- ச.கு. கணபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வியாசரும் வில்லியும்
- பாலாம்பிகைதாசன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திய இலக்கிய இழை
- பாலா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதியும் கீட்சும்
- எ.சு. சதாசிவம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பெரியாரும் கவிஞரும் அண்ணாவும்
- இரா. அறவேந்தன் பதிப்பித்த ஒப்பிலக்கிய நூல்? உலகப்பார்வையில் தமிழ் இலக்கியம்
- ஜெயமோகன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கண்ணீரைப் பிந்தொடர்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...